search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Rangasamy"

    • அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
    • சேதமடைந்த மின்கம்பி, மின்மாற்றிகளை உடனே சீரமைத்து மின் இணைப்பை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும். இந்த புயலுக்கு மியான்மர் நாடு மிக்ஜம் என்று பெயர் வைத்துள்ளது.

    இந்த புயல் தெற்கு ஆந்திர கடற்கரையில் நெல்லூருக்கும் –மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் கரையை கடக்கும் போது சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    கரையை கடக்கும் முன் தமிழகம் மற்றும் புதுவையில் கடுமையான மழை பெய்யும் என்றும் எச்சரிச்கை விடப்பட்டுள்ளது. புயல், மழை எச்சரிக்கை காரணமாக புதுவையில் அரசு, பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளது.

    புயலை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கனமழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 211 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவை வந்துள்ளனர். அதில் ஒரு குழு காரைக்காலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மற்றொரு குழுவினர் புதுவை கோரிமேட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று முதல் 3 நாள் பணியில் ஈடுபட உள்ளனர். அரசின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    பணியில் ஈடுபடக் கூடிய அரசுத் துறை ஊழியர்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    12 அரசு துறை கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், நேற்று இரவு முதல் புதுவையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. அதிக அளவில் காற்று வீசியது.இன்று அதிகாலை முதல் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

    புயலை எதிர்கொள்ள ஏற்கனவே தலைமை செயலர் தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அரசு துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் ரங்கசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து பேசியதாவது:-

    மோட்டார் மூலம் வெளியேற்றம்

    தாழ்வான குடியிருப்பு பகுதிகள் சாலைகள் தேங்கும் மழை நீரை மோட்டார் மூலம் உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். மழை நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த மின்கம்பி, மின்மாற்றிகளை உடனே சீரமைத்து மின் இணைப்பை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

    சாலையில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். அவசரகால மையம், கட்டுப்பாட்டு அறைகள் 24 மணிநேரமும் இயங்க வேண்டும்.

    வீடுர், சாத்தனூர் அணை திறப்பால் சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும், கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பியதை மீன்வளத்துறை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனிடையே, புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த கூண்டு எடுத்துக் காட்டுகிறது.

    புதுவை தேங்காய் திட்டு மீன் பிடி துறைமுகத்தில் முதலியார்பேட்டை போலீசார் மைக் மூலம் கரையோர பகுதியில் கட்டுமரத்தில் மீன் பிடித்த மீனவர்களை கரைக்கு வருமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
    • எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுச்சேரி, டிச.2-

    புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.

    100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து பல்வேறு விழிப்புணர்வு போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. உலகளவில் சிறந்த இடத்தை புதுவை சுகாதாரதுறை பெற வேண்டும்.எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுவையில் டெங்கு போன்ற காய்ச்சல் பரவுவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதற்கு தேவையான விழிப்புணர்வு, மருந்துகளை அரசு அளித்து வருகிறது. நோய் வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே நோய்கள் வருவதை தடுக்க சுகாதாரம், உள்ளாட்சி உட்பட அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களில் சிறந்த 5 நட்சத்திர தரச்சான்று பெற்ற மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்காலில் உள்ள 3 பரிசோதனை மையங்களை சார்ந்த ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை முதல் - அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சம்பத் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ராதேவி மற்றும் அதிகாரிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி
    • ரூ.9 கோடியில் சாலை பணி களுக்கும் இன்று பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதியில் ரூ.4 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உட்பட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்வ தற்கான பூமிபூஜை விழா இன்று நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சேதராப்பட்டில் ரூ.13 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி, தொண்ட மாநத்தம் கிராமத்தில் ரூ.22 லட்சத்தில் தார்சாலை, கழிவுநீர் வாய்க்கால் பணி உட்பட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத் தார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊசுடு தொகுதியில் நல்ல குடிநீர் வழங்கு வதற்காக ரூ.4 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான, சுத்தமான நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அண்ணா சாலையில் ரூ.9 கோடியில் சாலை பணி களுக்கும் இன்று பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம் படுத்த அரசு அதிக அக்கறை செலுத்தி செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ரசாயான தொழிற்சாலை விபத்து குறித்து கேள்வி எழுப்பி னர். அதற்கு பதில் அளிக்காமல் ரங்கசாமி அங்கிருந்து சென்றார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. மனு
    • நிறுவனத்தின் பல சட்டவிரோத செயல்களை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் பொதுநல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர்? அவர்களின் சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட 400 டன் உற்பத்தியை விட அதிகமாக 650 டன் வரை உற்பத்தி செய்ததே விபத்துக்கு காரணம்.

    ஆபத்தான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் தலைகவசங்களை வழங்கவில்லை. அரசு அதிகாரிகள் இதை கண்காணிக்கவில்லை.வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தகளை இங்கு தயாரித்துள்ளனர்.

