search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executive committee meeting"

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏவி.சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு, இளைஞரணி மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

    கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி வருகிற 17-ந் தேதி சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு, இளைஞர் அணி செயலாளரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் வெள்ளை சீருடை அணிந்து கலந்து கெள்ள வேண்டும் என்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்பட செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள், உள்ளாட்சி, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் குமுதா நன்றி கூறினார்.

    • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை: 

    ராணிப்பேட்டையில் நாளை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாளை மாலை 4 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்தும், வாக்குச்சாவடி,பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் சேகரித்தல் குறித்தும், கட்சிவளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • பள்ளி ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு தனிதேர்வு வைக்க வேண்டும்.
    • புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுசெயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி யினுடைய உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன் வரவேற்றார்.

    உடற்கல்வி இயக்குனர்கள் சம்பந்தம் ,செல்வ கணேசன், எஸ்.ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் டி.ஆர்.செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பெஸ்ட் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் சிறப்புரையாற்றினார்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு என தேர்வு தனியாக வைக்கப்பட வேண்டும்.

    தமிழகம் முழுவதும் உள்ள தொகுப்புகுதிய அடிப்படையில் பணியாற்றக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர பணி அளிக்க வேண்டும்.

    ஆண்டுதோறும் 200 உடற்கல்வி துறை ஆசிரியர்களை புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பிவைத்திட முடிவு செய்யப்பட்டது.

    ஏற்பா டுகளை திருவெண்காடு சு.சு.தி ஆண்கள் பள்ளியினுடைய உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செல்லதுரை செய்திருந்தார்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் வி.என். உலகநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சருமான ஆர்.காந்தி, ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம..எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அரக்கோணம் ஒன்றிய தலைவர் நிர்மலா சௌந்தர், மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர்கள் வில்சன், அன்பழகன்,கீதா, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, செயற்குழு உறுப்பினர் கண்ணையன், தக்கோலம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான எஸ்.நாகராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய ஒன்றிய பொருளாளர் ஜி.டில்லிபாபு நன்றி கூறினார்.

    • இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார் .இந்துமுன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் மணலி மனோகர், இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர்கள் டாக்டர் த.அரசுராஜா, நா.முருகானந்தம், மாநில துணை பொதுச் செயலாளர் சக்தி வேலன், மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா, நெல்லை கோட்ட தலைவர் தங்கமனோகர், ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இந்து ஆட்டோ முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணி, செல்வகணேஷ்,மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்தர் மற்றும் ஆட்டோ தொழிலாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • திருப்பத்தூரில் நாளை சிவகங்கை மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாரும், அமைச்சருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூரில் நாளை (3-ந் தேதி) சிவகங்கை மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல், சேர்த்தல் தொடர்பான பணிகள், கழக வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.அமலு விஜயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ,துணை மேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 22-ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது.

    இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை சிறப்பாக நடத்திய முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, மகளிர் உரிமை மாநாடு வெற்றி பெற மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்த கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தி.மு.க. செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது.

    மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார். நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பாராளுமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணி களை செய்ய வேண்டும், வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளி லும் வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அன்டன் செல்லத்துரை, மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜிலா சத்தியானந்த், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டை யப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வின்சென்ட் மணிதுரை, துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, கவுன்சிலர்கள் நித்ய பாலையா, சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டி யன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுக ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

    அதன்படி அன்று ராணிப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2ஆயிரத்து 500 பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதில் உள்ளாட்சி பிரதிநிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    வருகிற 17-ந்தேதி கந்தனேரியில் நடைபெறும் நடைபெறும் முப்பெரும் விழாவில் நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவ ட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.

    வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முப்பெரும் விழாவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராணி ப்பேட்டை மாவட்டத்தில் விழா நடைபெறாத பகுதிகளிலும் சிறப்பாக நடத்திட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய , நகர,பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
    • அமைச்சர் ஆர். காந்தி அழைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் , கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நாளை 10-ந்்தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் தி.மு.க.முப்பெரும் விழா, பவள விழா குறித்தும்,வாக்காளர் பட்டியல் , வாக்குச்சாவடி சரிபார்த்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாது பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி கூட்டத்திற்கு வரவுள்ளதை முன்னிட்டு விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், செல்வமணி ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

    தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட செயலாளர், நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பா ளர்கள், மாவட்ட பிரதி நிதிகள், கட்சி முன்னோடி கள் கலந்து கொள்கின்றனர்.

    கூட்டத்தில் விருதுநகரில் நடைபெற உள்ள இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • பிரியங்கா உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மன்மோ கன்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரியங்கா காந்தி வதேராவும் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோனி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், அஜய் மாக்கன், ப.சிதம்பரம் ஆகியோரும் புதிய செயற் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    தீபாதாஸ் முன்ஷி, சையத் நஸீர் ஹுசைன், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட புதிய முகங்களுக்கும் செயற்குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. சோனியாவின் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பிய சசி தரூர், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சச்சின் பைலட் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    ×