search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron shop"

    • இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம்- தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சீதாராமன் என்ற மணி கண்டன் (வயது 35). இவர் திருமங்கலம்- மதுரை மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடை யை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக் கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். கூட்டாளிகள் வெளியில் நின்று கண்காணிக்க ஒருவர் மட்டும் கடையின் மேல்புற ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தார்.

    பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 2 தங்க நாணயங் களை திருடிக் கொண்டு கூட்டாளிகளுடன் தப்பி னார்.

    மறு நாள் கடையை திறக்க வந்த சீதாராமன் பணம், தங்க நாணயங்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் திருமங் கலம் நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தி னர். அப்போது கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப் பட்டது. அதில் கடைக்குள் மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகி யுள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக் கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    புழலில் நள்ளிரவில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்குன்றம்:

    புழல் கேம்ப் பஸ்நிலையம் அருகில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்பத் ராம் (49). ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார்.

    நள்ளிரவு அந்த கடையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    செங்குன்றம் பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் வந்தன. அதற்குள்ளாக இரும்புக்கடையில் பற்றிய தீ முழுவதும் பரவியது. கடையின் முன் கதவுகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது தொழில் போட்டியில் யாரும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்துகிறார்கள்.

    வெளியூரில் உள்ள கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கிருந்து புழல் திரும்புகிறார்.

    ×