என் மலர்
நீங்கள் தேடியது "Pragya Singh Thakur"
- லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள்.
- நம் வீட்டிற்குள் புகுந்து யாராவது தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை.
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைபெற்ற இந்து வேதிகா அமைப்பின் தென் மண்டல மாநாட்டில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தங்களை தாக்குபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்துக்களுக்கு உள்ளது. அவர்கள் எதுவும் கிடைக்காவிட்டால் லவ் ஜிஹாத் செய்வார்கள். காதலித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். நாங்கள் கடவுளை நேசிக்கிறோம். கடவுளை நேசிக்கும் ஒரு சன்யாசி கூறுகிறார், கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த உலகில், தவறு செய்பவர்கள், பாவிகள் அனைவரையும் அழித்து விடுங்கள்,லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள். உங்கள் பெண்களைப் பாதுகாக்க சரியான முறையில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் காய்கறிகளை வெட்டப் பயன்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருக்க வேண்டும். எப்போது என்ன நிலை வரும் என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. நம் வீட்டிற்குள் யாராவது புகுந்து தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை. கத்திகள் காய்கறிகளை வெட்டுவது போல், வாயையும் தலையையும் வெட்டுகிறது.
மிஷனரிகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதை நிறுத்துங்கள். அப்படி அனுப்புவதன் மூலம், முதியோர் இல்லங்களின் கதவுகளை உங்களுக்காக நீங்கள் திறக்கிறீர்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள். அவர்கள் வளர்ந்து சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பிரக்யா சிங், பிரசாரத்தின்போது, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மும்பை தாக்குதலில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேயின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்றும் கூறினார். இத்தகைய பேச்சுகளால், பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்ட அசம்கான், தனது எதிரணி வேட்பாளரான நடிகை ஜெயபிரதா குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையை உண்டாக்கினார். அவர் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலம் பெகுசாரையில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் 4 லட்சத்து 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் தட்சணகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நளின் குமார் கதீல், உத்தரகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
அப்போது ‘‘கோட்சே தேசபக்தர்’’ என்று பதில்அளித்தார். மகாத்மா காந்தியை கொன்றவனை தேசபக்தர் என்பதா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பின.
மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டது. அதனடிப்படையில் இன்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து முழு அறிக்கை தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரக்யா சிங் இன்று புர்கான்பூரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு திரட்ட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் ‘ரோடு ஷோ’ ரத்து செய்யப்பட்டுள்ளது என கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.