என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்குழு கூட்டம்"

    • ராமதாஸ் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாமகவில் ராமதாஸ் அணியினரின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

    ராமதாஸ் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியிடம், "அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?" என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    அப்போது அவர்," அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்" என ஜி.கே.மணி பதில் அளித்துள்ளார்.

    • ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நியமன பொது செயலாளராக முகமது சலீம், இணைசெயலாளராக வினோபாபோப், கூடுதல் செயலாளராக பீட்டர், செயற்குழு உறுபினராக சுரேஸ், சிவகிருஸ்னா ஆகியோர் நியமனம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி. செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பீட்டர், வினோபாபோப், லெனின்மார்க்ஸ், சிவகிருஸ்னா, கிரேஸி, ரோஸ்லின், லலிதா, யசோதா, விக்டோரியா, முகமது இஸ்மாயில் மற்றும் வால்டர், பிரேம்செபாஸ்டியன், இணை செயலாளர் கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமையில் நடந்தது. 

    கூட்டத்தில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டத்தின் படி அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற கூற்றை ஏற்றுக் கொண்டோம்.கொலை குற்றவாளிகளை பொதுத்தலங்களில் உலாவிடுவது சரியல்ல. அவர்களை குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும். மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்.

    சிறு குறு தொழில் நிறுவனங்களை வயிற்றில் அடிப்பது போல் மின்சார கட்டண உயர்வு மிகப்பெரிய அளவிலே பாதிப்பைஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவினாசி -அத்திக்கடவு நீர் திட்டத்தை விரைவாக நிறைவு செய்து முழுமையான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்திட வேண்டும்.

    காங்கேயம் பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான காங்கேயம் பசுமாடுகளுக்கான என ஒரு ஆராய்ச்சி மையத்தை அரசாங்கமே நிறுவ வேண்டும் என்பதைஇந்த கூட்டத்தின் வாயிலாககேட்டுக் கொள்ளப்படுகிறது.திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

    கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். 1 முதல் 3-ம் வகுப்பு வரை நடைபெறும் எண்ணும் எழுத்தும் செயல்பாடுகளில் உருவாக்க மதிப்பீடு செய்வதில் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வருவதை கைவிட வேண்டும். பொது மாறுதல் விதிமுறைகளுக்கு மாறாக தற்போது தொடக்க கல்வித்துறையில் நடைபெற்று வரும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இதில் பள்ளிப்பாளையம் வட்டார செயலாளர் தன்ராஜ், மோகனூர் வட்டார செயலாளர் சரவணன், பரமத்தி வட்டார தலைவர் சாந்தி, கொல்லிமலை வட்டார தலைவர் தமிழழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மலர்விழி நன்றி கூறினார்.

    • திருப்பத்தூரில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கொத்தனார், சித்தாள் போன்றவர்களை கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்ய கட்டாயம் அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 2-வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மண்டல தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் கட்டிட சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார்.கூட்டத்தில் பொறியாளர்கள் மத்தியில் கட்டிட பணிகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொறி யாளர்கள் கையாள வேண்டிய விதிமுறை கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

    பொறியாளர் கவுன்சில் அமைத்திடவும், கட்டிட பொருட்களின் விலை வாசியை கட்டுப்படுத்தி அதற்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திடவும், மாவட்ட பொறியாளர்கள் திட்ட குழுவில் பதிவு பெற்ற பொறி யாளர்களை குழுவில் நியமனம் செய்ய வேண்டும் என்று பல்ேவறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.

    மேலும் ஒவ்வொரு பகுதியிலும் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்த னார், மெய்காட்டள் (உதவி யாளர்) சித்தாள் போன்ற வர்களை கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்ய கட்டாயம் அறிவுறுத்த வேண்டும் என்று பொறியா ளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாநில செயலாளர் குழந்தைவேலு, பொருளாளர் சிவக்குமார், நியமன அலுவலர் ராமநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர்கள், மாநில மண்டல நிர்வாகிகள் என மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருப்பத்தூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் கண்ணன், முன்னாள் கட்டிட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.இளங்கோ வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன், பரத், தேவேந்திரன், கண்ணதாசன், சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் எம். கே.முரளி, மாநில பொதுகுழு உறுப்பினர் கிரிகுமரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நெடுமாறன், எஸ்.பி.சண்முகம், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் புல்லட் ராதாகிருஷ்ணன், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் பகவான் கார்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எல்.எஸ்.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் பூண்டி மோகன், ரஜினி சக்ரவர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், வருகிற 23-ம் தேதி திங்கட்கிழமை அன்று ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம். கே.முரளி இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது ஆற்காடு பஜார் வீதியில் கால்வாய் மேல் கல்வெட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் உயரமாக போடப்பட்டுள்ள கல்வெட்டு அதன் உயரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் ஞானசெளந்தரி நன்றி கூறினார்.

    • ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
    • செயற்குழுக் கூட்டத்தை ஓசூரில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.

    கூட்டட்திற்கு மாவட்டத் தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், இரங்கல் தீர்மானம் வாசித்து, கடந்த கால சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

    இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்&அமைச்சர் அனைத்து மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்த தொகை ஒதுக்கீடு செய்தமைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வது. கிருஷ்ணகிரியில் முதலாவது புத்தகத் திருவிழாவை நடத்தவும், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்வது.

    ஓசூர் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு, 90 சதவீத பணியும், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தவருக்கு 10 சதவீதம் பணியும் வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்து ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாநில செயற்குழுக் கூட்டத்தை இம்மாவட்டதின் சார்பில் ஓசூரில் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தமிழக மாணவர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாணவர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கோகுல்நாத் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான அ.மா.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளரும் கைனூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோ.உமாமகேஸ்வரி, மாணவர் சங்கம் மாநில செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உடனடியாக தமிழக பாட்டாளி மாணவர் சங்கம் அமைப்பை உருவாக்க வேண்டும்

    தனியார் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்தை அரசு நிர்ணயித்த அளவை மீறி அதிகமாக வசூல் வேட்டை செய்வதை பாட்டாளி தமிழக மாணவர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கும்பினிப்பேட்டை கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட இளைஞர் சங்க செயலாளரும் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செழியன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,மாவட்ட தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான அ.மா.கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க செயலாளர் தீனதயாளன், மாணவர் சங்கம் மாநிலச் செயலாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    வருகின்ற மே 5-ந் தேதி சித்திரை திருவிழாவின் போது அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் சங்க மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக ஐம்பதாயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள சங்க கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

    சித்தேரி ஊராட்சியில் இயங்கும் அல்ட்ராடெக் தனியார் சிமெண்டு நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சாரதி, பாட்டாளி சங்கம் மாவட்ட தலைவர் ஏழுமலை,மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர்கள் தனசேகர், ராமன், ஜெகன், ஷோபன் பாபு, அன்பு மற்றும் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞர் சங்க துணைச் செயலாளர் வி.விஜி நன்றியுரை கூறினார்.

    • மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
    • குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்த வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு நகர பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்துவது.

    கோத்தகிரி அரசு சித்தா பிரிவில் போதிய மருந்துகள் இல்லாமல் இருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி, ஆலோசகர் பிரவின், முகமது இஸ்மாயில், கிரேஸி, செயற்குழு உறுப்பினர்கள் விபின் குமார், சுரேஷ், லலிதா, சங்கீதா, திரைசா, ரோஸ்லின், ராதிகா, பியூலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் நன்றி கூறினார்.

    • வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    • விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் பொது வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ் கோத்தகிரி தலைவர் விஜய் குமார் மற்றும் பெள்ளி தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஜெ. குமார், மண்டல் பொது செயலாளர்கள் ரமேஷ், கிருஷ்ணா குமார் மற்றும் மண்டல் அணி தலைவர்கள், கிளை தலைவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
    • கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். ராசிபுரம் ஒன்றிய பொது செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சத்திய

    மூர்த்தி, மாவட்ட பொதுச்செ யலாளர் சேதுராமன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத் தலைவர் லோகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்ரா, ஒன்றிய பார்வையாளர் தமிழரசு, முன்னாள் ஒன்றிய தலைவர்கள் லட்சுமணன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவிப்பது, ஜார்கண்ட் மாநில கவர்னராக ராதா

    கிருஷ்ணனை அறிவித்த பிரதமர் மோடி, கட்சித் தலைவர் நட்டா ஆகியோ ருக்கு நன்றி தெரிவிப்பது, ராசிபுரம் பத்திரப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொது மக்கள்

    கழிப்பிட வசதி இல்லாத தால் சிரமத்துக்கு ஆளாகி யுள்ளார்கள்.

    ஆகவே உடனடியாக கழிப்பிட வசதி ஏற்ப டுத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்வது, வேலம்பா

    ளையத்தில் சமுதாயக்கூடம் கட்டி 2 வருடங்கள் ஆகியும்

    மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்பட வில்லை. எனவே சமுதா

    யக்கூடத்தை உடனடியாக திறக்க வேண்டும். பிள்ளா நல்லூர் பேரூராட்சியில் இருந்து கல்யாணி வழியாக செல்லும் கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×