என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. விருப்ப மனு - கால அவகாசம் நீட்டிப்பு
- கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்தனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ந்தேதி தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை விருப்ப மனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 15-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்ட நிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9,000-க்கும் மேற்பட்டோரிடம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






