search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் அருகே தோட்டங்களை குறிவைத்து மின்வயர்களை திருடும் கும்பல் - நடவடிக்கை எடுக்க பா.ஜனதா வலியுறுத்தல்
    X

    ராதாபுரம் அருகே தோட்டங்களை குறிவைத்து மின்வயர்களை திருடும் கும்பல் - நடவடிக்கை எடுக்க பா.ஜனதா வலியுறுத்தல்

    • ராதாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துகுறிச்சி, இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளது.
    • தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா ஊடக பிரிவு ராதை காமராஜ் தெரிவித்துள்ளார்.

    பணகுடி:

    ராதாபுரம் போலீஸ் நிலைய எல்ைலைக்குட்பட்ட ஆத்துகுறிச்சி, இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலா புரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளது.

    மின் வயர் திருட்டு

    இந்த தோட்டங்களை குறிவைத்து பல மாதங்களாக மின் வயர் மற்றும் மின் மோட்டார்களை ஒரு கும்பல் திருடி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்குறிச்சி ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசை காட்டி உள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா ஊடக பிரிவு ராதை காமராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×