என் மலர்
நீங்கள் தேடியது "விஜய பிரபாகரன்"
- முதற்கட்டமாக வருகிற 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சில தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.
- ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது.
கோவை:
கோவையில் நடந்த விழாவில் தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தே.மு.தி.க சார்பில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறோம். 3-ந்தேதி கும்மிடிப்பூண்டியில் எங்களது பிரசாரம் தொடங்குகிறது. 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் இந்த பிரசார பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
தமிழகம் முழுவதும் இந்த சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து பேச உள்ளார்.
முதற்கட்டமாக வருகிற 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சில தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.
கட்சியை வலுப்படுத்துவதற்கும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும்.
ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் நாங்கள் யாருடன் கூட்டணி என கூறுவோம் என ஏற்கனவே பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பது தெரியும்.
வருகிற 5 மாதங்களும் கட்சி பணிகளையும், மக்கள் பிரச்சனைகளையும், கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதும் தான் எங்களுடைய எண்ணம். அதனை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.
கமல்ஹாசன் எம்.பி. ஆனதை நாங்கள் வரவேற்கிறோம். நீண்ட நாட்கள் சினிமா துறையில் சாதித்து விட்டு தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு தி.மு.க. சார்பில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனையை கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டு பிரதமர் மோடியை தே.மு.திக சார்பில் யாரும் சந்திக்கவில்லையே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நாங்கள் இருக்கிறோமா? என கேள்வி எழுப்பினார்.
நாங்கள் கூட்டணியில் இருக்கும் பொழுது பிரதமர் எங்களை வந்து பார்க்கலாம் அல்லவா? பிரதமரை மரியாதை நிமித்தமாக தேவையான சமயங்களில் சந்திப்போம். எங்களுக்கு எப்போது தேவையோ அப்போது சந்திப்போம். பிரதமர் மோடி தற்போது பிரதமராக வந்து மக்கள் பணி செய்துள்ளார். ஜனவரி மாதம் கூட்டணி முடிவானவுடன் மற்றவற்றை கூறுவோம்.
தே.மு.தி.க பார்வையில் தமிழக வெற்றிக்கழகம் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு தே.மு.தி.க பார்வை மக்களை நோக்கி மட்டும் தான் உள்ளது. வேறு எதை நோக்கியும் இல்லை என்றார்.
குடும்ப நிகழ்ச்சிக்கு செல்கிறாயோ இல்லையோ, ஆனால் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என எனது அப்பா எப்போதுமே சொல்லுவார். அப்பாவின் வார்த்தைப்படி நாங்கள் பயணப்பட்டு வருகிறோம். தேதி கொடுத்து விட்டால் கண்டிப்பாக வந்து விட வேண்டும் என கூறி துளசி வாசம் மாறும். ஆனால் தவசி வாக்கு மாறாது என தந்தையின் வசனத்தை மேற்கொள் காட்டினார்.
நீங்கள் விஜயபிரபாகரன் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அப்பா நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை. நம்முடனே தான் இருக்கிறார். அவர் வீட்டு சென்ற வேலைகளை மகன்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
தே.மு.தி.க என்பது கிளப் இல்லை. அது ஒரு கட்சி. கேப்டன் விஜயகாந்தின் கனவும், ரோட்டரி கிளப் உங்களின் கனவும் ஒன்றுதான். நீங்கள் கிளப்பாக செயல்படுகிறீர்கள். அப்பா கட்சியாக அதனை செய்தார். அப்பா விட்டு சென்ற செயல்களை நான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அந்த தேரை இழுக்க நான் தயாராக இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்யும் போது அவர்களது முகத்தில் இருக்கும் புன்னகை தான் எங்களது மகிழ்ச்சியே. முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது, முடியும் என்பது அறிவாளிக்கு சொந்தமானது என அப்பா கூறுவார். இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை அழைத்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
- அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
- மாலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று முதல் 4 நாட்களுக்கு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி என 7 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இன்றைய கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி, தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கிளைக் கழகங்களை வலுப்படுத்துவது, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், வார்டு, பகுதி, வட்டம் பேரூர் வார்டுகளுக்கு சார்பு அணி நிர்வாகிகள் தேர்வு செய்வது, பூத் முகவர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:-
இன்று முதலே நீங்கள் அனைவரும் உங்களுக்கான பணிகளை தொடங்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் 2026 தேர்தலுக்கான பணியாகவே இருக்க வேண்டும்.
