என் மலர்
நீங்கள் தேடியது "Booth committee"
- பணிகள் முடிவடையாத பூத்களில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
- மாநாட்டில் மத்திய உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
நெல்லை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தனது கூட்டணியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், அதே கருத்துடைய பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வுடன் கை கோர்த்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் பா.ஜ.க.வின் அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அக்கட்சியின் பூத் கமிட்டியை வலுப்படுத்திடும் பணிகளில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. முழுவீச்சில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இதற்காக அவர் மாவட்டம் தோறும் சென்று பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தமிழகத்தை 7 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்த நிலையில் முதல் மாநாடு நெல்லையில் வருகிற 17-ந்தேதி நடக்கும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி மாநாட்டுக்கான பணிகள் ஒருபுறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட 5 பாராளுமன்ற தொகுதிகளிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் செய்து பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி நேற்று விருதுநகர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பணிகள் முடிவடையாத பூத்களில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
எந்தவொரு கட்சியின் வெற்றிக்கும் அதன் அடித்தளமாக விளங்கும் பூத் கமிட்டிகள் வலுவாக இருப்பது அவசியம். 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ.க. சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முதல் மண்டல மாநாடு நெல்லையில் 17-ந்தேதி நடத்தப்படுகிறது.
இதில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்காக தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் நேற்று அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி தொகுதிகளில் ஆய்வு செய்தேன். தொடர்ந்து நாளை முதல் மற்ற தொகுதிகளில் ஆய்வு பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
பா.ஜ.க.வில் 1 பூத்துக்கு 12 கமிட்டி பொறுப்பாளர்கள் வீதம் நெல்லை மண்டலத்தில் 9 ஆயிரம் பூத்களில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பணிகள் 70 சதவீதம் முடிவடைந்து விட்டது. வருகிற 17-ந்தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிந்து எப்படியும் 1 லட்சம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் இந்த மண்டல மாநாட்டில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அது தொடர்பாக முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.
- ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள் என்று பாஜக தொண்டர் கூற சிரிப்பலை எழுந்தது.
விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது நயினார் நாகேந்திரனிடம் பேசிய பாஜக தொண்டர் ஒருவர், "நான் தேர்தலில் நின்றேன். உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." என்று கூற அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.
வெளிப்படையாக பேசிய பாஜக தொண்டரால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
- பூத் அளவில் மாதம் ஒருமுறை தெரு முனை கூட்டங்கள் நடத்த வேண்டும்.
- நவம்பர் 23-ந்தேதி சேலத்திலும், டிசம்பர் 21-ந்தேதி தஞ்சையிலும் மாநாடு நடத்தப்பட உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது. இதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அக்கட்சியின் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல் கலைக்கழகத்தில் பா.ஜ.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரகுராமன், மண்டல தலைவர்கள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து பேசினார். எந்தவொரு கட்சியின் வெற்றிக்கும் அதன் அடித்தளமாக விளங்கும் பூத் கமிட்டிகள் வலுவாக இருப்பது அவசியம்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர்களை நேரடியாக தொடர்பு கொள்வது, அரசு நலத்திட்டங்களை விளக்குவது போன்ற பணிகளை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி ஆகியோர் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணிகள் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ.க. சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முதல் மண்டல மாநாடு நெல்லையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி நடத்தப்படுகிறது.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதி மதுரையிலும், அக்டோபர் 26-ந்தேதி கோவையிலும், நவம்பர் 23-ந்தேதி சேலத்திலும், டிசம்பர் 21-ந்தேதி தஞ்சையிலும் மாநாடு நடத்தப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி திருவண்ணாமலையிலும், ஜனவரி 24-ந்தேதி திருவள்ளூரிலும் மண்டல மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு நடைபெற உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி, தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை உள்ளிட்டவற்றை சாதகமான அம்சங்களாக பா.ஜ.க. கருதுகிறது. விஜய் அரசியலுக்கு வருகை, நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி ஆகியவை பாதகம் என பா.ஜ.க. பட்டியலிட்டு உள்ளது.
எனவே முதல் முறை வாக்காளர்களை ஒருங்கிணைப்பது மற்றும் தேசிய உணர்வை ஏற்படுத்துவது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும் என்று பா.ஜ.க. கருதுகிறது. இதற்காக பூத் அளவில் மாதம் ஒருமுறை தெரு முனை கூட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிகழ்ச்சி இன்று முழுவதும் பல்வேறு அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள மாநில, மாவட்ட, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் சாதனைகளையும், மக்கள் நல திட்டங்களையும் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் சரி பார்ப்பது, சமூக ஊடகங்கள் மூலம் கட்சியின் செய்திகளை பரப்புவது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்பது, தேர்தல் நாளில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
- 10 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்றும் நாளையும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது.
காலை, மாலை என இரு வேளைகளில் தலா 10 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
மொத்தம் 82-ல் முதலில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பூத் கமிட்டி பணிகள் தாமதம் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, விரைந்து பூத் கமிட்டி அமைத்து முடிக்க வேண்டும் என்றும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பூத் கமிட்டி தான் மிகப்பெரிய கட்டமைப்பு. அதை சரியான முறையில் செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- எப்போது பேச வேண்டும், எப்போது மக்களைச் சந்திக்க வேண்டும்.
- மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்.
