search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly Election"

    • தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கம்பம்:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகையும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.

    கம்பம் கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தனது கணவரும் சினிமா இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்ஹாவிற்கு வந்து சுமார் 15 நிமிடம் வழிபாடு செய்தனர். செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து தர்ஹாவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். தற்போது ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மீண்டும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறவும், ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக ஆக வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ரோஜா வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அவர் வந்து சென்ற பிறகே இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது. 

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்துவருகிறார்.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

    புவனேஸ்வரம்:

    ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமையும். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார். பிஜு ஜனதா தள கட்சியின் ஆதரவு இல்லாமலேயே பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகள் மற்றும் சட்டசபை தேர்தலில் 147 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2019 தேர்தலின் போது பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜ்வாகா என 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார்.
    • பா.ஜ.க மேலிட தலைவர்களுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ஜ.க.வும் இணையும் என்று உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

    சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைப்படி நடிகர் பவன் கல்யாண் வரும் தேர்தலில் பிதாபுரம் சட்ட சபை தொகுதியிலும், அனக்கா பள்ளி பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    கடந்த 2019 தேர்தலின் போது பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜ்வாகா என 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போது இரண்டிலும் தோல்வியடைந்தார். பவன் கல்யாண் இந்த முறை ஒரு சட்டசபை, ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் டெல்லி சென்றனர். இன்று பா.ஜ.க மேலிட தலைவர்களுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்கவில்லை.
    • ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியை சந்திப்பார். அது சாதாரண தோல்வி அல்ல. மிகப்பெரிய தோல்வியை அவரால் தவிர்க்க முடியாது.

    ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்க வில்லை. வேலை வாய்ப்புக்காக வேலை தேடி அலைகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வளங்களையும் ஒரு சில பிரச்சினைகளுக்காக செலவழித்து ஆந்திராவின் வளர்ச்சியை புறக்கணித்தது ஜெகன்மோகன் ரெட்டி பெரிய தவறு செய்துவிட்டார்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுபோல் இல்லாமல் அரண்மனைகளில் தங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நினைக்கிறார்கள்.

    இதுபோன்ற அணுகு முறையால் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் சிறந்த பாத்திரமாக விளங்க வேண்டும். ஆனால் பல தலைவர்கள் தங்களை பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குபவர்களாகவே பார்க்கின்றனர்.

    அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற முடியாது.

    பொதுமக்கள் மாறி மாறி வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் உட்கட்சி பூசலை நிறைவுக்கு கொண்டு வந்து வெற்றி கண்டார், சுனில்
    • இருமுனை போட்டி மட்டுமே இருக்கும் வகையில் களத்தை தெளிவாக்கினார்

    தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற ஆலோசனைகளை கூறி, வியூகம் அமைத்து தரும் பணியை தனியார் அமைப்புகள் செய்து வருவதை கடந்த சில வருடங்களாகவே இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.

    இதில் பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகொலு ஆகியோர் பிரபலமானவர்கள்.

    கடந்த வருடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார் சுனில் கனுகொலு (Sunil Kanugolu). கடந்த மே மாதம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வியூகம் அமைத்து அதன் வெற்றிக்கு வழி வகுத்தார்.

    இதை தொடர்ந்து சுனில், தெலுங்கானாவில் கவனம் செலுத்தினார்.

    தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி) கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியிருந்தது.

    காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையின்றி பல தலைவர்களின் கீழ் பல குழுக்கள் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன. முதல் வேலையாக கட்சிக்குள் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என கட்சி தலைமையிடம் எடுத்து கூறி அந்த முயற்சியில் வெற்றி கண்டார் சுனில்.

    சுனிலை முடக்கும் வகையில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும், அப்போதைய முதல்வருமான கே.சி.ஆர்., சுனிலை காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கினார். சுனிலின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரது அலுவலக பொருட்கள் காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டது.

    ஆனால், இதில் அச்சமடையாத சுனில், புதிய அலுவலகம் ஒன்றை அமைத்து மீண்டும் மன உறுதியுடன் காங்கிரஸ் வெற்றி பெற செயல்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்க கூடிய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், தன்னை எங்குமே முன்னிறுத்தி கொள்ள விரும்பாதவரான சுனில், ஊடகங்களை அறவே தவிர்ப்பவர்.

    பா.ஜ.க.விற்கு செல்ல கூடிய வாக்குகளால் கே.சி.ஆர். மீண்டும் பதவியில் அமர முடியும் என முதலிலேயே கணித்து அதை தகர்க்க துல்லியமாக திட்டமிட்டார். தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் தாக்கத்தை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பிரசாரத்திற்கும் திட்டமிட்டு தந்தார்.

    தன்னை கைது செய்ய உத்தரவிட்டிருந்த கே.சி.ஆர். மீது கோபத்தில் இருந்த ஒய்.எஸ்.ஆர். மகள் ஒய்.எஸ். ஷர்மிளா தேர்தலில் போட்டியிடாமல் நின்றால் ஓட்டு பிரிவை தடுக்க முடியும் என புரிய வைத்து அந்த முயற்சியில் வெற்றி பெற்றார்.

    அதே போன்று தெலுகு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தலில் நிற்பதையும் சாதுர்யமாக பேச்சு நடத்தி தடுத்தார்.


    இதனால், 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். என் இருமுனை போட்டி மட்டுமே நடைபெறும் வகையில் களத்தை தெளிவாக்கினார்.

    சுனில் கனுகொலு கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியின் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். சென்னையில் வளர்ந்தவரான சுனில் அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்.

    நிர்வாக மேலாண்மை ஆலோசனைக்கான புகழ் பெற்ற மெக்கின்சே (McKinsey) நிறுவனத்தில் பணியாற்றியவர்.

