search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election 2019"

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    அரியலூர் :

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 7,36,655 ஆண்கள், 7,42,394 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலி னத்தவர்கள் என மொத்தம் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சிதம்பரம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி, நாம் தமிழர் கட்சியில் சிவஜோதி உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவர், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவர், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)-20,867

    சந்திரசேகர் (அ.தி. மு.க.)-20,686

    முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார்.
    மேற்கு வாங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்களில் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
    பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது பாஜக கட்சியின் 2 வேட்பாளர்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

    இதேபோல் வடக்கு கொல்கத்தாவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் பூத்தை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.



    இதனைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்கனவே 6-கட்ட தேர்தலின் போதும் மேற்கு வங்காளத்தில் வன்முறை ஏற்பட்டது. கடைசி கட்ட பிரச்சாரத்தில் மோதல் ஏற்பட்டதால் பிரசாரம் ஒரு நாளைக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இதேபோல பஞ்சாபிலும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மீண்டும் சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் மாநிலக்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக ஆட்சியமைப்பதை தடுப்பற்கான யுக்திகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுக்குப்பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    அதன்பின் கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று டெல்லியில் மீண்டும் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரியுடன் நடத்திய ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    தேர்தல் என்ற ஜனநாயக திருவிழாவில் மக்கள் பங்கேற்றது பாராட்டத்தக்கதாகும் என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
    உத்தர பிரதேசத்தில் வாரணாசி உட்பட 13 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    வாக்களித்த பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘தேர்தல் ஜனநாயகத்தின் திருவிழா. அந்தவகையில் வாக்காளர்கள் திரண்டு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியது பாராட்டுக்குரியது.

    உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தை நீங்கள் ஒப்பீட்டு பார்த்தீர்கள் என்றால், 6-ம் கட்ட தேர்தலின்போது மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் உ.பி-யில் நடந்ததாக எந்த தகவலும் இல்லை’’ என்றார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சொந்த மாநிலம் பஞ்சாப். இன்று பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஹர்பஜன் சிங் ஜலந்தரில் உள்ள கார்கி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். பஞ்சாபில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
    நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கடைசி பேரணியில் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது.

    பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பாஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

    இன்று அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோன் பொதுக்கூட்டத்தில் பேசினார். 2019 தேர்தலுக்கான மோடியின் கடைசி பொதுக்கூட்டமாகும். இந்த கூட்டத்தில் ‘‘300 இடங்களுக்கு மேல் உறுதியாக கைப்பற்றுவோம்’’ என்று பேசினார்.

    இதுகுறித்து கார்கோன் கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

    காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குட்ச் (குஜராத்) முதல் கம்ருப் (அசாம்) வரை ஒட்டுமொத்த நாடே, மோடி அரசு 300 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று சொல்கிறது. 19-ந்தேதி வாக்களிப்பதன் மூலம் புதிய வரலாற்றை படைக்க இருக்கிறீர்கள். பல வருடங்கள் கழித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு ஆட்சியை தேர்வு செய்ய இருக்கிறீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    மக்களவை தேர்தலில் 12,915 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு விண்ணப்பங்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான படிவம் முறையாக வழங்கப்படவில்லை என்றும், இதனால் ஒரு லட்சம் பேர், தபால் வாக்குகளை செலுத்தவில்லை எனவும் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாகவும், தபால் வாக்களிக்க முடியாமல் போன அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்க உத்தரவிடுமாறு, சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


    ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் முக்கியமானது எனக்கூறிய நீதிபதிகள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் ஓட்டுக்களுக்காக எத்தனை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன, எத்தனை தபால் வாக்குகள் பதிவாகின என்பது போன்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “தபால் வாக்குகள் அளிக்க 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் வாக்களித்தனர்.

    12915 பேரின் வாக்குகள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யாததாலும், அவர்களுடைய பிறந்த நாள் உள்ளிட்ட சில தகவல்கள் எங்களிடம் உள்ள ஆவணங்களுடன் ஒத்துப்போகாததாலும் நிராகரிக்கப்பட்டன. 39, 7291 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன” என்று குறிப்பிட்டிருந்தது.

    அதன்பின் தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
    மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் இன்று சாலை வழியாக பேரணி நடத்தி வாக்கு திரட்ட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’’ என்று பிரசாரத்தின்போது பேசினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. மத்திய பிரதேசம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் தாகூரிடம் இதுகுறித்து உங்களது கருத்து என்ன? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது ‘‘கோட்சே தேசபக்தர்’’ என்று பதில்அளித்தார். மகாத்மா காந்தியை கொன்றவனை தேசபக்தர் என்பதா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பின.

    மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டது. அதனடிப்படையில் இன்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து முழு அறிக்கை தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.



    கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரக்யா சிங் இன்று புர்கான்பூரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு திரட்ட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் ‘ரோடு ஷோ’ ரத்து செய்யப்பட்டுள்ளது என கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தின் பாணியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வாக்களித்திருக்கிறார். #Sarkar
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி, தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.

    இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48-ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49 பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 



    இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

    தேனி ஆண்டிப்பட்டியில் இயங்கி வந்த அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தகவல். #Andipatti #AMMK #Election2019 #ECRaid
    தேனி:

    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    மேலும் அவ்விடத்திற்கு கூடுதலாக காவலர்களும், அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.  அமமுக அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் வருமான சோதனை அதிகாரிகள் சோதனை செய்யதனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

    வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



    அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

    தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில்  நேற்று இரவு 8 மணி முதல் விடிய விடிய சுமார் 10 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் பணம் இருந்ததாக அதிகாரிகள் தகவல் அளித்தனர்.   மேலும் அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே நுழைய முயன்ற போது அவர்களை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி, சுமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    #Andipatti #AMMK #Election2019 #ECRaid
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். #Andipatti #Election2019
    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

    வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பணம் எண்ணும் பணி நடைபெற்று வரகிறது. #Andipatti #Election2019
    ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். #MKStalin #Election2019
    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்பின், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

    ‘யாரை திருப்திபடுத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு மோடியின் காலில் மிதிப்பட்டுக் கிடக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம். வேலூரில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திமுக தான்’ என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ×