என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக விருப்ப மனு"
- ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி 8 நாட்கள் தொடர்ச்சியாக விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்தோடு தலைமை கழகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினார்கள். 8 நாட்களில் 9 ஆயிரம் பேர் வரையில் விருப்ப மனுக்களை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் மேலும் 4 நாட்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம்.
- அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி வருகிற 15-ந்தேதி விருப்பமனுவை பெறலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விருப்ப மனு இன்று முதல் மார்ச் 1-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
- பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜனதா உறவை துண்டித்த அ.தி.மு.க. தனி அணியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளது.
அ.தி.மு.க.வுடன் சில அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகின்ற நிலையில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வினியோகம் இன்று தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரொக்கமாக பணத்தை கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினர்.
முதல்நாள் என்பதால் பலரும் மனுக்கள் வாங்குவதற்கு தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர். இதனால் அ.தி.மு.க. அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. எந்த தொகுதிக்கு போட்டியிட மனு பெறப்பட்டது என்ற விவரத்தை நிர்வாகிகள் பதிவு செய்தனர்.
தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு சென்று இருந்தனர்.
விருப்ப மனு இன்று முதல் மார்ச் 1-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளிலும் தொகுதி பங்கீடு, கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படுகிறது. இதனால் எந்த தொகுதிக்கு பணம் கட்டுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.






