என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indepndence day"

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;
    • இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘புதிய பாரதம்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தினம் 'புதிய பாரதம்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    உலகின் மிகப் பழமையான குடியரசுகளைக் கொண்டிருந்தது இந்தியா. இது ஜனநாயகத்தின் தாய் என ஒப்புக் கொள்ளப்படுகிறது.

    சுதேசி என்ற கருத்து, மேக்-இன்-இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற முயற்சிகள் நமது தேசிய நோக்கங்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றன. இந்திய பொருட்களை வாங்கிப் பயன்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். உள்ளூர் பொருட்களை மக்கள் உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது சுதேசி இயக்கத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் செயலாகும்.

    இந்த மாத தொடக்கத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி, நமது நாடு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடியது. இது நாட்டின் நெசவாளர்களையும் அவர்களின் தயாரிப்புகளையும் கவுரவிப்பதற்காக 2015 முதல் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும். 1905-ம் ஆண்டு நமது சுதந்திரப் போராட்டத்தின்போது தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் இந்த நாளை கொண்டாடி வருகிறோம்.

    இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம். நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் வறுமையில் இருந்தது. அதன்பின் 78 ஆண்டுகளில், அனைத்துத் துறைகளிலும் நாம் அசாதாரண முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா சுயசார்பு தேசமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது, மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.

    காலநிலை மாற்றத்தின் சவாலுக்கு பதிலளிக்க நாமும் மாறவேண்டும். நமது பழக்கவழக்கங்களையும் நமது உலகக் கண்ணோட்டத்தையும் மாற்ற வேண்டும். நம் அனைவரின் பங்களிப்புடன், இயற்கையான முறையில் செழிப்பான வாழ்க்கையை வழங்கும் ஒரு கிரகத்தை எதிர்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வோம் என தெரிவித்தார்.

    • ரூ.34 லட்சத்து 36ஆயிரத்து 633 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • சிக்கண்ணா அரசு கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது.இதில் கால்பந்து, ஆக்கி, கபடி, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள், தனி நபா் போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    முதல் நிகழ்வாக உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கேரம் போட்டி நடைபெற்றது. கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா போட்டிகளை தொடங்கிவைத்தாா்.இதில் இரட்டையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 17 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 21 பள்ளிகளும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 11 அணிகளும் கலந்து கொண்டன.

    ஒற்றையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 18 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 பள்ளிகளும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 13 பள்ளிகளும் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற முடியும். 

    • சுதந்திர தின விழாவின் போது பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
    • சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மைதானத்திற்கு கருப்பு உடைகள் அணிந்தபடி மாணவ மாணவிகள் சிலர் மைதானத்திற்குள் வந்தனர்.

    நெல்லை:

    சுதந்திர தின விழாவின் போது பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த ஸ்பீக்கர் சிலவற்றில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக வேறு ஸ்பீக்கர்கள் புதிதாக கொண்டுவரப்பட்டு மீண்டும் கலை நிகழ்ச்சி தொடங்கியது.இதன் காரணமாக கலை நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மைதானத்திற்கு கருப்பு உடைகள் அணிந்தபடி மாணவ மாணவிகள் சிலர் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது அங்கு நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடை அணிந்து வந்ததாக நினைத்து அந்த மாணவ- மாணவிகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கருப்பு நிற உடைகள் அணிந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.

    ×