என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம்
- பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.இளங்கோ வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன், பரத், தேவேந்திரன், கண்ணதாசன், சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் எம். கே.முரளி, மாநில பொதுகுழு உறுப்பினர் கிரிகுமரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நெடுமாறன், எஸ்.பி.சண்முகம், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் புல்லட் ராதாகிருஷ்ணன், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் பகவான் கார்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எல்.எஸ்.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் பூண்டி மோகன், ரஜினி சக்ரவர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகிற 23-ம் தேதி திங்கட்கிழமை அன்று ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம். கே.முரளி இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது ஆற்காடு பஜார் வீதியில் கால்வாய் மேல் கல்வெட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் உயரமாக போடப்பட்டுள்ள கல்வெட்டு அதன் உயரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் ஞானசெளந்தரி நன்றி கூறினார்.