    இந்தியா திரும்பிய சுனில் அசோசியேஷன் ஆஃப் பில்லியன் மைண்ட்ஸ் (ABM) எனும் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் வகுத்து தரும் நிறுவனத்தை தொடங்கி பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டவர்.

    கல்வகுன்ட்லா சந்திரசேகர் ராவ் (KCR) வகுத்த வியூகங்கள், கனுகொலு சுனில் வியூகங்கள் முன் எடுபடாமல் தோற்றதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்

    தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.

    இதையடுத்து வருகின்ற 3-ந் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.

    இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறியுள்ளன.

    காங்கிரஸ் கட்சி 60 முதல் 79 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    அங்கே உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் மெஜாரிட்டி பெற வெற்றி பெற வேண்டும்.

    தெலுங்கானா தேர்தல் தங்களுக்கு சாதகமாகாமல் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதி ஒன்றில் வைத்து பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    பெங்களூருவில் நவீன வசதிகள் கொண்ட சொகுசு விடுதியை தயார் செய்து வைத்துள்ளதாம்.

    தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், தெலுங்கானா பகுதியில் இருந்து வெற்றி பெறும் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திர சேகர ராவ் கட்சிக்கு தாவுவதை தடுக்கவும், குதிரை பேரத்துக்கான முயற்சிகளையும் முறியடிக்கவும் காங்கிரஸ் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • பலத்த பாதுகாப்பை மீறி தபால் வாக்கு பெட்டியை திறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி போலீசார், பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எந்திரம் இருக்கும் மையத்தை யாரும் எளிதாக நெருங்கி விட முடியாது. உயர் அதிகாரிகள் இல்லாமல் திறக்க முடியாது.

    மத்திய பிரதேசத்தில் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், வருகிற 3-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனால் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினரும் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

    இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாட்டுகளையும் மீறி, பாலகாட் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு பெட்டி வைத்திருக்கும் அறையில் பலர் தபால் வாக்குகளை கட்டு கட்டுகளாக பிரித்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பானது.

    இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ், "இது மிகவும் முக்கியமான விசயம். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேணடும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதன்பின் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, ஜோதிராதித்யா சந்தியா 20 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

    • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
    • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

    பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

    இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

    ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

    அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

    வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    • ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது.
    • தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

    தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

    ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    • தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.பி.எஸ். தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என தர்மர் எம்.பி பேசினார்.
    • இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாத புரம் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்தின் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் மூக்கையா, மாநில வழக் கறிஞர் பிரிவு செயலாளர் நவநாதன் முன்னிலை வகித்தனர்.

    முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துச் சாமி வரவேற்றார். கூட்டத் தில் தர்மர் எம்.பி.பேசிய தாவது:-

    நமது ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ். செயல்பாடு களை தமிழகமே உற்று நோக்கி கவனிக்கிறது. திருச்சி மாநாடு இந்திய ளவில் பேசப்பகிறது. பசும்பொன் தேவர் குருபூஜைக்கு ஓ.பன்னீர் செல்வம் வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுக்க வேணடும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். நம் உழைப்பு என்றும் வீணாவதில்லை. உழைப்புக்கேற்றபலன் கிடைக்கும். நடிப்பவர் களைப் பற்றி நாம் கவலைப்பட தேவை யில்லை. நமது நிர்வாகிகள் யாரும் சோடை போன தில்லை. நமது நிர்வாகிகளை மக்களே பாராட்டுகின்றனர்.

    இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது. அதற்காக தொடர்ந்து உழைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பரமக்குடி திலகர், மாரந்தை நீதி தேவன், தூரிமுருகேசன் உள்பட அனைத்து ஒன்றிய செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
    • மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.

    சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட மனுதாக்கல் கடந்த 13-ந்தேதி நடந்தது. இந்நிலையில் இன்று அந்த மாநிலத்தில் 2-வது கட்ட 70 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

    அதுபோல மத்திய பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) மனுதாக்கல் தொடங்கியது. அந்த மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இன்று வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரசாரம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    • 2024 தேர்தலில் பா.ஜ.க.விற்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது
    • பிரச்சனைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம்

    இந்திய தலைநகர் புது டெல்லியில் 'பிரதிதின் மீடியா நெட்வொர்க்' எனும் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வரும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ள முக்கிய தலைவருமான ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:

    தெலுங்கானாவில் அனேகமாக வெற்றி பெறுவோம். மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் வெற்றி உறுதி. ராஜஸ்தான் மாநிலத்தில் நெருக்கமான போட்டியில் இருக்கிறோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கிறது. நாங்கள் கர்நாடகா தேர்தலில் முக்கிய பாடம் கற்று கொண்டோம். அதாவது, பா.ஜ.க., தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளின் கவனத்தை சிதறடிக்க செய்கிறது. கர்நாடகாவில் அதனை உணர்ந்த நாங்கள் எங்கள் கவனத்தை சிதற விடாமல் மக்கள் பிரச்சனையிலேயே கவனம் செலுத்தி வந்தோம். அதனால் பெரும் வெற்றி பெற்றோம். இதை உணர்ந்து கொண்ட நாங்கள் இதனை எதிர் கொள்ள கற்று கொண்டு விட்டோம். தற்போது கூட சாதி கணக்கீடு குறித்து பேச விடாமல் கவனத்தை திசை திருப்பி வருகிறார்கள். 'ஓரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் கூட இந்தியாவின் தலையாய பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை, தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனத்தை சிதறடிக்கத்தான் கொண்டு வருகிறார்கள். எங்களுக்கு பெரும் வியாபார நிறுவனங்கள் நன்கொடை அளிப்பதில்லை. எங்களுக்கு அவர்கள் உதவினால் என்னவாகும் என அவர்களையே கேளுங்கள்.

    இவ்வாறு ராகுல் கூறினார்.

    ×