போனில் பேசி நான் அதைச் செய்துவிட்டேன், இதை செய்து விட்டேன் என்று கூறாமல் களத்திற்கு சென்று ஒவ்வொருவரும் வெற்றி வீரர்களாக பணியாற்ற வேண்டும்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை முழுமையாக ஆராய்ந்து அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் வரை அனைவரையும் நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவே இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை அனைவரும் தெரிவியுங்கள். எங்கள் கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். நமது பணிகள் அனைத்தும் தேர்தலில் வெற்றி பெறும் வகையிலேயே அமைய வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும் சட்டமன்றத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை கேட்டு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களாவது வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்ல வேண்டும்.
அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும் என்று ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்தார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (சுமார் 4 ஆயிரம் ஓட்டுகள்)தோல்வியை தழுவிய விஜயபிரபாகரனை மீண்டும் அதே மாவட்டத்தில் களமிறக்குவதற்கு அம்மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை தொகுதியில் தான் விஜயபிரபாகரனுக்கு மற்ற சட்டமன்ற தொகுதிகளை விட அதிக அளவில் வாக்குகள் கிடைத்துள்ளது.
இதனை மையமாக வைத்து விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் விஜயபிரபாகரனை அருப்புக்கோட்டை தொகுதியில் களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்கிற கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதன்மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் அருப்புக்கோட்டை தொகுதியை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெறுவதற்கும் தே.மு.தி.க. தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் துணை செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யூ.சந்திரன், சுபாரவி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
தே.மு.தி.க.வில் மொத்தம் 84 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் உள்ளனர்.
மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
- கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும்.
- என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம்.
புதுக்கோட்டை:
தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தே.மு.தி.க.வை கட்சி ரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த அறிவிப்பு தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியாகும்.
கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும். ஆனால், அவருடைய ஆசைகளையும், கொள்கைகளையும் நாங்கள் நிச்சயம் வென்றெடுப்போம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதனை அவருடைய நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.
த.வெ.கவுடன் கூட்டணி அமைப்பது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி இல்லை. அவர் அண்ணன் தானே.
விஜயகாந்த் குருபூஜை சமயத்திலும், 'கோட்' திரைப்படத்தின்போதும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது கூட்டணி விஷயங்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம். எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. ஆனால் அண்ணனுக்கு 50 வயது.
அவர் என்னை விட மிகவும் சீனியர். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பல லட்சம் இளைஞர்கள் அவருக்கு பின்னால் இருப்பது அவரது பலமாக நான் பார்க்கிறேன் என பதில் அளித்தார்.
- மாநில அளவில் துணைச்செயலாளர் பதவிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- அனகை முருகேசன் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர் ஆவார்.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து தே.மு.தி.க.வில் புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா நியமித்துள்ளார்.
மீண்டும் பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பொருளாளராக எல்.கே. சுதீஷ், செயலாளராக பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளராக விஜய காந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில அளவில் துணைச்செயலாளர் பதவிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், இந்த புதிய பதவிகள் நியமனத்தால் இரண்டு தே.மு.தி.க. முன்னாள் எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.
தே.மு.தி.க. செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இருந்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர் ஆவார்.
