என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Teachers Alliance"
- முழுமையான கலந்தாய்வு நடத்திட வேண்டும்
- பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமர்நாத் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடக்கும் முறைகேடான மாறுதல்களை உடனே நிறுத்த வேண்டும், இதுவரை போடப்பட்ட அனைத்து முறைகேடான மாறுதல்களையும் திரும்ப பெற வேண்டும், வெளிப்படையான நேர்மையான கலந்தாய்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும், பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி தேவையி ல்லை என்னும் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வுடன் முழுமையான கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட கிளை யின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில், வாக்கு சாவடி மையங்களில் வாக்கு சாவடி நிலைய அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். 1 முதல் 3-ம் வகுப்பு வரை நடைபெறும் எண்ணும் எழுத்தும் செயல்பாடுகளில் உருவாக்க மதிப்பீடு செய்வதில் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வருவதை கைவிட வேண்டும். பொது மாறுதல் விதிமுறைகளுக்கு மாறாக தற்போது தொடக்க கல்வித்துறையில் நடைபெற்று வரும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இதில் பள்ளிப்பாளையம் வட்டார செயலாளர் தன்ராஜ், மோகனூர் வட்டார செயலாளர் சரவணன், பரமத்தி வட்டார தலைவர் சாந்தி, கொல்லிமலை வட்டார தலைவர் தமிழழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மலர்விழி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்