கோவை மண்டல அளவிலான வாக்கு ச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, வாக்கு சாவடி முகவர்களுக்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய பூத் கமிட்டி புத்தகம், எலக்ட்ரானிக் டேட்டா கொண்ட பென் டிரைவ்களை வழங்கி பேசினார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு இன்று மாலை தொடங்கிய நிலையில், விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முன்னதாக, பூத் கமிட்டி கருத்தரங்கில் பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்," 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு என்றும் விஜய்யை முதல்வராக அமர வைப்போம் என உறுதியேற்போம்" என்றார்.
மேலும் அவர்," எப்போது பேச வேண்டும், எப்போது மக்களைச் சந்திக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு தெரியும்.
ஒவ்வொரு வீட்டிலும் தவெக தலைவர் விஜய்க்கு ஓட்டு உள்ளது. அதை மறுக்க முடியாது. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்முடைய உயிர், மூச்சு எல்லாம் விஜய்க்குதான்.
மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்" என்றார்.
- அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- பூத் கமிட்டியில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும்.
திருப்பூர் :
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளைகளில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பூத் கமிட்டியில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும். இளைஞர்களை பூத் கமிட்டியில் உறுப்பினர்களாக சேருங்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்த வீதியில் குடியிருப்பவராகவும், அவருக்கு அந்த வீதியில் உள்ள அனைவரும் நன்கு தெரிந்திருப்பது அவசியம். எதிர்காலத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான் கட்சியை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள். பூத் கமிட்டி அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து 3 மாத காலத்தில் முடிக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை நானே வந்து வழங்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், பகுதி செயலாளர்கள் கருணாகரன், ஹரிகரசுதன், திலகர் நகர் சுப்பு, கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
- தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடத்தில் நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிட்டு, தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குபல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சு.சாமிநாதன் தலைமை தாங்கினார்.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஆட்டோ குமார், செந்தில்குமார், கலைவாணி சசிகுமார், ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார், மாவட்ட பிரதிநிதிகள் முத்துகுமாரசாமி, துரைமுருகன், அன்பரசன், தொண்டரணி அமைப்பாளர் பானுமதி,மற்றும் தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல, பல்லடம் நகர தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ,பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன் ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள். இந்த கூட்டத்தில்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.ராஜசேகரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்,நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன்,வசந்தாமணி,வேலுச்சாமி,குட்டி பழனிச்சாமி,கதிர்வேல்,கவுஸ் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.
- நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
நெல்லை:
அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், இளைஞர் பாசறை செய–லாளர் முத்துப்பாண்டி, ஹரிகரசிவசங்கர், மகளிர் அணி ஜான்சிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், பூத்கமிட்டி அமைப்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் பகுதி செய லாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், மோகன், சண்முககுமார், சக்திகுமார், சிந்துமுருகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், நெல்லை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிமுகம்மது சேட், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி துணை செயலாளர் மாரீசன், வக்கீல் அன்பு, வட்ட செயலாளர் பாறையடி மணி, தச்சை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- அமைச்சர் காந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், அமுதா, மாவட்ட பொருளாளர் சாரதி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டுவது குறித்தும், நாடாளுமன்ற தேர்தல்யொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கழக ஆக்க பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
டி.பி.ஐ வளாகத்தில் பேராசிரியர் பெருந்தகையின் திருவுருவச்சிலை 19-ந் தேதிதிறக்கப்படவுள்ளது.
கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம் மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிபடுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு நாளில் திருவுருவப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தி வட்டக்கிளை, ஊர்கிளை பேரூர்கிளை, ஒன்றியம், நகரம் எங்கும் கொண்டாடிடவும், தலைமைக் கழகம் அறிவிக்கும் பேராசிரியர் நூற்றாண்டு பொதுகூட்டம் நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்கவேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- 5 வாக்கு சாவடிகளின் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
- கழக நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
குன்னூர் நகரத்திற்கு உட்பட்ட 5 வாக்கு சாவடிகளின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனைப்படி குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி தலைமையில், குன்னூர் நகர தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர் செல்வம், நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நகர அவை தலைவர் தாஸ், துணைச் செயலாளர்கள் சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், சார்லி மற்றும் கழக நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.
- அதிமுக 42-வது வார்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- அதிமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் ஆலோசனைகள் வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக 42-வது வார்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கே.வி.ஆர். நகரில் தென்னம்பாளையம் பகுதி செயலாளரும்,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் வருகின்ற காலங்களில் புதிய வாக்காளர்கள் அதிமுகவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.அதற்கு கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடுமையாக பணியாற்ற வேண்டும். தலைமை கழகம் அறிவித்துள்ளபடி பூத் கமிட்டியில் அதிக அளவில் இளைஞர்கள் இடம் பெற வேண்டும்.அதேபோல் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் அணி நிர்வாகிகள் என ஒரு கலவையான பூத் கமிட்டியை அமைக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் 42-வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- ஒத்தவீடு கிளை செய லாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர் ஊராட்சி பூத் எண். 39, 40-ன் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணலூர் மணி மாறன் முன்னிலை வகித்தார்.
மானாமதுரை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், வருகிற நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெறவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர், மகளிர் உறுப்பி னர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா, மணலூர் கிளை செயலாளர்கள் வீர மணி, அழகர், பிரபு, தயாளன், வெங்கட்ரமணி, மண லூர் ஒத்தவீடு கிளை செயலாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






