search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்
    X

    கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்

    • கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார்.
    • கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரவேணு,

    கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி மற்றும் பொருளாளர் மரியம்மா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமதுசலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார். கூட்டத்தில் கோத்தகிரி கோவில் மேடு பகுதியில் பேரூராட்சியின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கவும், அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை சந்திப்பில் தெருவிளக்கு அமைக்கவும், கோத்தகிரி விநாயகர் கோவில் முதல் டானிங்டன் வரை செல்லும் நீரோடையில் குப்பை கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முகமது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பிரேம்செபாஸ்டியன், லெனின்மார்க்ஸ் ஜார்ஜ் பால், பிரேம் சதீஷ், திரைசா, லலிதா, சங்கீதா யசோதா, விக்டோரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச்செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.

    Next Story
    ×