search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் பேசிய காட்சி. அருகில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளார்.

    இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.
    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், இளைஞர் பாசறை செய–லாளர் முத்துப்பாண்டி, ஹரிகரசிவசங்கர், மகளிர் அணி ஜான்சிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், பூத்கமிட்டி அமைப்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் பகுதி செய லாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், மோகன், சண்முககுமார், சக்திகுமார், சிந்துமுருகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், நெல்லை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிமுகம்மது சேட், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி துணை செயலாளர் மாரீசன், வக்கீல் அன்பு, வட்ட செயலாளர் பாறையடி மணி, தச்சை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×