search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhapuram"

    • வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.
    • சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார்.

    திசையன்விளை:

    தமிழ்நாடு முழுவதும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்கு சாவடிகளில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார். அந்த வாக்குச்சாவடிகளில் புதிதாக சேர்ந்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்கள் மற்றும் நீக்கல் குறித்த தகவ ல்களை கேட்டறிந்தார். முகாமிற்கு மக்கள் வருகை குறித்தும் கேட்டறிந்தார்.

    இதில் தி.மு.க. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளருமான சுரேஷ் மனோகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் அருள், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி எஸ்தாக் கெனிஸ்டன், சொக்கலிங்கம், மாவட்ட பிரதிநிதி ராஜன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், ஒன்றிய துணை செயலாளர் கென்னடி, நவலடி சரவணகுமார், பொன்னி சக்கி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாமா வரவேற்று பேசினார். முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை நிபுணர், மனநல மருத்துவர், முட நீக்கியல் நிபுணர் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர். முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்குதல், முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம், இலவச பஸ் பயண சலுகை, இலவச ரயில் பயண சலுகை, உதவி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மாத உதவி தொகை ஆகியவை வழங்கப்பட்டன.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த காலங்களில் பருவமழை சரிவர இல்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் நீரோ 65 திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இதன்மூலம் ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 கட்டங்களில் 39 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த காலங்களில் பருவமழை சரிவர இல்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் நீரோ 65 திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன்மூலம் ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 கட்டங்களில் 39 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. 3ம் கட்டமாக 40வது ஆழ்துளை கிணறு, உவரி பஞ்சாயத்தில் அமைக்கப்படுகிறது.

    இந்த பணியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். 3ம் கட்டமாக உவரி, க.உவரி, க.புதூர், முதுமொத்தான்மொழி, அப்புவிளை, சமூகரெங்கபுரம் மற்றும் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகள்

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜன், திசை யன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், மா வட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், வார்டு உறுப்பினர் ராணி, ஜெயமேரி, வினி ஸ்டன், பொற்கிளி நட ராஜன், புளியடி குமார், முத்து ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
    • ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் குளம், கால்வாய், கிணறு உள்ளிட்ட அனைத்து விதமான நீர்நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படு கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    இந்நிலையில் மழை இன்றி, பல ஆண்டுகளாக விவசாயிகளால் கஷ்டப் பட்டு வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் நீரின்றி கருகி வருகிறது. இதனால் ராதாபுரம் பகுதி விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    கடுமையான பாதிப்புக் குள்ளான விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராதாபுரம் யூனியனில் கடலோர பகுதியில் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்துக்கு உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுனாமி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • இங்கு வசிக்கும் மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியனில் கடலோர பகுதியில் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்துக்கு உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுனாமி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக இந்த காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக வரவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி அன்று அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    இதனையறிந்த குடிநீர் வழங்கல் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் கடந்த மாதம் 23-ந்தேதி சுனாமி காலனிக்கு சென்று அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் அந்த பகுதிக்கு குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    ஆனால் அதிகாரிகள் கூறியபடி குடிதண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திடீரென காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கரைசுத்து உவரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உவரி ராஜன் கிருபாநிதி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் 

    • 27 பஞ்சாயத்துகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்கும் வகையில், 'நீரோ 65' என்ற திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் யூனியனில் உள்ள 27 பஞ்சாயத்துகளிலும் போர்க்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தீவிரமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஊராட்சி நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி மற்றும் ஊராட்சி நிதிகளின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டு சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக உதயத்தூர் பஞ்சாயத்தில் நீரோ 65 திட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ''ராதாபுரம் யூனியன் பகுதியில் ஆண்டு முழுவதும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. விரைவில் அனைத்து ஆழ்துளை கிணறுகளும், பைப்லைன்களும் அமைக்கப்பட்டு இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்'' என்று கூறினார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தன், வேலப்பன், ஒன்றிய கவுன்சிலர் படையப்பா முருகன், இசக்கிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நவ்வலடியில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நவ்வலடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆயங்குளத்தில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினார். விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் ராதிகா சரவணகுமார், ஆனந்தகுமார், சாந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய மந்திரி வி.கே.சிங் ராதாபுரம் அருகே பெருமணல் ஊரிலுள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபட்டு, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • மேலும் கடற்கரைக்குச் சென்று அங்கு உயிர் நீத்த மீனவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

    வள்ளியூர்:

