என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் கட்சி தாவலை தடுக்க காங்கிரஸ் புதிய யுக்தி
- சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
- தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்தல் கூட்டணி ஜனவரி மாத இறுதியில்தான் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க புதிது, புதிதாக அரசியல் கட்சிகள் களம் இறங்கி வருகிறது. இந்த புதிய அரசியல் கட்சிகளில் தொகுதிதோறும் பிரபலமாக உள்ள வேட்பாளர் பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
இதில் காங்கிரசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் மாதத்தில்தான் தேர்தல் நடைபெறும்.
தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் முன்பாகவே காங்கிரஸ் 30 தொகுதிக்கும் விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது.
இதன்மூலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்த தொகுதி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனது யுக்தி மூலம் தங்களிடம் உள்ள வேட்பாளர் பிரமுகர்களை தக்க வைக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
புதுச்சேரியை பொறுத்தவரை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் துறை அறிவிக்கும் வரை கட்சி தாவல்கள் சகஜமாகவே இருக்கும். இதனால் காங்கிரசின் புதிய யுக்தி கைகொடுக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.