விஜயகாந்த் தே.மு.தி.க. தலைவராக இருந்தபோது பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
இந்த நிலையில் மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவருக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பொறுப்பு வகித்து வந்த அவர் இந்த முறை மீண்டும் அதுபோன்ற ஒரு பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அதுபோன்ற பதவி எதுவும் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக அனகை முருகேசன் கட்சியிலிருந்து விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இது பற்றி அனகை முருகேசனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-
கேப்டன் மன்றம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே நான் பணியாற்றி வருகிறேன். 43 ஆண்டுகளுக்கும் மேலாக மன்றம் மற்றும் தே.மு.தி.க. பணிகளில் ஈடுபட்டு கட்சிக்காக விசுவாசத்தோடு செயல்பட்டு வருகிறேன். விஜயகாந்த் தலைவராக இருந்த போது பொருளாளராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்திருக்கிறேன்.
தற்போது மாநில அளவில் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்னைவிட இளையவர்கள்தான்.
மாநில அளவில் பொறுப்பு கிடைக்காததில் எனக்கு சிறிய மனம் வருத்தம் உள்ளது. என்னுடன் பயணிக்கும் தே.மு.தி.க.வினருக்கும் அந்த வருத்தம் உள்ளது.
இதற்கெல்லாம் கட்சி வேண்டாம் என்று வெளியில் செல்வதற்கு நான் தயாராக இல்லை. தே.மு.தி.க.விலேயே தொடர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான நல்ல தம்பியும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்ல தம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதவியை நல்ல தம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதாவுக்கு நல்ல தம்பி பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தர்மபுரியில் நடந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த கேப்டனின் மறுஉருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புதம்பி விஜயபிரபாகரனை கழக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டசபையில் கழக தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.
எனவே எங்களின் காவல் தெய்வம் அண்ணியின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை, என்றைக்கும் நான் கழகத்தின் கடைக்கோடித் தொண்டன் எனபதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும்.
நீங்கள் வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத் தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மனவருத்தத்திலும் கூறவில்லை. மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நல்லதம்பி கூறியுள்ளார்.
தே.மு.தி.க.வில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தே.மு.தி.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தே.மு.தி.க.வில் இருந்து ஏற்கனவே பலர் விலகி மாற்று கட்சிகளில் சேர்ந்துள்ள நிலையில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர்.
- என்னைக்கு கரை வேட்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்
அரசியலில் முதல்முறையாக பேன்ட் சர்ட் போட்டது நான்தான் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தருமபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், "கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர். அரசியலில் முதன் முதலில் பேன்ட் - ஷர்ட் போட்டவன் நான் தான். அதற்கு அப்புறம்தான், அண்ணாமலை அண்ணணா இருக்கட்டும், சீமான் அண்ணணா இருக்கட்டும், முதலமைச்சர் ஸ்டாலின் முதல் விஜய் வரை எல்லாரும் பேன்ட்-ஷர்ட்தான் போடுறாங்க. அதனால, லுக்-அ பார்க்காதீங்க. உள்ளத்தை பாருங்க. என்னைக்கு கரை வேஷ்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்" என்று தெரிவித்தார்.
- தே.மு.தி.க. பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டார்.
இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர், தருமபுரி நகர செயலாளர் சுரேஷ், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.கே.கணேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.கே.குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அவைத் தலைவர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட துணை செயலாகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலாளர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்.
- விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க.வும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது.
தேர்தல் களத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கேற்ப முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்துக்கான தேதி பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார். தற்போது பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதையொட்டி தே.மு.தி.க.வில் செயல் தலைவர் பதவி என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் பிரேமலதா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார். அவரை இளைய கேப்டன் என கட்சியினர் அழைத்து வருகிறார்கள். தே.மு.தி.க.வில் இளைஞர் அணியில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவியை வழங்குவது பற்றியும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.
- நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது.
சென்னை:
தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்தின் வருகையும் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியும் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நடந்தது நேர்மாறாக அமைந்துவிட்டது.
திரை உலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்த விஜயகாந்த் அரசியலிலும் கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அறிமுகத்தோடு வந்தார்.
