என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்ம ஊரு டாக்ஸி"

    • பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு அங்கீகாரத்துடன் பாதுகாப்பான பயணத்துக்கான 'நம்ம ஊரு டாக்டாக்ஸி' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த செயலியில் நியாயமான கட்டணம், நேரடி சவாரி கண்காணிப்பு, சரி பார்க்கப்பட்ட ஓட்டுனர் சுய விவரம், 24 மணி நேரமும் உதவி மையம், எஸ்.ஓ.எஸ். பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த செயலி புதுச்சேரியில் எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கிலத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. பணம் அல்லது யு.பி.ஐ. கட்டண பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

    பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பயணிகளுக்கும், எலெக்ட்ரிக் ஆட்டோ, ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் தனித்தனி செயலிகள் உள்ளது.

    போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.

    இந்த தகவலை புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

    ×