அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

விழாவை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியற்றப்பட்டது.
சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்தபடம்.
சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்தபடம்.
Published on

கல்லிடைக்குறிச்சி:

அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவு படுத்துவதை தவறு என உணர்த்தும் திருத்தலமாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி ஆடித்தபசுவை முன்னிட்டு இன்று கொடியோற்று விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் உள்ளிட்டவை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் அம்பை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சி களான சங்கரநாராயணர் காட்சி தரிசனம் மற்றும் சங்கரலிங்க சுவாமி சுவாமி அம்பாளுக்கு இடப வாகன காட்சி தரிசனம் வருகிற 31 -ந் தேதி மாலை நடைபெற இருக்கிறது. மேலும் மறுநாள் இரவு தெப்ப திருவிழாவும் நடைபெற இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com