என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shirt"

    • கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர்.
    • என்னைக்கு கரை வேட்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்

    அரசியலில் முதல்முறையாக பேன்ட் சர்ட் போட்டது நான்தான் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    தருமபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், "கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர். அரசியலில் முதன் முதலில் பேன்ட் - ஷர்ட் போட்டவன் நான் தான். அதற்கு அப்புறம்தான், அண்ணாமலை அண்ணணா இருக்கட்டும், சீமான் அண்ணணா இருக்கட்டும், முதலமைச்சர் ஸ்டாலின் முதல் விஜய் வரை எல்லாரும் பேன்ட்-ஷர்ட்தான் போடுறாங்க. அதனால, லுக்-அ பார்க்காதீங்க. உள்ளத்தை பாருங்க. என்னைக்கு கரை வேஷ்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்" என்று தெரிவித்தார். 

    • சுதந்திர தின விழாவின் போது பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
    • சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மைதானத்திற்கு கருப்பு உடைகள் அணிந்தபடி மாணவ மாணவிகள் சிலர் மைதானத்திற்குள் வந்தனர்.

    நெல்லை:

    சுதந்திர தின விழாவின் போது பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த ஸ்பீக்கர் சிலவற்றில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக வேறு ஸ்பீக்கர்கள் புதிதாக கொண்டுவரப்பட்டு மீண்டும் கலை நிகழ்ச்சி தொடங்கியது.இதன் காரணமாக கலை நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மைதானத்திற்கு கருப்பு உடைகள் அணிந்தபடி மாணவ மாணவிகள் சிலர் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது அங்கு நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடை அணிந்து வந்ததாக நினைத்து அந்த மாணவ- மாணவிகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கருப்பு நிற உடைகள் அணிந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.

    ×