என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booth Committee Meeting"

    • மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
    • பூத் கமிட்டி மாநாட்டில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார்.

    இந்த மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    பூத் கமிட்டி மாநாட்டில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்குவது பாஜகவின் கடமை.

    எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழக அரசுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார் அமித்ஷா.
    • மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார்.

    அங்கு, பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டு மேடைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார்.

    இந்த மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    • அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது என்றார் ஆதவ் அர்ஜுனா.
    • எங்கள் கட்டமைப்பை இரண்டு நாட்கள் கோவையில் பார்த்து இருப்பார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

    கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் 2ம் நாள் கருத்தரங்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.

    அப்போது அவ் பேசியதாவது:-

    வக்பு வாரிய சட்டத்திற்கு முதலில் போராட்டத்தை அறிவித்தது தவெக தான். தமிழகம் முழுக்க போராட்டத்தை தவெக நடத்தியது.

    வக்பு வாரிய விவகாரத்தில் விஜய் உச்சநீதிமன்றத்தை நம்பினார். ஒரு சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றால் அதற்கு மாநிலச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் தர முடியாது.

    தமிழக அரசு வக்பு சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது உண்மைதான். அதை வரவேற்கிறோம். ஆனால், அதை வைத்து அழுத்தம் தர முடியாது.

    கேரள அரசு வக்பு வாரிய விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, வக்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொள்ளாதது ஏன்..?

    விஜய் ஏன் 3 நிமிடம் மட்டுமே பூத் கமிட்டி மாநாட்டில் பேசினார் என சிலர் கேட்கிறார்கள். அவர் 3 நிமிடம் பேசியதற்கே கோவை ஸ்தம்பித்துவிட்டது. எனவே, எங்கள் திட்டம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எங்கள் தலைவர் விஜய்யின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்து கொள்வோம்.

    மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் பாதுகாப்பைக் கொடுங்கள் அதுவே போதும். தேர்தல் நடக்கும்போது மூத்த நிர்வாகிகளைக் காட்டிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கே அதிக பவர் இருக்கிறது.

    வாக்குப்பதிவின்போது கடைசி இரண்டு மணி நேரம் வாக்களிக்காதவர்களின் லிஸ்ட்டை வைத்து கள்ள ஓட்டுப் போட வாய்ப்பு இருக்கிறது. அதை பூத் கமிட்டி ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும்.

    நீங்கள் அது குறித்து குரல் எழுப்பினால், உடனே தலைமையின் ஆதரவு வந்துவிடும். அதன் பிறகு அவர்களால் வாக்குப்பெட்டிக்குச் சீல் வைக்க முடியாது. அதேபோல வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

    வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை பூத் கமிட்டி ஏஜெண்டுகள் உறுதி செய்ய வேண்டும். அதுவே பிரதானமானது.

    இத்தனை காலம் தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இல்லை என்ற விமர்சனங்கள் இருந்தது. இப்போது எங்கள் கட்டமைப்பை இரண்டு நாட்கள் கோவையில் பார்த்து இருப்பார்கள்.

    ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய செல்வாக்கு, இந்த இளைஞர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என பேசுகிறார்கள்.

    2026 தமிழக வெற்றிக் கழகத்திற்கான நாள்.. 2 நாட்களாக கோவை முடங்கிவிட்டது.. வரலாறு உருவாகும்போது பழைய காலத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.
    • நமது ஆட்சி சிறுவாணி தண்ணீர் போல தூய்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.

    கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் 2ம் நாள் கருத்தரங்கில் விஜய் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல.

    நமது ஆட்சி மலரும்போது ஊழல் இருக்காது, ஊழல் வாதிகள் இருக்க மாட்டார்கள்.

    மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்கா வாழு என்று அண்ணா கூறினார்.

    அண்ணா கூறியது போன்று மக்களிடம் சென்று நம் கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும்.

    மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.

    நமது ஆட்சி சிறுவாணி தண்ணீர் போல தூய்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.

    வாக்குச்சாவடி வரும் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
    • மாநாட்டிலும் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு பூத்துக்கு ஒரு பெண், ஒரு ஆண் என தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 70 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான மாநாட்டை 5 மண்டலங்களாக பிரித்து நடத்த விஜய் தீவிரம் காட்டினார்.

