search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • முழுமையான கலந்தாய்வு நடத்திட வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமர்நாத் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடக்கும் முறைகேடான மாறுதல்களை உடனே நிறுத்த வேண்டும், இதுவரை போடப்பட்ட அனைத்து முறைகேடான மாறுதல்களையும் திரும்ப பெற வேண்டும், வெளிப்படையான நேர்மையான கலந்தாய்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும், பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி தேவையி ல்லை என்னும் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வுடன் முழுமையான கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×