என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.
மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டத்தின் படி அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற கூற்றை ஏற்றுக் கொண்டோம்.கொலை குற்றவாளிகளை பொதுத்தலங்களில் உலாவிடுவது சரியல்ல. அவர்களை குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும். மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்.
சிறு குறு தொழில் நிறுவனங்களை வயிற்றில் அடிப்பது போல் மின்சார கட்டண உயர்வு மிகப்பெரிய அளவிலே பாதிப்பைஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவினாசி -அத்திக்கடவு நீர் திட்டத்தை விரைவாக நிறைவு செய்து முழுமையான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்திட வேண்டும்.
காங்கேயம் பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான காங்கேயம் பசுமாடுகளுக்கான என ஒரு ஆராய்ச்சி மையத்தை அரசாங்கமே நிறுவ வேண்டும் என்பதைஇந்த கூட்டத்தின் வாயிலாககேட்டுக் கொள்ளப்படுகிறது.திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