    முதல் கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவை மண்டல அளவிலான வாக்கு ச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.

    முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, வாக்கு சாவடி முகவர்களுக்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய பூத் கமிட்டி புத்தகம், எலக்ட்ரானிக் டேட்டா கொண்ட பென் டிரைவ்களை வழங்கி பேசினார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த மாநாட்டிலும் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

    தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் விஜய் அங்கிருந்து கார் மூலமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார். இன்னும் சற்று நேரத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற

    • தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய், நிர்வாகிகள், மக்கள் முன்னிலையில் பேசினார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்ியது.

    இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

    பூத் கமிட்டி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பேசினர்.

    பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய், நிர்வாகிகள், மக்கள் முன்னிலையில் பேசினார்.

    இந்நிலையில், விஜய் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.

    • கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்ததில்லை.
    • தமிழக வெற்றிக் கழகம் தான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

    அப்போது அவர், "30 வருஷமா ஊழல் பண்ணதாலதான் ரெய்டு வருது... ரெய்டுக்கு நீங்க பயப்படும் நேரத்தில், நாங்கள் மக்கள் ஆதரவை பெறுகிறோம்" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ இன்றைக்கு பெரும்பாலும் தலைவர்கள் மாநாடு நடத்தினாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ மக்களை காசு கொடுத்து வரவழைக்கும் நிலைமை தான் இருக்கிறது.

    ஆனால் இன்றைக்கு பூத் லெவல் மீட்டிங் என்று சொன்ன உடனே நூறு சதவீதம் வருகை இருக்கிறது என்றால் இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதி.

    கட்சி கட்டமைப்போடு மக்களுடைய ஆதரவு. இன்றைக்கு எங்களுடைய தலைவர் அழைத்தால் லட்ச கணக்கில் மக்கள் அணிதிரள்கிறார்கள் என்றால் அது தவெகவின் வெற்றி.

    இளைஞர்கள் கூட்டம் சுமார் 5 ஆயிரம் பேர் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். இதுதான் இளைஞர்களுடைய எழுச்சி.

    கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்ததில்லை. அதற்கு எங்கள் தலைவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

    மற்ற கட்சிகளின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்றால், 40 ஆண்டுகளாக ஒரே மாவட்ட செயலாளர்கள். குடும்பத்தில் இருந்து ஒரே இளைஞரணி தலைவர். மாவட்ட செயலாளர்களின் வெற்றி என்னவென்றால் 30 ஆண்டுகளாக ஊழல் செய்து மருத்துவ கல்லூரி கட்டி செட்டில் ஆகி இருப்பது தான்.

    அதனால் தான் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. நீங்கள் ரெய்டு வருவதைக் கண்டு பயந்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டு இருக்கிறோம். இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி.

    2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மீது அதிருப்தியில் இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகம் தான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூத் கமிட்டி ஏஜெண்டுகள் தான் தேர்தல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
    • நாம் என்ன செய்ய உள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் நீங்கள்.

    பூத் கமிட்டி கருத்தரங்கு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் என் நெஞ்சில் குடியிருக்கும் கோவை மக்களுக்கும், எனது தோழர்களுக்கும் வணக்கம் என தனது உரையை தொடங்கினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    கோவை என்றாலே மக்களின் மரியாதை தான் முதலில் ஞாபகம் வருகிறது.

    பெயர் தான் பூத் லெவல் பயிற்சி பட்டறை. ஆனால் இங்கு வேறு ஏதோ நிகழ்வு நடப்பதை போல உள்ளது.

    பூத் கமிட்டி என்றால் ஓட்டுக்காக நடைபெறுவது மட்டும் அல்ல என்பது எனது பார்வை. மக்களுடன் நாம் ஓன்றிணைய போகிறோம் என்பது தான் இந்த பயிற்சி பட்டறை.

    இதுவரை செய்தவர்களை போல் நாம் செய்ய போவதில்லை. மனதில் நேர்மை இருக்கு, கறை படியாத அரசியல் கைகள் உள்ளது. உழைக்க உடம்பில் தெம்பு இருக்கிறது. நமக்கான களம் தயாராக இருக்கிறது.

    மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கும் வேலை நடக்க விட மாட்டோம்.

    பூத் கமிட்டி ஏஜெண்டுகள் தான் தேர்தல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

    ஆட்சிக்கு வர நினைப்பது மக்களுக்காக மட்டுமே. மக்களின் நலனுக்காக மட்டுமே தவேக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.

    நமது கட்சி மேல் நம்பிக்கையை மக்களிடம் கொண்டு வரப் போவதே பூத் லெவலில் வேலை பார்க்கும் நீங்கள் தான். நாம் என்ன செய்ய உள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் நீங்கள்.

    நம்பிக்கையோடு களம் இறங்குங்கள் வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றபடி ரோடு ஷோ நடத்தினார் விஜய்.
    • கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.

    இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வீதம் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தற்போது மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர், கோவை விமான நிலையத்தில் இருந்து தனியார் ஓட்டலுக்கு சென்ற விஜய் சிறிது ஓய்வுக்கு பிறகு பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றபடி ரோடு ஷோ நடத்தினார்.

    அப்போது, வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு சிலர் விஜய்யின் கார் மீது ஏறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

    • மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டம்.
    • நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த கூட்டணியில் பா.ம..க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காயை நகர்த்தி வருகிறார்.

    சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று இரவு சைவ அசைவ உணவுகளுடன் இரவு விருந்து அளிக்கிறார்.

    இதைத் தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மாலை 4.30 மணி அளவில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் போட்டிருப்பதை உறுதி செய்து எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதன்படி ஒவ்வொரு பூத்துக்கும் 45 வயதுக்குட்பட்ட 9 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட பொது கமிட்டி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மாநில அளவிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து பூத்களிலும் மிகுந்த கவனத்தோடு செயல்படுவதற்கான அறிவுரைகள் அவர்கள் மூலமாக பூத் கமிட்டியின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி நாளை பூத்தமிட்டி பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடு கிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சட்டமன்றதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்க உள்ளார். பூத் கமிட்டி நிர்வாகிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனி சாமி ஏற்பாடு செய்திருப்ப தன் மூலம் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அவர் தீவிரமாக தயாராகி இருப்பது தெரியவந்து உள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பா கவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • 26-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.
    • புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கட்சி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கட்சியில் புதிதாக சேர்ந்த வர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் கட்சி ரீதியாக 2 தொகுதிகளுக்கு 1 மாவட்டங்களாகவும் சில மாவட்டங்கள் 1 தொகுதிக்கு ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 144 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 6 மாவட்ட செயலாளர்களுக்கான பட்டியலை அறிவிப்பு விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.

    இதற்கிடையே கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடந்தது. கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அடுத்த கட்டமாக பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி கடந்த சில மாதங்களாக கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

    ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 35 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. மொத்தம் 70 ஆயிரம் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பணிகள் முடி வடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு வருகிற 26, 27-ந் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் நடைபெற இருக்கிறது.

    இந்த மாநாடு 2 மண்டலங்களாக நடக்கிறது. கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களுக்கான மாநாடு நடைபெறுகிறது.

    26-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    மாநாட்டில் தேர்தல் ணிகள், மக்களிடையே தமிழக வெற்றிக் கழக திட்டங்களை கொண்டு செல்வது மற்றும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான யூகங்கள் பற்றி விஜய் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

    இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அதிரடி அரசியல் பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாநாடு நடைபெறும் இடத்தை சமீபத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாநாட்டுக்கான முன் ஏற்பாட்டு பணிகளில் கோவை மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
    • ஒன்றிய பகுதிகள் முழுவதிலும் உள்ள கிளைகளில் பூத் வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ஒன்றிய பகுதிகள் முழுவதிலும் உள்ள கிளைகளில் பூத் வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டது. இளைஞர் மற்றும் இளம்பெண், பாசறை, தகவல் தொழில் நுட்ப அணியினருடன் 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், ஒன்றிய கவுன்சிலர்கள் கோபி, ஆலோசனை மரியான், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கண்ணன், போடுசாமி, வக்கீல் அணி பரமசிவம், ஜெயலலிதா, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ், தினேஷ், ஆதி லிங்கம், சின்னத்துரை, ஆறுமுகசாமி, கிருபானந்த முருகன், முத்துச்சாமி, புதியம்புத்தூர் சுப்பிரமணியன், ராமசாமி, தகவல் தொழில் நுட்ப அணி ராஜேஷ்குமார், கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×