search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம் எழுத வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம் எழுத வேண்டும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • இடஒதுக்கீடு, சமூகரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறைகள் ரத்தாகும். இது சமூகநீதிக்கு எதிரானது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

    புதுவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர், அரசு மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து தனியார் மருத்துவ கல்லூரியின் மருத்துவ படிப்புகளிலும் தேசிய மருத்துவ ஆணையமே பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது கலந்தாய்வு என்ற புதிய முறையால் புதுவை மாநிலத்திற்கென ஜிப்மரில் கிடைக்கும் இடஒதுக்கீடு ரத்தாகும். புதுவை மாநில அரசு மாணவர்களுக்காக பிராந்தியவாரியாக அளித்துவரும் இடஒதுக்கீடு, சமூகரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறைகள் ரத்தாகும். இது சமூகநீதிக்கு எதிரானது.

    தற்போதுள்ள நடை முறையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். புதுவை மாநில மாணவர்களின் உரிமையை காக்க முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். உடனடியாக மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×