search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரும்பு கடை தீப்பிடித்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் - போலீசார் விசாரணை
    X

    இரும்பு கடை தீப்பிடித்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் - போலீசார் விசாரணை

    புழலில் நள்ளிரவில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்குன்றம்:

    புழல் கேம்ப் பஸ்நிலையம் அருகில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்பத் ராம் (49). ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார்.

    நள்ளிரவு அந்த கடையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    செங்குன்றம் பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் வந்தன. அதற்குள்ளாக இரும்புக்கடையில் பற்றிய தீ முழுவதும் பரவியது. கடையின் முன் கதவுகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது தொழில் போட்டியில் யாரும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்துகிறார்கள்.

    வெளியூரில் உள்ள கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கிருந்து புழல் திரும்புகிறார்.

    Next Story
    ×