என் மலர்
நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் பஸ்கள்"
- தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
- எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த திட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா, ஒடிசா, குஜராத் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும், சண்டிகர், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2024-25-ம் ஆண்டிற்கான 4,588 எலெக்ட்ரிக் பஸ்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரூ.57 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்க உள்ளது. மீத தொகையை இயக்கப்படும் பஸ்களுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே அதற்கான தொகையை ஏற்கும்.
இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி புதுவை முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பொது போக்குவரத்தை மேம்படுத்த கவர்னர் கைலாஷ்நாதன் தீவிரம் காட்டி வருகிறார்.
மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பஸ்களை மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா எதிரேவும் மொரட்டாண்டிக்கு அருகே உள்ள நியூகோவின் டெப்போவிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் கண்டக்டர்களை நியமிக்கும். புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 24 மற்றும் நகரங்களுக்குள் இயக்கப்படும் பஸ்களுக்கு ரூ. 22 என கணக்கிட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள லாரி முனையத்தில் 3.5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அருகில் உள்ள துணை நிலையத்திலிருந்து கேபிள்கள் புதைக்கப்பட உள்ளது.
பணிமனை கட்டுவதற்கு ரூ. 12.75 கோடிக்கு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடும் பணி நடந்துவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே ஏற்கனவே புதுவையில் தனியார் பங்களிப்புடன் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- டிக்கெட் வருமானம், பஸ் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளலாம்.
- மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னை:
மத்திய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் 'பி.எம் மின்சார டிரைவ்' மற்றும் பி.எம். மின்சார பஸ் சேவை என்ற 2 திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் பி.எம். மின்சார பஸ் சேவை திட்டம் 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதற்காக மத்திய அரசு ரூ.57 ஆயிரத்து 613 கோடி ஒதுக்கியது. 2 பிரிவுகளாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் ஒரு பிரிவாக 10 ஆயிரம் மின்சார பஸ்கள் 169 நகரங்களில் இயக்கப்படும்.
40 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான மக்கள் தொகை நகரங்களுக்கு தலா 150 பஸ்களும், 5 லட்சம் முதல் 20 லட்சத்திற்கு தலா 100 பஸ்களும், 5 லட்சத்திற்கு கீழ் உள்ள நகரங்களுக்கு தலா 50 பஸ்களும் வழங்கப்படும்.
இந்த மின்சார பஸ்களை நிதி கொடுத்து வாங்கி பராமரித்து இயக்கும் பொறுப்பு தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. டெண்டர் மூலம் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2037-ம் ஆண்டு வரை அவர்கள் அந்த பஸ்களை இயக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு கட்டணம் என்ற அடிப்படையில் அந்த பஸ்கள் இயக்கப்படும் தூரத்திற்கு மத்திய அரசு பணம் வழங்கி விடும். அதே நேரத்தில் டிக்கெட் வருமானம், பஸ் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சார்ஜிங் நிலையம் அமைப்பது போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மாநில அரசு தான் பொறுப்பு. இருந்தாலும், அதற்கான நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கும்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 7 ஆயிரத்து 293 பஸ்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் 6,518 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.437 கோடி விடுவித்துள்ளது.
மத்திய அரசு, இந்த பஸ் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 நகரங்களை தேர்வு செய்துள்ளது. அந்த அடிப்படையில் கோவைக்கு 150 மின்சார பஸ்கள், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவற்றுக்கு தலா 100 பஸ்களும், அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகியவற்றுக்கு தலா 50 பஸ்களும் என மொத்தம் 900 மின்சார பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு, பிரதமரின் இந்த மின்சார பஸ்களை தங்களது மாநிலத்திற்கு வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறும் போது, பிரதமர் மின்சார பஸ்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 9 சதவீத பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால் தமிழக அரசுக்கு இந்த திட்டத்தின் கீழ் பஸ்கள் பெற விருப்பம் இல்லாததால் அவர்களிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றார்.
ஏன் வேண்டாம்? அமைச்சர் விளக்கம்
பி.எம் மின்சார டிரைவ் திட்டத்தில் 40 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதாராபாத், அகமதாபாத், கொல்கத்தா, சூரத், புனே ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் இந்த நகரங்களில் 14 ஆயிரம் மின்சார பஸ்கள் வாங்க மத்திய அரசு நிதி உதவி வழங்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் சென்னைக்கு மின்சார பஸ்கள் பெற வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு செய்து விட்டது.
இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்கள் அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தினால் நிதி சரியாக வராது. பெயர்கள் மட்டும் அவர்களுடையதாக இருக்கும். எனவே தான் தமிழக அரசு சுயமாகவே மின்சார பஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றார்.
- எலெக்ட்ரிக் பஸ்கள் 25 பேர் அமரக்கூடிய வகையிலும் 25 பேர் நின்று பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- 2 புறமும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தற்போது 12 இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. திருமலை பஸ் நிலையத்தில் இருந்து மலை பகுதி முழுவதும் பஸ் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்களை ஏற்றி இறக்கி செல்கின்றன. தற்போது இயக்கப்படும் பஸ்கள் டீசலில் இயங்கி வருகின்றன.
திருமலையில் அதிகாலை மாசு ஏற்படுவதை குறைக்க தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பைகள் பிளாஸ்டிக் அல்லாத காகிதங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள் உபயோகப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள மேகா என்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் கிரீன்டெக் நிறுவனம் திருமலையில் இயக்குவதற்காக 10 எலெக்ட்ரிக் பஸ்களை தயாரித்துள்ளது. இதில் 5 பஸ்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் 5 பஸ்கள் கொண்டுவரப்பட உள்ளது. இந்த பஸ்கள் 25 பேர் அமரக்கூடிய வகையிலும் 25 பேர் நின்று பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 புறமும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் திருமலைக்கு புதிதாக வரும் பக்தர்கள் தங்கள் இறங்க வேண்டிய இடத்தை கண்டறிந்து இறங்கிக்கொள்ள இந்த வசதி உதவியாக இருக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருகிற 27-ந்தேதி காலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபாரெட்டி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த இலவச பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 58,955 பேர் தரிசனம் செய்தனர். 25,113 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






