search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NR Congress"

    • குறைந்த வாக்கு சதவீதம் பதிவான மாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவில் வழக்கம் போல் அதிக அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.

    இது புதிதல்ல என்றாலும் பெண்களை மையமாக வைத்து பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. இந்தியா கூட்டணியும் பிரசாரம் செய்ததால் இந்த தேர்தலில் பெண்களின் வாக்கு யாருக்கு? என கேள்வி எழுந்துள்ளது.

    புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மாதந்தோறும் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. தரமான வெள்ளை அரிசி வழங்கப்பட்டதால் பெண்களிடையே அதிக அளவில் வரவேற்பும் இருந்தது.

    ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. பணத்திற்கு பதிலாக மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் தரமான இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுவை பெண்கள் எழுப்பி வருகின்றனர்.

    இதனால் ரேஷன் அரிசி மீண்டும் வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனாலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் இதுவரை அரிசி வழங்கப்படவில்லை. ரேஷன் அரிசி விவகாரம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இடம் பெற்றது.

    முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரத்தை தொடங்கியபோது பெண்கள் ரேஷன் கடைகளில் எப்போது இலவச அரிசி வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலாக பணம் வங்கியில் செலுத்தப்படுவதை ரங்கசாமி சுட்டி காட்டியபோது அதனை தங்கள் கணவர்கள் பறித்து செல்வதால் அரிசிதான் வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை காங்கிரஸ் தனது பிரசாரத்தில் மையமாக பயன்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது பிரசாரத்தில் பல பகுதிகளில் கூடியிருந்த பெண்களிடம் ரேஷன் அரிசி கிடைக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதோடு கை சின்னத்திற்கு வாக்களித்தால் ரேஷன் கடைகளை திறந்து தரமான வெள்ளை அரிசி வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

    மேலும், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதே இதற்கு காரணம் என்றும் வைத்திலிங்கம் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வந்தார்.

    இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரேஷன் கடைகளை மூடி இலவச அரிசி வழங்குவதை நிறுத்தியதே காங்கிரஸ் அரசுதான் என்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு தரமான இலவச அரிசியோடு உணவு பொருட்களும் வழங்கப்படும் என்றும் ரங்கசாமி உறுதி அளித்தார்.

    அதோடு பெண்களை பாதுகாப்பதில் மட்டுமல்ல அக்கறையோடு பெண்களுக்கான நலத்திட்டங்களையும் தனது அரசு செய்து வருவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமி திட்டங்களை பட்டியலிட்டார். முதியோர் உதவித்தொகையை கடந்த காங்கிரஸ் அரசு ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை என்றும் தனது அரசு பதவியேற்றவுடன் 500 ரூபாய் உயர்த்தியுள்ளதை குறிப்பிட்டு தேர்தலுக்கு பிறகு மீண்டும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

    இதுமட்டுமல்லாமல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டத்தையும் புதிதாக தொடங்கி உள்ளதையும் ரங்கசாமி பிரசாரத்தில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவானமாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொகுதிக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான வாக்கு வித்தியாசத்தில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    இது தேர்தலில் மோதிய பிரதான அரசியல் கூட்டணிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி மற்றும் எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.
    • 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரம் செய்த போது முதியோர் உதவித்தொகை உயர்த்துவது குறித்து பேசினார்.

    இதுதொடர்பாக தேர்தல் துறை கவனத்துக்கு சென்றது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    அதில் தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், சலுகைகள், நிதி மானியம், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.

    எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல பா.ஜனதா சமூகவலைதள விளம்பரம் தொடர்பாக கட்சியின் பொது செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.

    • காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 2 அமைச்சர்களும் பதவி வகித்து வந்தனர்.

    இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் காரைக்கால் நெடுங்காடு (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் துறைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் சந்திரபிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்தநிலையில், காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். புதிய அமைச்சராக திருமுருகன் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்ற பின், அவருக்கான துறை ஒதுக்கப்படும்.

    • பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
    • ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திருபுவனை (தனி) தொகுதி அங்காளன், உழவர்கரை சிவசங்கர், ஏனாம் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோசியேட் எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் பங்கேற்று வருகின்றனர்.

    அரசு பதவிகளில் இல்லாத ஆளுங்கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைந்தது முதலே வாரிய பதவி கேட்டு வருகின்றனர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால், ஆட்சி அமைந்து 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பா.ஜனதாவை ஆதரிப்பதால் தங்கள் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக சட்டமன்றத்தில் அவர்கள் குற்றம்சாட்டினர். சட்டமன்றத்தின் முன்பு படிக்கட்டில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் போராட்டமும் நடத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்றத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். தனக்கு அரசு பழைய காரை கொடுத்ததால் கார் அடிக்கடி பழுதாவதாகவும், பெட்ரோல் அலவன்ஸ் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

    ஆனாலும் அங்காளனுக்கு அரசு இதுவரை புதிய கார் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனது பழைய காரின் சாவியை சபாநாயகரை சந்தித்து ஒப்படைத்தார்.

