search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamirabarani"

    • பழமையான ஆன்மீக நதியாக விளங்கும் தாமிரபரணி நதியை ஒட்டி ஒரு காலத்தில் 108 திவ்ய தேசங்கள் இருந்தது.
    • சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுத்தத்தை விட 6 மடங்கு மோசமான நீராக தாமிரபரணி நதி நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்திற்கு வந்த பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று பாளையில் தனது நடை பயணத்தை தொடங்கினார். நடை பயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    வற்றாத ஜீவ நதியாக விளங்கும் தாமிரபரணி குறித்து மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு பழமையான ஆன்மீக நதியாக விளங்கும் தாமிரபரணி நதியை ஒட்டி ஒரு காலத்தில் 108 திவ்ய தேசங்கள் இருந்தது. தற்போது அந்த நதி மிகவும் மாசடைந்து காணப்படுகிறது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுத்தத்தை விட 6 மடங்கு மோசமான நீராக தாமிரபரணி நதி நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய தி.மு.க ஆட்சியில் தாமிர பரணி ஆற்றை அசுத்தமாக்கி விட்டார்கள். பசுமை தீர்ப்பாயத்திற்கு சமீபத்தில் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் உடனடியாக தாமிரபரணி நதியை செய்ய அறிவுறுத்தியுள்ளது. கங்கை நதியை போல தாமிரபரணி நதியை மாற்றுவதற்கு தனி பட்ஜெட்போட வேண்டும்.

    வ.உ.சி.மைதான மேற்கூரை

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகரின் மத்தியில் உள்ள பாளை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரை கட்டி முடித்து 8 மாதத்தில் அரை மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்து விட்டது.

    மத்திய அரசு கொடுத்த நிதியை எந்த திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை யோசிக்காமல் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு கமிஷன் எடுக்கலாம் என்பதையே தி.மு.க. அரசு நோக்கமாக கொண்டிருக்கிறது. அதையே தனது முதல் கடமையாக இந்த அரசு கொண்டுள்ளது.

    கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் கோடி திட்ட பணிகளுக்காக வழங்கப் பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு தமிழகத்தில் ஒவ்வொரு இணைப்புக்கும் தி.மு.க.வினர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கமிஷன் கேட்கிறார்கள்.

    நெல்லை மாநகராட்சி யில் ஆளுங்கட்சியை சேர்ந்த 40 கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேயர் சரவணன் எந்த பணி என்றாலும் 30 சதவீதம் கமிஷன் கேட்கிறார்.

    அப்பொழுதுதான் கையெழுத்து விடுவேன் என்று கூறுகிறார் என தி.மு.க. கவுன்சிலர்களே முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை என்று கூறினால் இங்கு உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் யாரேனும் ஒருவராவது இன்று மாலைக்குள் என்னிடம் வந்து கேள்வி கேட்கலாம். ஆதாரத்தோடு நிரூபிக்க தயாராக உள்ளேன்.

    மதுவால் தமிழகம் சீரழிகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்தார். அவை எல்லாம் ஊசி போன வடை ஆகிவிட்டது.

    தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்த தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் 27 மாதத்தில் 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக தெரிவித்தார். அதன் பின்னர் அவரை அமைச்சரவையில் இருந்து மாற்றம் செய்தனர். கடந்த 4 மாதங்களாக அவரை எங்கேயும் பார்க்க முடிய வில்லை. இவற்றை எல்லாம் ஆதாரமாக கொண்டே தி.மு.க. ஆட்சி ஊழலானது என்று நிரூபித்து விடலாம்.

    2014-ம் ஆண்டு வரை விவசாயிகள் வட மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்ட நிலை இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சி வந்த பின்னர் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. 4 பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை இருந்த நிலையில், மோடி ஆட்சிக்குப் பின்னர் 24 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்பட்டுள்ளது.

    குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1310 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு குண்டாலுக்கு ரூ.2183 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 47 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கி வருகிறது.