    மத்திய மந்திரி வி.கே.சிங் ராதாபுரம் அருகே பெருமணல் ஊரிலுள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபட்டு, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    மேலும் கடற்கரைக்குச் சென்று அங்கு உயிர் நீத்த மீனவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பெருமணல் மாதா கோவில் அருட்தந்தை ஜூலியனிடம் 9-ஆண்டு கால சாதனை களை விளக்கும் வண்ணம் அச்சடிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு கொடுத்து இனி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நெல்லை மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ், நெல்லை தெற்கு மாவட்ட பொது செயலாளர்கள் பாபு தாஸ் மற்றும் அருள் காத்தி, நெல்லை தெற்கு மாவட்ட பொரு ளாளர் பால கிரு ஷ்ணன், சிறுபான்மை அணி தெற்கு மாவட்ட பொது செயலாளர் எடிசன், வள்ளியூர் மத்திய ஒன்றிய தலைவர் அருள் ஜெக ரூபர்ட், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அசோக், சிறுபான்மை அணி ராதாபுரம் தெற்கு ஒன்றியதலைவர் சந்தியாகு மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பரமேஸ்வரபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் தெருமுனை பிரசாரம் கூட்டம் நடைபெற்றது.
    • 9 ஆண்டுகால ஆட்சியில் மோடி தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    பணகுடி:

    ராதாபுரம் தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் பரமேஸ்வரபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் தெருமுனை பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கேசவன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய பொதுச்செயலாளர் ஆர்.கே. சாமி முன்னிலை வகித்தார். பிரசார பிரிவு மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் இந்திராசுரேஷ், செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஆன்மிக பிரிவு தலைவர் ராமகுட்டி, ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பிரதமர் மோடி 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆத்திராஜா, ஒன்றிய துணை தலைவர் ராஜா, பிரசார பிரிவு ஒன்றிய தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதை காமராஜ், மூத்த நிர்வாகி முத்துதுரை, நாகராஜன், அன்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒன்றிய பொதுச்செயலாளர் ஆர்.கே. சாமி செய்திருந்தார் முடிவில் கிளை தலைவர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

    • ராதாபுரம் யூனியன் பகுதிகளில் தற்போது குடிநீர் பிரச்சினை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
    • குடிநீர் மற்றும் மின்கட்டணம் குறைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாததால் தற்போது கடுமையான வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே அங்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.

    ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். நெல்லை திட்ட இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் (பஞ்சாயத்து) விமலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புளோரன்ஸ் விமலா, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகளின் விளக்கங்களை கேட்டறிந்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், ''ராதாபுரம் யூனியன் மழை மறைவு பிரதேசத்தில் இருப்பதால் மிகவும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

    பருவமழை குறைவு மற்றும் போதிய நீர் ஆதாரம் இல்லாததால், தற்போது குடிநீர் பிரச்சினை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடினமான சூழலில் உள்ளனர்.

    எனவே ராதாபுரம் யூனியன் பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போர்க்கால அடிப்படையில் 50 புதிய ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் பைப்லைன் அமைக்க வேண்டும்'' என்று கூறினார்.

    திட்ட இயக்குனர் சுரேஷ் பேசுகையில், ''ராதாபுரம் யூனியன் பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது'' என்றார். மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குடிநீர் மற்றும் மின்கட்டணம் குறைப்பதை குறித்து ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், பஞ்சாயத்து தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், ராதிகா சரவணகுமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.
    • இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (வெள்ளிக்கிழமை) சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.

    திட்டப்பணிகள் ஆய்வு

    இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார். காலை 8 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து 9 மணிக்கு மாநகராட்சியில் முடிவுற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

    தொடர்ந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடக்கும் விழாவில் மாவட்டத்தில் ரூ.605 கோடியில் 6 யூனியன்களை சேர்ந்த 831 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து குமரிக்கு செல்கிறார். கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகளில் ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பீல் கூடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மாலை 4 மணிக்கு மீண்டும் நெல்லை வரும் அமைச்சர் கே.என்.நேரு பாளை நேருஜி கலையரங்கில் நடக்கும் விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் எஸ்.என்.ஹைரோட்டில் கட்டப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

    தென்காசி

    அங்கிருந்து தென்காசி மாவட்டம் செல்லும் அமைச்சர் கே.என்.நேரு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். பின்னர் 49 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணி களை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விருதுநகர் செல்கிறார்.

    • ராதாபுரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை, மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை, மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் வழங்கினார். தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தன்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி ஆகிய 7 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 32,970 பேர் வசித்து வருகின்றனர்.

    இங்கு மீன்பிடி தடைகாலம் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜீன் 14-ந்தேதி வரை கிழக்கு பகுதியில் மீன் பிடிக்க தடைக்காலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் தலா ரூ.5000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர்களது கோரி க்கைகளை உடனடி யாக நிறைவேற்று வதற்கு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 52). இவருக்கு சொந்தமான இடம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கிருஷ்ணனின் இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் காற்றாலை அமைத்திருந்தார். சமீபத்தில் 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அவர்களிடம் கிருஷ்ணன் தட்டிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான தனது காற்றாலை எந்திரங்களை தொழிலதிபர் ஏமாற்றி அபகரித்ததாக கூறி கிருஷ்ணன் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூரை சேர்ந்த தியாகராஜன், காங்கேயத்தை சேர்ந்த அருணாதேவி, பாளை தியாகராஜநகரை சேர்ந்த மாணிக்க வாசகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ×