என் மலர்
நீங்கள் தேடியது "இ ஸ்கூட்டர்"
- இவை மணிக்கு 60-99 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை.
- பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு புதுவரவு நிறுவனம் வின்ஃபாஸ்ட். சமீபத்தில் இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 மின்சார எஸ்.யூ.வி.க்களை அறிமுகப்படுத்திய வின்ஃபாஸ்ட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் பிரிவிலும் களமிறங்க தயாராகி வருகிறது.
2026 ஆம் ஆண்டில் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை இங்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதன் உலகளாவிய வரிசையில் இருந்து எந்த மாடல்களை உள்ளூர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள அந்நிறுவனம் ஏற்கனவே ஆய்வு நடத்தியது.
வின்ஃபாஸ்ட் தற்போது ஃபெலிஸ், கிளாரா நியோ, ஈவோ கிராண்ட், வெரோ எக்ஸ், வென்டோ எஸ் மற்றும் தியோன் எஸ் உள்ளிட்ட பல மின்சார ஸ்கூட்டர் மாடல்களை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்கிறது. இந்த ஸ்கூட்டர்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட அல்லது ஹப்-மவுண்டட் மோட்டார்கள் உள்ளன.

இவை மணிக்கு 60-99 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை. பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுகின்றன, சுமார் 160 கிமீ வரை செல்லும். இந்த விவரங்கள் வியட்நாமிய சந்தைக்கானவை. இவற்றில் சில இந்தியாவிற்காக மதிப்பீடு செய்யப்படலாம்.
அங்கு இந்த நிறுனம் ஸ்கூட்டரின் அன்றாட பயணத்திற்கு ஏற்ற தன்மை, மாறுபட்ட சாலை நிலைமைகளை சமாளிக்கும் திறன் மற்றும் இந்தியாவின் தட்பவெப்ப நிலைகளின் கீழ் பவர்டிரெய்னின் ஆயுள் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.
வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இந்திய வெளியீடு 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை புதிய மாடல்கள் 2026 பண்டிகை காலத்தை குறிவைத்து அறிமுகம் செய்யப்படலாம். இந்தப் பிரிவில் தற்போது டிவிஎஸ், ஏத்தர் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோவின் செட்டக் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா போன்ற பிரான்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர்.
- முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் அனைத்து திட்டங்களையும் என்.ஆர்.காங்கிரஸ்.,- பா.ஜ.க. கூட்டணி அரசு வேகப்படுத்தி வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாதத்தொகை ரூ.2 ஆயிரத்து 500 உயர்வு, மஞ்சள் ரேசன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் மாத உதவி தொகை, முதியோர், விதவை உதவி தொகை ரூ.500 உயர்வு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை ஆகிய திட்டங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை கவரும் வகையில் முதல்-அமைச்சரின் புதுமை பெண்கள் என்ற பெயரில் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ்,
* பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
* இந்த திட்டத்தில் பயன்பெற புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்ததன் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துகு்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
* ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர். நீடித்த நோய் அல்லது இ-ஆட்டோ மானியத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் விண்ணப்பதாரர் தகுதியற்றவர்.
* விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் கியர் இல்லாத அல்லது மோட்டார் சைக்கிள் கியர் கொண்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், முதுகலைப் பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* தூரமான பகுதிகளில் வசிக்கும் பணிபுரியும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பணிபுரியும் பெண்கள், வேலைக்கான போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு நடத்தப்பட உள்ளது. இ-ஸ்கூட்டரின் விலையில் 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் பி.எம்.இ.டிரைவ் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற பிறகு, அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். தேர்தலுக்கு முன் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
- ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும்.
தமிழகத்தில் 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து மானியம் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும். டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
- தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
- பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார்.
துபாய்:
துபாயில் குடியேறுவதற்காக போலந்து நாட்டைச் சேர்ந்த கஜேதன் ஹப்னர் என்ற வாலிபர், பெண் தோழியுடன் வந்தார். புதிதாக வீடு தேடிக் கொண்டிருப்பதால், தற்காலிகமாக துபாய் மரினா பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினர். அவர்கள் அப்பகுதியில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கும் வகையில் இ-ஸ்கூட்டர் ஒன்றை வாங்க அந்த வாலிபர் திட்டமிட்டு, இணையதளத்தில் தேடினார்.
அப்போது தனியார் நிறுவனம் ஒன்று 1,750 திர்ஹாமில் இ-ஸ்கூட்டரை விற்பனை செய்வதாக அறிவித்து இருந்தது. இதனை கஜேதன் ஹப்னர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். அதில், பொருளை டெலிவரி செய்யும் போது பணத்தை தருவதாக குறிப்பிட்டார்.
இந்த இ-ஸ்கூட்டரை டெலிவரி செய்வதற்காக அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது மோசின் நசிர் என்ற டெலிவரி ஊழியர் நேரில் சென்றார். அதனை பெற்றுக் கொண்ட கஜேதன் ஹப்னர் பணத்தை நசிரிடம் கொடுத்தார். அப்போது அவர் 1,750 திர்ஹாமுக்கு பதிலாக 17,050 திர்ஹாம் வழங்கினார். இதனை டெலிவரி ஊழியரும் எண்ணி பார்க்காமல் வாங்கி சென்றார். பின்னர் முகம்மது மோசின் நசிர் தினமும் பொருட்களை டெலிவரி செய்த பணத்தை எண்ணி பார்ப்பது வழக்கம். அன்று இரவில் அவர் பணத்தை எண்ணும் போது 15 ஆயிரம் திர்ஹாம் அதிகமாக இருப்பது தெரிந்தது.
இந்நிலையில் முகம்மது மோசின் நசிரின் தாயார் பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசினார். அப்போது இந்த விவரத்தை அவரிடம் தெரிவித்தார். அவரும் பணத்தை உடனடியாக கொடுத்தவரிடம் திருப்பி கொடுத்து விடு என தெரிவித்தார். இதற்கிடையே பொருளை வாங்கிய கஜேதன் ஹப்னர் தன்னிடம் இருந்த பணம் குறைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
அப்போது கஜேதன் ஹப்னர் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டெலிவரி ஊழியர் முகம்மது மோசின் நசிர் பேசினார். அப்போது, உங்களிடம் ஆன்லைன் பொருளுக்கு கூடுதலாக பணம் பெறப்பட்டது என விவரமாக கூறினார். அந்த பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார். பின்னர் மறுநாள் 15 ஆயிரம் திர்ஹாம் பணத்தை எடுத்து கொண்டு டெலிவரி ஊழியர், வெளிநாட்டு வாலிபர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்று நேரில் ஒப்படைத்தார்.
டெலிவரி இளைஞரின் நேர்மையை பாராட்டி அவருக்கு 300 திர்ஹாம் பரிசாக கஜேதன் ஹப்னர் வழங்கினார். டெலிவரி ஊழியர் அனுமதியுடன் போலந்து இளைஞரின் தோழி அவரது நேர்மையை கவுரவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியை பதிவாக வெளியிட்டார்.
தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.








