என் மலர்
நீங்கள் தேடியது "விருப்ப மனு"
- விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர்.
- விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டன. கூட்டணி அமைக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்ததாக ஒவ்வொரு கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக குழு அமைக்கும் நடவடிக்கை யிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர் களிடம் இருந்து ஒவ்வொரு கட்சிகள் சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.வில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டு விட்டது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். விருப்பமனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தியுள்ளார்.
த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்தும் விருப்பமனு பெறப்பட்டு உள்ளது. த.வெ.க.வில் போட்டியிட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் பெயரிலும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பெயரிலும் ஏராளமானவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க.வில் இன்று மாலை வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி 2 அணிகள் தரப்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு விட்டது. தே.மு.தி.க. சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. முதல் விருப்பமனு விஜயகாந்த் பெயரில் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரேமலதா பெயரிலும் பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு கட்சிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
தி.மு.க.வும் தேர்தல் பணியில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி முடித்துள்ள தி.மு.க., அடுத்ததாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு வருகிறது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு மூத்த தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில், நாளை மறுநாள் (22-ந்தேதி) முதல் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விருப்பமனு குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இன்று முதல் மார்ச் 2-ந்தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த மனுக்களை கொடுக்கும்போது பொது தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிகளில் போட்டியிட ரூ.15 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகம் இன்று காலையில் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பு பவர்களுக்கு விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன.
முதல் நாளான இன்று விருப்பமனு வாங்குவதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு விருப்பமனுக்களை பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர்களில் ஏராளமானோர் விருப்ப மனு வாங்கினார்கள்.
விருப்ப மனுவில் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. தி.மு.க.வில் வகிக்கும் பொறுப்பு, பொதுப்பணியில் வகித்த மற்றும் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி மன்றம் மற்றும் வேறு அமைப்புகளில் வசிக்கும் பதவி, தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.
விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா,செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே. எஸ். இளங்கோவன், ஆஸ்டின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு 7 விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார். இதேபோல் ஏராளமானோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன. பூர்த்தி செய்த விருப்ப மனுக்கள் அன்று மாலை வரை பெறப்பட உள்ளன. விருப்ப மனுக்கள் பெறப்பட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
- விண்ணப்ப கட்டணம் மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு -புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப். 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2 ஆம் தேதி திங்கள்கிழமை வரை திமுக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000-ஆகவும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவத்தை திமுக தலைமை அலுவலகத்தில் ரூ. 1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர்.
- தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
- இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
- தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.
த.வெ.க.வில் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரூ.100 கொடுத்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முதல் நாளான நேற்று 10 ஆயிரம் படிவங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
முதல் நாளிலேயே ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து மனுக்களை வாங்கினார்கள். அதில் பலர் விஜய் பெயரிலேயே மனுக்களை வாங்கினார்கள். 10 ஆயிரம் மனுக்களும் 1½ மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
கூட்டம் அதிக அளவில் திரண்டு சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் யாரும் விருப்ப மனு வாங்க நேரில் வர வேண்டாம். இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.
பெயர், தந்தை-கணவர் பெயர், பிறந்ததேதி (வயது), பாலினம், கல்வி தகுதி, தற்போதைய கழகப் பதவி, எந்த ஆண்டில் இருந்து உறுப்பினராக இருக்கிறீர்கள், ஆதார் எண், வாக்காளர் அட்டை எண், அலை பேசி எண், மாற்று அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தாய்மொழி, பேசும் திறன் உள்ள மொழிகள்,
உங்கள் வெற்றி வாய்ப்புகளை சுருக்கமாக விவரிக்கவும், சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், கழகத்தில் இணைவதற்கு முன்பு வேறு ஏதாவது கட்சியில், கட்சிகளில் உறுப்பினராக இருந்தீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், தங்கள் பெயரின் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அதுபற்றிய தகவல்கள், தங்களின் குடும்ப உறுப்பினர் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்
டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களின் விபரம், தொழில், ஆண்டு வருமானம், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், கணவர், மனைவி மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் -குடும்ப விபரம், நீங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்றத் தொகுதி, நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் எஸ்.ஐ.ஆர்.க்கு பின் உள்ள மொத்த வாக்காளர்களின் விவரம், நீங்கள் இதே தொகுதியில் வசித்து வருகிறீர்களா?