    ஓடாமல் இருந்த காரை பட்டி பார்த்து தனக்கு வழங்கியுள்ளதால் செல்லுமிடமெல்லாம் அது மக்கர் செய்து நிற்பதாகவும் மற்ற எம்.எல்.ஏ.க்களின் காருக்கு ரூ.30 ஆயிரம் டீசல் அலவன்ஸ் வழங்கும் நிலையில் தனது காருக்கு வழங்கவில்லை என்பதால் காரை திரும்ப ஒப்படைத்துள்ளதாக அங்காளன் தெரிவித்தார்.

    ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார். இவர் ஏற்கனவே உழவர் கரை சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதாவில் வாய்ப்பு கேட்டு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    இதனால் புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பளிக்காத பட்சத்தில் சிவசங்கர் எம்.எல்.ஏ. என்ன நிலைப்பாடு எடுப்பார் என தெரியவில்லை.

    மற்றொரு பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஏனாம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்து வருகிறார்.

    இதோடு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் புகார் தெரிவித்து வருகிறார். இதனால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி புதுவை பாராளுமன்ற தொகுதியில் களம் இறங்கும் பா.ஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    • வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளூர் பா.ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • அரசு பதவிகளில் இருப்பவர்களை போட்டியிட செய்தால் தொடர் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி கட்சியான பா.ஜனதா வெற்றிபெற பாடுபடுவோம் என முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிதலைவருமான ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் தெரிவித்தார். இதனால் பாஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    யூனியன் பிரதேசமான புதுவை 4 பிராந்தியமாக உள்ளது. இதனால் 4 பிராந்தியங்களிலும் பிரபலமானவர்களை நிறுத்தினால்தான் எளிதில் வெற்றி பெற முடியும். இதை அறிவுறுத்தும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி, பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பாஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் தெரிவித்துள்ளார்.

    புதுவை தொகுதியில் பாஜனதா சார்பில் போட்டியிட காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், புதுவை சுயேச்சை எம்.எல்.ஏ., நியமன எம்எல்ஏ, புதுவை நிர்வாகி ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளூர் பா.ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் அதையே பிரச்சாரமாக செய்வார்கள். இது வெற்றியை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் வெளியூர் வேட்பாளர்களை பாஜனதா தவிர்க்கும் என தெரிகிறது.

    அதேநேரத்தில் அரசு பதவிகளில் இருப்பவர்களை போட்டியிடசெய்தால் தொடர் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்தை கட்சித் தலைமையிடம் பலரும் கைகாட்டியுள்ளதாக தெரிகிறது.

    ஆனால் அவர் உள்ளூர் அரசியலை விட்டு விலக விரும்பவில்லை என தலைமையிடம் கூறியுள்ளார். அவரை போட்டியாக கருதுபவர்கள் உள்ளூர் அரசியலிலிருந்து, மத்திய அரசியலுக்கு அனுப்ப திட்டமிட்டு அவர் பெயரை வேட்பாளராக சிபாரிசு செய்துள்ளனர்.

    உளவுத்துறை மூலமாகவும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் பாஜனதா ஏற்கனவே கள ஆய்வு நடத்தியுள்ளனர். ஆர்எஸ்எஸ் இயக்கமும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் பாஜனதா விவிஐபி வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியாக உள்ளது.

    இந்த பட்டியலில் புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயரும் இடம்பெறும் என பாஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
    • அடுத்தக்கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்து, முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜனதா, மேலிடப் பொறுப்பாளர் ஆலோசனை நடத்தினார்.

    பா.ஜனதா, மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2-வது முறையாக முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை 30 நிமிடம் வரை நீடித்தது.


    கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில்,

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ற வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மற்றும் பா.ஜனதாவினரின் எண்ணம் அதுகுறித்து விவாதித்தோம். அடுத்தக்கட்டமாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.

    பா.ஜனதா வேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதாவில் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்று யார் சொன்னது? அதுபோன்ற குற்றச்சாட்டு ஏதும் இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க, சார்பில் போட்டியிட பலரும் சீட் கேட்டுள்ளனர். நேரம் வரும் போது அதிகாரப்பூர்வமாக அறிப்போம் என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.
    • மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரசும், பா.ஜனதாவும் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.

