search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Package"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
    • இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பணமும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்த துரித தொகுப்பை 10-ந் தேதி தொடங்கி வைத்த அதே நாளில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

    2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் டோக்கன் பெறாத 40லட்சம் பேர் 14-ந் தேதி ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டது

    இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கபட்டது
    • பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை கொண்ட பொங்கல் தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் தலைமையில் பொங்க தொகுப்பு வழங்கப்பட்ட நிகழ்வில் கிளைச் செயலாளர் முத்துவீர் பாலாஜி, வடிவேல், வீரமணி, தர்மராஜ், மதி, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்கள்.

    பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர். பின்னர் அமைதியாக பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக் கள் வாங்கிச்சென்றனர். விழாவில் ஒன்றிய நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






    • வீடு, வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
    • பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதன்படி இன்று முதல் வீடு, வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 1,183 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறும். இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

    அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அது குறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×