    கடந்த ஆட்சியில் அதிக கடன் வாங்கிய இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது முதல் இடத்துக்கு கொண்டு வந்த பெருமை தி.மு.க. அரசை சேரும். தற்போது தமிழகத்தின் மொத்த கடனாக ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடி உள்ளது. அதில் நாம் ஒவ்வொருவர் குடும்பத்தின் மீதும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நடை பயணத்தின் போது முன்னாள் மத்திய மந்தரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் தயாசங்கர், தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நாகராஜன், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையின் இந்த நடை பயணத்தை ஒட்டி கலந்து கொள்வதற்காக வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி மற்றும் மண்டல தலைவர் குரு கண்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேருக்கு காலை மற்றும் மதிய உணவு அவர்கள் வழங்கினர். மேலும் அங்கு தாகத்தை தணிப்பதற்காக குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.

    • ஆழமான பகுதிக்கு சென்ற கோமதிநாயகம் ஆற்றில் மூழ்கி மாயமானார்.
    • அம்பை தாமிரபரணி ஆற்றில் கடந்த ஒரு மாதத்தில் 6 பேர் இறந்துள்ளனர்.

    சிங்கை:

    சங்கரன்கோவிலை சேர்ந்த தொழிலாளி கோமதிநாயகம் (வயது 40) என்பவர் தனது உறவினர்கள் சுமார் 40 பேருடன் நேற்று அம்பை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற கோமதிநாயகம் திடீரென ஆற்றில் மூழ்கி மாயமானார்.

    இது குறித்து தகவலறிந்ததும் தீயணை ப்புத்துறையினர் விரைந்து சென்று நேற்று இரவு வரை அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடும் பணியை தொடங்கினர்.

    அப்போது கோமதி நாயகம் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய அம்பை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, அம்பை தாமிரபரணி ஆற்றில் இதுவரை கடந்த ஒரு மாதத்தில் இளம்பெண்கள், இளைஞர்கள் உள்பட கோமதிநாயகத்துடன் சேர்த்து 6 பேர் இறந்துள்ளனர். தாமிர பரணி ஆற்றுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கவும், ஆழமான பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • விழாவை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியற்றப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவு படுத்துவதை தவறு என உணர்த்தும் திருத்தலமாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஆடித்தபசுவை முன்னிட்டு இன்று கொடியோற்று விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் உள்ளிட்டவை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் அம்பை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி களான சங்கரநாராயணர் காட்சி தரிசனம் மற்றும் சங்கரலிங்க சுவாமி சுவாமி அம்பாளுக்கு இடப வாகன காட்சி தரிசனம் வருகிற 31 -ந் தேதி மாலை நடைபெற இருக்கிறது. மேலும் மறுநாள் இரவு தெப்ப திருவிழாவும் நடைபெற இருக்கிறது.

    • ஆத்தூரில் முக்காணி -ஆத்தூரை இணைக்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலம் உள்ளது.
    • இதையடுத்து விவசாயிகள் அதிக ஆழத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.

    ஆத்தூர்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் தாமிரபரணி ஆறு தென் மாவட்டத்திலேயே உற்பத்தியாகி தென் மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் பெருமை பெற்றது.

    கடைசி பாலப்பகுதி

    இந்த ஆறு நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கடலில் கலக்கிறது. ஆத்தூரில் முக்காணி -ஆத்தூரை இணைக்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலம் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது இந்த பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கும். அப்போது தூத்துக்குடி- திருச்செந்தூர் போக்குவரத்து நிறுத்தப்படும்.

    இந்த பாலப்பகுதியில் தற்போது தண்ணீர் முழுமையாக வற்றி தரைகள் வெளியில் தெரிகிறது. இதனால் ஆத்தூர் சுற்று வட்டாரங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் அதிக ஆழத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.

    விவசாயிகள் எதிர்பார்ப்பு

    மேலும் தண்ணீர் அதிகமான அளவு கீழ் செல்லும் போது அருகில் உள்ள கடல்நீர் ஊருக்குள் வந்து நிலத்தடி நீர் உப்பாக மாற வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே தற்போது மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தேவைக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளும் பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பதை எதிர்பார்த்து உள்ளனர்.

    • தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • கால்வாய் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் நிரம்ப மழைப்பொழிவையே பெரிதும் நம்ப வேண்டி உள்ளது.

    கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்

    மேலும் அதிகப்படியான மழைப்பொழிவால் கிடைக்கும் வெள்ளநீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் நிலையே தற்போது வரை தொடர்கிறது.

    இதனால் அதிகளவு மழை பெய்யும் போது வெள்ள நீர் கூட சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை இன்று வரை தொடர்கிறது.