இல்லை எனில், தாங்கள் வசிக்கும் தொகுதி, உங்கள் வாக்குரிமை இதே தொகுதியில் உள்ளதா? இல்லை எனில், தங்கள் வாக்குரிமை உள்ள தொகுதி, நீங்கள் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்கள், தங்களின் சொத்து விவரம், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரம், தங்கள் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை ஏதேனும் தயார் செய்துள்ளீர்களா? ஆம் எனில், குறிப்பிடவும்.
கழகத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள், கழகப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றுள்ளீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், கழக விதிகளுக்கு எதிராக நடந்ததற்காக உங்கள் மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், சாதிச் சங்கங்கள் அல்லது சமூக அமைப்புகளுடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்.
மேலும் தெரிவிக்க விரும்பும் வேறு ஏதேனும் கூடுதல் விவரங்கள், தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த விபரங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை, உயர்கல்வித் தகுதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், கடந்த 3 ஆண்டுகளின் குடும்ப உறுப்பினர்களின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களையும் இணைக்க வேண்டும்.
- த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
- பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று மட்டும் சுமார் 2.30 மணி நேரத்திற்குள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருப்ப மனுக்கள் காலியானதைத் தொடர்ந்து தொண்டர்கள் வருகையை தவிர்க்கவும், ஏற்கனவே கூடியவர்கள் அங்கிருந்து புறப்பட ஏதுவாகவும் த.வெ.க. தலைமை அலுவலகத்தை அக்கட்சி நிர்வாகிகள் பூட்டி தொண்டர்களை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
- தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தேதி நீட்டிப்பு.
விருப்ப மனுக்களைப் பெற மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் விருப்பமனுவை பெறுவதற்கான தேதியை 13.1.2026 செவ்வாய்கிழமை மற்றும் 14.1.2026 புதன்கிழமை ஆகிய இருநாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதிமுக சார்பில் போட்டியிட நேற்று வரை விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
- எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட 7,187 பேர் விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
இதில், தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு வழங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 15.12.2025 முதல் 23.12.2025 வரையிலும், மற்றும் 28.12.2025 முதல் 31.12.2025 வரையிலும் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
அதன்பேரில், ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி 'தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகள் 'தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி', தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7,988 விருப்ப மனுக்களும், ஆக மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன.
- வருகிற 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம்.
- அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி வருகிற 15-ந்தேதி விருப்பமனுவை பெறலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
- தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்தல் கூட்டணி ஜனவரி மாத இறுதியில்தான் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க புதிது, புதிதாக அரசியல் கட்சிகள் களம் இறங்கி வருகிறது. இந்த புதிய அரசியல் கட்சிகளில் தொகுதிதோறும் பிரபலமாக உள்ள வேட்பாளர் பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
இதில் காங்கிரசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் மாதத்தில்தான் தேர்தல் நடைபெறும்.
தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் முன்பாகவே காங்கிரஸ் 30 தொகுதிக்கும் விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது.
இதன்மூலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்த தொகுதி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனது யுக்தி மூலம் தங்களிடம் உள்ள வேட்பாளர் பிரமுகர்களை தக்க வைக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
புதுச்சேரியை பொறுத்தவரை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் துறை அறிவிக்கும் வரை கட்சி தாவல்கள் சகஜமாகவே இருக்கும். இதனால் காங்கிரசின் புதிய யுக்தி கைகொடுக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.
- 10.12.2025 முதல் 18.12.2025 வரை விருப்பமனு பெறப்படுகிறது
- விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி ஆகியவை அப்படியே தொடருமா, மாறாக இவற்றில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விலகுமா என யூகங்களும், பேச்சுகளும் இப்போதே அடிபட தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதவில்,
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 7 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு வருகிற ஏப்ரல் 30-ந் தேதி நடைபெற உள்ளது.
- 70-க்கும் மேற்பட்ட கழகத்தினர் தங்கள் விருப்பமனுக்களை வழங்கினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் கண் டோன்மென்ட் நகரியத்தில் உள்ள 7 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு வருகிற ஏப்ரல் 30-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க சார்பில் போட்டியிட விரும்பி 70-க்கும் மேற்பட்ட கழகத்தினர் தங்கள் விருப்பமனுக்களை மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்-இடம் வழங்கினர். குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஜெகதளா பேரூராட்சி செயலாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின் நன்றி கூறினார்.






