search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SDPI party"

    • நாட்டையே உலுக்கியுள்ள துரதிஷ்டமான இந்த ரெயில் விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது
    • முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மண்டலத் திற்குட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லையில் உள்ள ஓட்டலில் இன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிகர் அலி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

    தொடர்ந்து நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதி பிறந்தநாள்

    நாட்டையே உலுக்கியுள்ள துரதிஷ்டமான இந்த ரெயில் விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் வாழும் காலம் வரை அவரின் புகழ் இன்னும் பல நூற்றாண்டு கடந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

    முஸ்லிம் ஆயுள் சிறை வாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசி களை விடுதலை செய்திட வேண்டும். பெண் மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை மேற்கொள்ளா மல், தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவ ரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை காப்பாற்ற முனையும் பா.ஜனதா அரசின் நடவடிக்கை கண்டிக் கத்தக்கது.

    சிறப்பு நிதி

    வற்றாத ஜீவநதியாக இருந்த தாமிரபரணியின் இன்றைய நிலைமை வேதனையளிக்கும் வகையில் உள்ளது. மணல் கொள்ளை, தண்ணீர் கொள்ளையால் அதன் உயிரோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. கரையோர ஆக்கிரமிப்புகள், கழிவுகள், சாக்கடைகள் மூலம் அதன் பொழிவை இழந்துவிட்டது. அந்த நதியை பாதுகாக்க தேவையான சிறப்பு திட்டத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். கங்கை நதியை பாதுகாக்க தனிக்கவனம் செலுத்தி அதற்கான வேலைகளை செய்து வரும் மத்திய அரசு தாமிர பரணியை பாதுகாக்கவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின் றோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் நிர்வாகிகள் அகமது நவவி, சேக் அப்துல்லா, மாநில பேச்சா ளர் பேட்டை முஸ்தபா, மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செ யலாளர் கனி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், உமர், சிக்கந்தர், சத்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • களக்காடு-பணகுடி சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை உள்ளது.
    • பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இதற்கான நிதியை வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    களக்காடு:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் மீராஷா அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோவில்பத்து பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சார் பதிவாளர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இங்குள்ள களக்காடு-பணகுடி சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை உள்ளது.

    களக்காடு வழித்தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. தற்போது இந்த பயணிகள் நிழற்கூடம் நகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே உள்ள இந்த பயணிகள் நிழற்கூடம் அருகே 100 அடி இடைவெளியில் அதன் அருகிலேயே, புதியதாக பயணிகள் நிழற் கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    அப்பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். ஏற்கனவே ஒரு பயணிகள் நிழற்கூடம் இருக்கும் போது, அதன் அருகிலேயே புதிய நிழற்கூடம் கட்டுவதால் அரசின் நிதி வீணாகி வருகிறது. அருகருகே 2 பஸ் நிறுத்தங்கள் அமைத்தால் பஸ்களும் நின்று செல்வதில் சிக்கல் ஏற்படும்.

    புதியதாக கட்டப்படும் பயணிகள் நிழற் கூடத்தின் அருகில் முள்புதர்கள் அடர்ந்துள்ளதால் பெண்கள், குழந்தைகள் பஸ்சுக்காக காத்திருக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே இந்த கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இதற்கான நிதியை வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் விஜயாபுரம் பெம் ஸ்கூல் அருகில் கொங்கு மண்டல மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு நடக்கிறது.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது வரவேற்று பேசுகிறார்.

    திருப்பூர் :

    கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், தமிழக தனியார் ேவலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் நலிந்து வரும் தொழில் வளத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருப்பூர் விஜயாபுரம் பெம் ஸ்கூல் அருகில் கொங்கு மண்டல மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு நடக்கிறது. மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மண்டல தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான ராஜா உசேன் தலைமை தாங்குகிறார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது வரவேற்று பேசுகிறார்.

    மாநில தலைவர் நெல்லை முபாரக் , கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் திருவடிக்குடில் சுவாமிகள், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பா.ம.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் முகைதீன், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம், தமிழக வாழ்வுரிமை கட்சி கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அகமது நவவி, உமர் பாரூக், நிஜாம் முகைதீன், அம்ஜத் பாஷா, ஷபீக் அகமது, அபுதாஹிர், அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜாபிர் அகமது மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டமாநாட்டு குழு நிர்வாகிகள், பல்லடம், தாராபுரம், அவினாசி தொகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். முடிவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு நன்றி கூறுகிறார்.  

    ×