    இதன் மூலப்பொருட்கள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. நிறுவனத்தின் பல சட்டவிரோத செயல்களை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    இதை தட்டிக்கேட்டவர்கள் கூலிப்படையினரால் மிரட்டப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இங்கு 10 சதவீத உள்ளூர் தொழிலாளர்களுக்குகூட வேலை வழங்கவில்லை.

    நிலத்தடி நீர் மாசுபட்டு பொதுமக்கள் பலர் பலவித நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள பாய்லர்கள் வெடித்தால் பெரும் விபத்து ஏற்படும். காலாப்பட்டு பகுதி கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள், குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவர்.தற்போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை தொழிலாளர் உட்பட 2 பேர் இறந்துள்ளனர்.

    எனவே நிறுவனத்தின் உரிமையாளர், நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிறுவனத்துக்கு சீல் வைக்க வேண்டும். மருந்து நிறுவனம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அப்பகுதியில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
    • பள்ளியில் படித்தவர்களும், ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் பெரும் தலைவர்களாக திகழ்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைப்பு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவை பழமை மாறாத நகரமாக உள்ளது. நகர பகுதியின் அழகிய கட்டடங்களை பார்வையிட அதிமானவர்கள் வருகின்றனர். புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதற்கு இந்த கட்டடங்களும் ஒரு காரணம். பழமையான கட்டடங்கள் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன.

    75 கட்டடங்களை இப்போது பராமரித்து வருகிறோம். இதற்காக ரூ.75 லட்சம் வழங்கி வருகிறோம். அவர்களும் பராமரித்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக மேரி கட்டடம் புனரமைக்கும்போது இடிந்து விட்டது. அதன் பழமை மாறாமல் கட்டி முடித்துள்ளோம். மிகவும் பழமையான கட்டிடத்தில் வ.உ.சி. பள்ளியும் ஒன்று.

    இதை பாதுகாக்க வேண்டியது அரசின் நோக்கம். இந்த பள்ளியில் படித்தவர்களும், ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் பெரும் தலைவர்களாக திகழ்கின்றனர். பழமை மாறால் புதுவையின் கட்டடங்கள் பராமரிக்கப்பட வேண்டும், புனரமைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

    அதன்படி வ.உ.சி. பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு பள்ளிகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது குறையாக உள்ளது. அரசு பள்ளிகளை பராமரிக்க, புனரமைக்க, கழிப்பறைகளை பராமரிக்க தேவையான நிதி ஒதுக்கி பணிகளை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது.

    அரசு பள்ளிகள், மருத்துவமனைகளில் பராமரிப்பு ஊழியர்கள் சரியாக பணிகளை செய்ய வேண்டும். அரசு பள்ளிகளை பராமரிக்க உரிய நிதிஒதுக்கீடு செய்யப்படும். தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சில பள்ளிகளை தத்தெடுத்து சீரமைக்க முன்வர வேண்டும்.

    அரசு பள்ளியில் அதிகளவு மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை அரசு வகுத்து செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளோம். கல்வே கல்லூரியும் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும். அழகான புதுவையை மேலும் அழகாக்க வேண்டியது புதுவை மக்களின் கடமை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது ஊடகத்துறையிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.

    புதுச்சேரி:

    தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்க சாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஜனநாயக மாண்புகளைக் கட்டிக்காப்பதில் பத்திரிகை மற்றும் ஊட கங்களின் பங்கு அளப்பரியது. பத்திரிகையாளர்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவர்கள்.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அவ்வப்போது ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்கு உதவி வந்துள்ளன. அந்த வகையில் தற்போது, பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது ஊடகத்துறையிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.

    மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசிற்கும் பாலமாக விளங்கும் பத்திரிகைத்துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி நல்வாழ்த்துகனைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
    • தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை விட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தர விட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அரசு அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் சட்டசபையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, அரசு செயலாளர்கள் கேசவன், மணிகண்டன், பங்கஜ்குமார்ஜா உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை விட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தர விட்டுள்ளார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
    • ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக் கப்படுகிறது.

    புதுச்சேரி:

    காவல் துறையில் பணியில் இருந்தபோது இறந்த காவலர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தும் தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படு கிறது.

    சீன படையினரால் எல்லையில் 1959-ம் ஆண்டு நடந்த சண்டையின் போது எல்லை பாதுகாப்பு வீரர்கள் வீரமரண மடைந்தனர். பலர் காணாமல் போனார்கள்.

    இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    புதுவை கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் -அமைச்சர் ரங்கசாமி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.டி.ஜி.பி. பிரிஜேந்திரகுமார் யாதவ் ஆகியோரும் மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரம் கிடைக்கும் போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை கண்டு களிப்பார்.
    • போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரு வீதியில் உள்ள வாட்ச் கடையில் அமந்து நண்பர்க ளுடன் பேசுவது வழக்கம்.

    காலை நேர உணவை பல நாட்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிடுவார். கிரிக்கெட் ரசிகரான முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரம் கிடைக்கும் போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை கண்டு களிப்பார்.

    புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறையில் உள்ள டிவியில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பார். நேரம் இல்லாத பட்சத்தில் கிரிக்கெட் போட்டி முடிவுகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடந்தது. நேற்று மாலை நேரு வீதி வாட்ச் கடைக்கு வந்தார்.

    அங்கு அமர்ந்து போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரசித்து பார்த்தார். போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
    • ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

    புதுச்சேரி:

    மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்றார்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    காலாப்பட்டு தொகுதியில் கடல் அரிப்பு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதை தடுக்க ரூ.56 கோடியில் கல் கொட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் குறைகளை கேட்டு அதை தீர்ப்பதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதுவை மாநிலம் முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    சமூகநலத்துறை மூலம் மக்களுக்குரிய நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அடுத்த கூட்டத் தொடருக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டசபையில் எந்த அரசு உதவி பெறாத குடும்ப தலைவிக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தோம்.

    இதில் 70 ஆயிரம் பேரை கண்டறிந்து படிப்படியாக தொகுதிவாரியாக கொடுத்து வருகிறோம். கியாஸ் சிலிண்டருக்கு சிகப்பு கார்டுக்கு ரூ.300, மஞ்சள் கார்டுக்கு ரூ.150 மானியம் வழங்கும் திட்டம் அறிவித்தோம்.

    இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கினோம். சுமார் 20 ஆயிரம் பேருக்கு கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஓரிருநாளில் 40 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

    பெண் குழந்தைகள் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு, செலுத்தப்பட்டு வருகிறது. 200 பேருக்கு நிதி செலுத்தப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் விபத்து காப்பீடு திட்டத்துக்கு ரூ.92 லட்சம் அரசு செலுத்தியுள்ளது. அரசு அறிவித்த 4 திட்டத்தையும் அரசு செயல்படுத்திவிட்டது.

    மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க டெண்டர் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

    மாதந்தோறும் அரிசிக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல திட்டங்களையும் செயல்படுத்தும். உள்கட்டமைப்பு மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி பெற்று திட்டங்களை நிறை வேற்றுவோம்.

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1600 கோடி நிதி கோரியுள்ளோம். மத்திய அரசும், பிரதமர் மோடியும் புதுவைக்க நிச்சயம் நிதி வழங்குவார்கள். இந்த ஆண்டே பணியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் தானம் செய்வதை உணர்வுபூர்வமாக கருதி தானம் செய்வதை நிறுத்தி விடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளரும் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    உடல் உறுப்பு தேவைக்கும் அவை கிடைப்பதற்கும் சராசரி இடைவெளி மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம் உள்ளது. சாலை விபத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன.

    ஆனால் இவர்களின் பெரும்பாலானவர்கள் உடல் தானம் செய்வதில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் தானம் செய்வதை உணர்வுபூர்வமாக கருதி தானம் செய்வதை நிறுத்தி விடுகின்றனர்.

    இதன் பொருட்டே தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் தானம் செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    இது பொதுமக்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது . ேமலும் தற்போது உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவத்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    சாமானியனின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடப்பது என்பது அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும் அது மட்டு மில்லாமல் உடல் உறுப்பு மாற்று என்பது மிகப்பெரிய வணிகமாவதையும் தடுக்கவும் உடல் உறுப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் இது கலைத்து விடும்.

    எனவே புதுவையிலும் உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்ற திட்டத்தை நடைமு றைப்ப டுத்தத் தேவையான நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய கம்யூனிஸ்டு அழைப்பு
    • மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகும், பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை ஏற்க மறுப்பதாகும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தன்னுடைய அதிகாரம் முற்றிலும் பறிபோய் முதல்-அமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்து இருக்கிறோம் பின்பக்கமாக வெளியே சென்று விடலாம் போல இருக்கிறது என்று ரங்கசாமி பகிரங்கமாக கூறுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் என் கூற்றை மதிப்பதில்லை, மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை தினந்தோறும் மன உளைச்சலாக இருக்கிறது என்று புலம்பினார்.

    கடந்த ஆகஸ்ட்டு மாதம் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் மக்களின் நலனுக்காக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என்று தீர்மானம் மூலமாக அறைக்கூவல் விடப்பட்டது. டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டத்தை எதிர்த்து முதல் அமைச்சர் ரங்கசாமி குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் முதல்-அமைச்சர் இதை செவிமடுக்கவில்லை.

    பா.ஜனதாவின் கொள்கை கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து, மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகும், பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை ஏற்க மறுப்பதாகும்.

    புதுவை மண்ணின் விடுதலையை பேணிக்காக்க, மாநில உரிமைகளை நிலைநாட்டிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் ஜனநாயகத்தை பாதுகாத்திட முதல அமைச்சர் ரங்கசாமி அரசியல் உறுதியுடன் செயல்பட வேண்டும். மத்திய பா.ஜனதா அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். புலம்பிப் பயனில்லை போராட முன்வாருங்கள் என்று ரங்கசாமியை மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறோம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×