    இதை உறுதி செய்யும் வகையில் பா.ஜனதாவின் மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட சம்மதம் தெரிவித்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியிடம், கட்சி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி ஆண்டு விழாவின்போது முடிவு தெரிவிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டுவிழாவில் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.

    விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி (பா.ஜனதா) போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறி என்.ஆர்.காங்கிரசார் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்துள்ளார். தொண்டர்களிடையே நிலவி வந்த சந்தேகங்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மீண்டும் தனது ஆதங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
    • பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    ஆட்சி தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அரசு விழாக்களில் ஏற்கனவே சில முறை பகிரங்கமாக இதை தெரிவித்துள்ளார்.

    புதுவை சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் சட்டசபையிலேயே எச்சரிக்கையும் விடுத்தார்.

    சபை நடவடிக்கையில் அனைத்து அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதிகாரிகள் சபை நடவடிக்கையில் பங்கேற்கிறார்களா? என அமைச்சர் அலுவலகங்களுக்கு சென்று கண்காணிப்பிலும் ஈடுபட்டார்.

    இந்த நிலை மாற புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துதான் தீர்வு என அடிக்கடி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறி வருகிறார். இதனிடையே நேற்று கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மீண்டும் தனது ஆதங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார்.

    ஒரு கோப்புக்கு அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்க கடும் சிரமம் அடைய வேண்டியுள்ளது. இயக்குனர், செயலர், தலைமை செயலர் ஆகியோர் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் தான் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் கோப்புக்கு தற்போதுதான் உயர் அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். இந்த வாரத்தில் அந்த கோப்புக்கு அனுமதி கிடைக்கும். இதன்பின்னர் 10 நாட்களில் லேப்டாப் வழங்கப்படும்.

    பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். பட்டப்படிப்புகள் ஏராளமாக உள்ளது.

    அதை படித்து நிர்வாக பொறுப்புக்கு வர ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும். ஏனென்றால் அவர்கள் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.

    இதுவரை புதுவையை சேர்ந்த 5 பேர்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர் என்றார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த ஆதங்கமான பேச்சு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடையே உள்ள பனிப்போரை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

    • அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி
    • தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

     தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது தகுதி, வயதை, அனுபவம் எதையும் புரிந்து கொள்ளாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணி கட்சி என நினைக்காமல் கட்சியின் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வதை புதுவை மாநில அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.

     மலிவு விளம்பரத்திற்காக பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை பற்றி அண்ணாமலை அவ்வப்போது விமர்சனம் செய்கிறார். இது இந்திய நாட்டின் பிரதமராக மோடி வரக்கூடாது என்ற அண்ணமாலையின் சதிசெயலாக உள்ளது.

    தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை. அவர் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். அண்ணாமலை புதுவைக்கு வரும்போது அ.தி.மு.க. பதிலடி தரும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலேயே பா.ஜனதா என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். ங

    கட்டுப்படுத்த வேண்டும்

    கர்நாடகத்தில் இருந்த பா.ஜனதா ஆட்சியை தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையால்தான் இழந்தது என்பதை பா.ஜனதா தலைவர்கள் உணர வேண்டும். அண்ணாமலையை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

    புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ரங்கசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டோம். பா.ஜனதாவால்தான் புதுவையில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது.

    என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்க அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குதான் என்பதை

    தமிழகத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு புதுவைக்கும் பொருந்தும். புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையேற்றுள்ளார். எங்களை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரசுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

    கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவின்படி புதுவை அ.தி.மு.க. செயல்படும். எங்கள் தலைமை பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்துள்ளது. அது மிக்க சந்தோஷமான செய்தியாகும். அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில இணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    • நாராயணசாமி குற்றச்சாட்டு
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். 750 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் மோடி ஆட்சியை அகற்றுவோம், தேசத்தை பாதுகாப்போம் என்ற தெருமுனை பிரச்சாரம் நடத்தினர். இதன் நிறைவு விழா சுதேசி மில் அருகே நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். தேசி யக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய செயலாளர் நாராயணா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பொது சொத்தையும், கோவில் சொத்தையும் சாப்பிட பார்க்கின்றனர். முதல்-அமைச்சர் வாக்குறுதி கொடுப்பதோடு சரி, எதையும் செய்வதில்லை. டெல்லியில் முதல்-அமைச்சர் மாநாடு நடந்தது.

    அதில் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து பேசவில்லை. கடனை தள்ளுபடி செய்வேன் ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி பெறுவோம், நிதிகமிஷனில் புதுவையை சேர்ப்போம் என்றனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். 750 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்து ள்ளார்.

    குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு ரூ.160 கோடி நிதிதேவை. அதற்கு நிதி ஒதுக்கவில்லை. அப்புறம் எப்படி சிலிண்டருக்கு ரூ.300 தர முடியும்? பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு த்தொகை வழங்கவில்லை. பெண்களுக்கு ரூ.1000 ஒரு மாதம் மட்டும்தான் கொடுத்தனர். பட்ஜெட்டில் 34 வாக்குறுதிகள் கொடுத்து, ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்றவுடன், கவர்னர் கூட்டம் கூட்டுகிறார். முதல்-அமைச்சர் செய்யவேண்டியதை கவர்னர் செய்கிறார். பா.ஜக அமைச்சர்கள் கிடைத்ததை சுருட்டுகின்றனர். எதில் வசூல் வருகிறதோ? அதை செய்கின்றனர். புதிதாக ரூ.400 கோடியில் சட்டமன்றம் கட்டப்படும் என கூறுகின்றனர். அதிலும் சுருட்ட பார்க்கின்றனர். மத்தியில் புதிய சட்டமன்றம் கட்ட கோப்பு வந்துள்ளதா? என கேட்டால் இல்லை என்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட்டு ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், திராவிடர் கழகம் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது உமர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.
    • கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடக்கிறது.

    ரங்கசாமி பதவியேற்று 2 ஆண்டு முடிவடைந்துள்ளது. ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 4 அமைச்சர், துணை சபாநாயகர், அரசு கொறடா பதவிகளை என்.ஆர். காங்கிரசாரும், சபாநாயகர், 2 அமைச்சர் பதவியில் பா.ஜனதாவினரும் உள்ளனர்.

    ஆட்சியில் இடம் பெறாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாரிய பதவி வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகின்றனர். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்கூட இது எதிரொ லித்தது.

    எம்.எல்.ஏக்கள் பேசும் போது, அரசு சார்பு நிறுவன தலைவர்களாக தங்களை நியமித்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபகரமாக செயல்படுத்துவோம் என தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

    ஏற்கனவே பா.ஜனதா தரப்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான அ.தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை. ஆனாலும் தேர்தல் உடன் படிக்கையின்படி தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாரிய பதவி அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் கடந்த 2 ஆண்டு காலமாக முதலமைச்சர் ரங்கசாமி மவுனம் சாதித்து வருகிறார். இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.

    இது வாரிய பதவியை மையமாக வைத்தே ரங்கசாமி பேசியதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு பெற்றது. இதை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் உற்சாகமாக கொண்டாடவில்லை. இதற்கு கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது அவசியமானது. இல்லாவிட்டால் ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர், எம்.எல்.ஏ.க்களை உத்வேகப்படுத்த தொகுதிகளில் வாக்கு பெற்றுத் தரும் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

    பா.ஜனதா, அ.தி.மு.க. தரப்பிலும் வாரிய தலைவர் பதவியை வழங்கும்படி நெருக்கடி அளிக்கின்றனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசிக்க தொடங்கியுள்ளார்.

    • சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

    மத்திய அரசிடம் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தே முதலமைச்சர் ரங்கசாமி 2011-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.

    மாநில அந்தஸ்து கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறுவதும், பின்னர் அடங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.

    தேர்தலுக்கு பிறகு கோரிக்கை மாயமாகிவிடும். இதேநிலைதான் பல ஆண்டாக நீடித்து வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு விழாவில் பேசும்போது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுகிறது என்றும் இது மன உளைச்சலை உருவாக்குவதாகவும் பேசினார்.

    இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. புதுவையில் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்து வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தி பந்த் போராட்டம் நடத்தியுள்ளது.

    அதோடு முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த வக்கீல்கள் சேம்பர் அடிக்கல் நாட்டு விழாவில் மாநில அந்தஸ்து பெற நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    விழாவில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாநில அந்தஸ்து வலியுறுத்தி மனுவும் அளித்தார். இந்த நிலையில் கூட்டணியில் ஆட்சியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா, புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறும்போது, புதுவைக்கு சொந்தமாக மின் உற்பத்தி, கனிம வளங்கள் இல்லாததால் மாநில அந்தஸ்து கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும் என்றும் மாநில அந்தஸ்து குறித்த சாதக, பாதகங்களை ஆராய வேண்டும் என்றும், மக்களை பாதிக்காத மாநில வளர்ச்சியை பா.ஜனதா ஆதரிக்கும் என்றும் கூறினார்.

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையா? என்ற ரீதியில் பா.ஜனதா மாநில தலைவர் கேள்வி எழுப்பியிருப்பது மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் கோரிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    ×