என் மலர்
நீங்கள் தேடியது "Actor vijay"
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடைசியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், தனது மகனுக்கு திரைத்துறையில் வழிவிட்டுள்ளார்.
நடிகர் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார். தான் இயக்கும் முதல் படத்தில் நடிகர் சந்தீப் கிஷனை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் தனது முதல் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் தனது முதல் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜேசன் சஞ்சயின் படத்திற்கு "சிக்மா" என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
- நடிகர் விஜய் தனது 51-வது பிறந்தநாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாட உள்ளார்.
- அவரது பிறந்தநாளை முன்னிட்டு விஜயின் சில பிரபலமான படங்களை மீண்டும் திரையிட திட்டமிட்டப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெற்றி படங்களை ரிரீலிஸ் செய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகர் விஜயின் படங்களும் ரிரீலிஸ் செய்யப்படுகிறது. அதில் சச்சின், தமிழன், கில்லி, போக்கிரி, தலைவா ஆகிய படங்கள் ரிரீலிஸ் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது 51-வது பிறந்தநாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் விஜயின் சில பிரபலமான படங்களை மீண்டும் திரையிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவரது பிறந்தநாளில் 5 படங்கள் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.
எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியான மெர்சல் படம் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வர இருக்கிறது. இந்த படம் ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து 21-ந் தேதி கத்தி, லியோ, மாஸ்டர் ஆகிய படங்களும் 22-ந் தேதி பகவதி படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 20-ம் தேதி அவரது 4 பிளாக்பஸ்டர் படங்கள் மெர்சல், கத்தி, திருமலை மற்றும் லியோ கேரளாவில் ரீ ரிலீஸாக உள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- எப்போது பேச வேண்டும், எப்போது மக்களைச் சந்திக்க வேண்டும்.
- மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்.
கோவை மண்டல அளவிலான வாக்கு ச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, வாக்கு சாவடி முகவர்களுக்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய பூத் கமிட்டி புத்தகம், எலக்ட்ரானிக் டேட்டா கொண்ட பென் டிரைவ்களை வழங்கி பேசினார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு இன்று மாலை தொடங்கிய நிலையில், விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முன்னதாக, பூத் கமிட்டி கருத்தரங்கில் பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்," 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு என்றும் விஜய்யை முதல்வராக அமர வைப்போம் என உறுதியேற்போம்" என்றார்.
மேலும் அவர்," எப்போது பேச வேண்டும், எப்போது மக்களைச் சந்திக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு தெரியும்.
ஒவ்வொரு வீட்டிலும் தவெக தலைவர் விஜய்க்கு ஓட்டு உள்ளது. அதை மறுக்க முடியாது. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்முடைய உயிர், மூச்சு எல்லாம் விஜய்க்குதான்.
மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்" என்றார்.
- 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
- மாநாட்டிலும் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு பூத்துக்கு ஒரு பெண், ஒரு ஆண் என தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 70 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.
இதனை தொடர்ந்து பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான மாநாட்டை 5 மண்டலங்களாக பிரித்து நடத்த விஜய் தீவிரம் காட்டினார்.
முதல் கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவை மண்டல அளவிலான வாக்கு ச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, வாக்கு சாவடி முகவர்களுக்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய பூத் கமிட்டி புத்தகம், எலக்ட்ரானிக் டேட்டா கொண்ட பென் டிரைவ்களை வழங்கி பேசினார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த மாநாட்டிலும் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் விஜய் அங்கிருந்து கார் மூலமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார். இன்னும் சற்று நேரத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற
- அவரோட வெற்றியால் நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது.
- அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன்.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

விழாவில் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் மேடையில் ரஞ்சிதமே பாடலை பாட, அவருடன் ரசிகர்களும் கூட சேர்ந்து பாடினார்கள். பின்னர் பேசிய விஜய் கூறியுள்ளதாவது:

1990 களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தாரு. கொஞ்ச நாள்ல அவரு எனக்கு சீரியசான போட்டியாளரா ஆனாரு. அவரோட வெற்றியால நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது. அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை.
