search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் பாட்டாளி மாணவர் சங்க செயற்குழு கூட்டம்
    X

    ராணிப்பேட்டையில் பாட்டாளி மாணவர் சங்க செயற்குழு கூட்டம்

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தமிழக மாணவர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாணவர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கோகுல்நாத் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான அ.மா.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளரும் கைனூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோ.உமாமகேஸ்வரி, மாணவர் சங்கம் மாநில செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உடனடியாக தமிழக பாட்டாளி மாணவர் சங்கம் அமைப்பை உருவாக்க வேண்டும்

    தனியார் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்தை அரசு நிர்ணயித்த அளவை மீறி அதிகமாக வசூல் வேட்டை செய்வதை பாட்டாளி தமிழக மாணவர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.

    Next Story
    ×