2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை அவர் தொடங்கியதும் அவர் அறிவித்த திட்டங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மாற்று அரசியலுக்கான துவக்கமாகவே மக்கள் எதிர்பார்த்தார்கள்.
2006-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார்கள். விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
அதேநேரம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உருவானது. 2009 பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதியிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
அரசியல் களத்தை உணர்ந்த விஜயகாந்த் 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் அ.தி.மு.க.வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி நீடிக்கவில்லை.
அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வென்றது.
அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவானது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனாலும் அந்த கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்கள். அதுவும் கைகொடுக்கவில்லை.
இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. சரியாக பேச முடியவில்லை. எழுந்து நிற்கவும் சிரமப்பட்டார். வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எதிர்பார்த்த பலன் இல்லாமல் போனது.
அதைதொடர்ந்து கட்சியில் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தினார். அவரது மகன் விஜயபிரபாகரனும் கட்சி பணியில் இறங்கினார்.
நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது. சுமார் ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.
மீண்டும் கட்சியை வலிமைப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள்.
பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராகவும், விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கியும் கட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள். விரைவில் கூட்டப்பட இருக்கும் பொதுக்குழுவில் இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
தே.மு.தி.க. பா.ஜனதா கூட்டணியில் இருந்து இதுவரை வெளியேறவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியா? தி.மு.க. கூட்டணியா? என்று யோசித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது.
- அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கு மார்த்தாண்டம், தக்கலை, ஞாறாம்விளை, திக்குறிச்சி உட்பட பல பகுதிகளில் தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது விஜய் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது. அது செயல் பாட்டில் வந்தால் வர வேற்கலாம். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருக்கிறது. குமரி மாவட்டம் உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கனிமவள கடத்தல் நடைபெற்ற போது வழக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியவர்கள் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கனிமவள கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
- இவர் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50 சென்ட் கலந்து கொள்கிறார்.

விஜய பிரபாகரன்
சர்வதேச அளவில் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன். தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட "Get Rich or Die Tryin" பட்டித்தொட்டி எங்கும் சென்றடைந்து. இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள "In da club", "p.i.m.p" மற்றும் "candy shop" போன்ற பாடல்கள் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.
இவரது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 -ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது. இதனை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து 50 சென்ட்-இன் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து விஜய பிரபாகரன் கூறும்போது, திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை விஜயகாந்திற்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும், கலை துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.
- விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம்
- திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
தேமுதிகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்பங்களை தெரிவித்தனர். பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.
- வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன் பட்டியில் நடந்த தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று விஜய பிரபாகரன் பேசியதாவது:-
தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து பணத்தை சுரண்டி வளமாக வாழ்ந்து வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.
பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம். அமைச்சர் உதயநிதியின் தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை முதலமைச்சராக இருந்தவர்.

உதயநிதியின் தந்தை ஸ்டாலின் முன்னாள் மேயர், தற்போதைய முதலமைச்சராக உள்ளார். அண்ணாமலைக்கு பா.ஜ.க. கட்சி உள்ளது. ஆனால் இது போன்ற எந்த பின்புலமும் இல்லாமல் விஜயகாந்த் மக்களை நம்பியே தேர்தலை சந்தித்தார். அதே போல் வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம். நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். தயவு செய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். நான் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு உள்ளது. தேனி தொகுதி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். யார் போட்டியிடுவார் என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய பிரபாகரன் மைக்கை எடுத்து பேசத் தொடங்கியதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியில் சிறிது நேரம் அருகில் இருந்த நிர்வாகிகளிடம் இந்த நேரத்தில் மின் தடை ஏற்படுமா எனக் கேட்டார். மின் தடை ஏற்படாது என்று தொண்டர்கள் தெரிவித்தனர். நான் பேச ஆரம்பிக்கும் நேரத்தை அறிந்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இது போன்ற பல இடையூறுகள் ஏற்படுத்தினாலும் நாம் சோர்ந்து விடக்கூடாது என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.