அந்த போட்டியாளர் பேரு ஜோசப் விஜய். உங்க கூட நீங்க போட்டி போடுங்க. தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்தார்.
- தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது.
- படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார்.
சென்னை:
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
இதுபற்றி விஜய் வெளிப்படையாக எதுவும் கூறாமல் இருந்து வந்தார். ஆனால் இப்போது அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்கான பிள்ளையார் சுழி கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் போடப்பட்டது. அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் பிறந்த நாளை அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடினார்கள்.
அதை தொடர்ந்து இப்தார் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். இவையெல்லாம் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் என்பதை விஜய் மக்கள் இயக்கத்தினர் உறுதிப்படுத்தினார்கள்.
இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சர்வே நடத்தி வருகிறார்கள். இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது. அவர்களுக்கு தனி விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார். நீங்கள் வேட்பாளர் என்றால் உங்களுக்கு மாற்று யார்?
தொகுதியில் கட்சி வாரியாக இருக்கும் வாக்கு வங்கி நிலவரம்? உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் என்ன காரணம்? தொகுதியில் இருக்கும் பூத்களின் எண்ணிக்கை, வார்டு விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்த விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று சேகரிப்பார்கள். அதன் பிறகு மாவட்ட வாரியாக நேரில் அழைத்து விஜய் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.
இப்போதைய நிலையில் அடுத்த ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதா? அல்லது 2026-ல் நடத்தப்படும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
விஜய்யின் இந்த அறிவிப்பு மூலம் அவர் அரசியலில் குதிக்கப் போவது உறுதியாகிவிட்டது.
- தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
- நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம்.
நெல்லை:
பாரதிய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்குவதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.
அடுத்த முதலமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம்.
நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நடிகர் விஜயை பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.
- சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடினார்.
- ஒரு வார்த்தையில் கேட்ட கேள்விக்கு இந்திய வீரர் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரகானே. இவர் இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியின் இடம் பிடித்தார்.
இந்நிலையில் யூடிப்பர் மதன் கவுரியுடன் வீடியோ காலில் பேசிய ரகானே, தமிழ் நடிகரான விஜய் தனக்கு பிடித்த நடிகர் என தெரிவித்துள்ளார். மதன் கவுரி கேட்ட சில கேள்விகள் ரகனே தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.
ஒரு வார்த்தையில் மதன் கேட்ட கேள்விக்கு ரகானே பேசியது பின்வருமாறு:-
மதன்: வணக்கம் ப்ரோ நல்ல இருக்கீன்களா
ரகானே : நல்லா இருக்கேன். சாப்பிடீங்களா? (என தமிழில் பதில் அளித்தார்)
மதன்: சிஎஸ்கே
ரகானே: குடும்பம்
மதன்: டோனி
ரகானே: தல
மதன்: ஜடேஜா
ரகானே: நல்ல நண்பன் (என தமிழில் பதில் அளித்தார்)
மதன்: தோசை
ரகானே: ருசி
மதன்: தமிழ் நடிகர் பற்றி தெரியுமா?
ரகானே: ஆமா தெரியும்
மதன்: யார் உங்களுக்கு பிடித்த நடிகர்
ரகானே: விஜய்
இவ்வாறு அவர் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என தகவல்.
- படத்தின் போஸ்ட்டரை நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட தெலுங்கு போஸ்டரில் "அமைதியாக இருந்து சண்டையை தவிருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை படக்குழு எக்ஸ் பக்கத்திலும், நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.
- நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு.
- முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், " நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது:-
சினிமாவில் இருந்து விஜய் விலக வேண்டாம். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்படத் துறையில் இருந்தார். எனவே நீங்களும் சினிமாவில் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- விஜய்யின் கருத்து இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி மேலும் கூறியிருப்பதாவது:-
மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகவும் விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என அவர் வலியுறுத்தியிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார்.
- நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார். விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.
நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.






