search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் அருகே கோவிலில் நகை-பணம் கொள்ளை
    X

    ராதாபுரம் அருகே கோவிலில் நகை-பணம் கொள்ளை

    • ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது.
    • இந்த கோவிலின் உபயதாரராக அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி(வயது 30) இருந்து வருகிறார்.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் உபயதாரராக அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி(வயது 30) இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 17-ந்தேதி கோவிலில் பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீடு திரும்பிவிட்டார். அதன்பின்னர் நேற்று காலை கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    மேலும் கோவில் கருவறையில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தங்கசாமி பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×