    வெள்ளக்கால்வாய் திட்டம்

    இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறை இணைக்கும் வகையில் தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டம் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழி என்ற இடத்தில் தொடங்கி சேரன்மகாதேவி, தருவை, கண்டித்தான்குளம் வழியாக மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, திசையன்விளை, எம்.எல்.தேரி வரை 75 கிலோ மீட்டர் நீளத்தில் இந்த கால்வாய் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.

    தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு என 3 நதிகளை இணைக்கும் வகையில் உருவாகும் இந்த திட்டம் ரூ. 938 கோடியே 85 லட்சம் செலவில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் இன்னும் இத்திட்டம் முடியவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    செப்டம்பர் மாதம்

    இந்த திட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 நிலைகளாக பிரித்து பணிகளை செய்து வருகின்றனர். இதில் 3 நிலைகளில் பணிகள் 100 சதவீதம் நிறைவடைத்துள்ளது.

    பொன்னாக்குடி அருகே கால்வாயின் 30-வது கிலோ மீட்டரில் 6 வழிச்சாலை பாலம் அமைக்கும் பணியும், திசையன்விளை எம்.எல்.,தேரியில் கால்வாய் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. பாலம் அமைக்கும் பணியை பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பாலம் அமைக்கும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது. கால்வாய் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இந்த பணிகளும் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில் மழை காலத்தில் பெறப்படும் வெள்ள நீரால் 23 ஆயிரத்து 40 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை உருவாகும். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி மக்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதி மக்களும் பயனடைவார்கள் என்றனர்.

    • நாட்டையே உலுக்கியுள்ள துரதிஷ்டமான இந்த ரெயில் விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது
    • முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மண்டலத் திற்குட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லையில் உள்ள ஓட்டலில் இன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிகர் அலி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

    தொடர்ந்து நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதி பிறந்தநாள்

    நாட்டையே உலுக்கியுள்ள துரதிஷ்டமான இந்த ரெயில் விபத்து அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் வாழும் காலம் வரை அவரின் புகழ் இன்னும் பல நூற்றாண்டு கடந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

    முஸ்லிம் ஆயுள் சிறை வாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது இஸ்லாமிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசி களை விடுதலை செய்திட வேண்டும். பெண் மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை மேற்கொள்ளா மல், தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவ ரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை காப்பாற்ற முனையும் பா.ஜனதா அரசின் நடவடிக்கை கண்டிக் கத்தக்கது.

    சிறப்பு நிதி

    வற்றாத ஜீவநதியாக இருந்த தாமிரபரணியின் இன்றைய நிலைமை வேதனையளிக்கும் வகையில் உள்ளது. மணல் கொள்ளை, தண்ணீர் கொள்ளையால் அதன் உயிரோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. கரையோர ஆக்கிரமிப்புகள், கழிவுகள், சாக்கடைகள் மூலம் அதன் பொழிவை இழந்துவிட்டது. அந்த நதியை பாதுகாக்க தேவையான சிறப்பு திட்டத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். கங்கை நதியை பாதுகாக்க தனிக்கவனம் செலுத்தி அதற்கான வேலைகளை செய்து வரும் மத்திய அரசு தாமிர பரணியை பாதுகாக்கவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின் றோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் நிர்வாகிகள் அகமது நவவி, சேக் அப்துல்லா, மாநில பேச்சா ளர் பேட்டை முஸ்தபா, மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செ யலாளர் கனி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், உமர், சிக்கந்தர், சத்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • தாமிரபரணி ஆற்றில் 20 முதல் 25 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது.
    • ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழா இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டா டப்பட்டது. இதனை யொட்டி வண்ணார்ப் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் 20 முதல் 25 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. தென் மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் விவசாய தேவைக் காக பயன்படுத்தப்படும் இந்த தாமிர பரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். அதனை எப்போது நடத்துவது என்பது குறித்து நிர்வாகி களுடன் கலந்து ஆலோசித்து விரைவில் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, துணைத்தலைவர்கள் வெள்ளை பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், பேட்டை சுப்பிரமணியன், மாரியப்பன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், ஜெய்னுல் ஆப்தீன், ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, மாவட்ட செயலாளர்கள் செய்யதலி, மணி, முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அன்சாரி, மாவட்ட அமைப்பு சாரா தொழி லாளர் அணி தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×