என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒவைசி"

    • இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது.
    • அங்கு இடம் கிடைக்காததால் தனியாக போட்டியிட முடிவு.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக- ஜே.டியு.-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி 100 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத இருவருக்கும வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இதில் அக்கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இம்ரான் பெயரும் இடம் பிடித்துள்ளது. இக்கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு தூதுவிட்டது. ஆனால், தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்காததால் தனியாக போட்டியிட முடிவு செய்தது.

    • இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
    • வேட்புமனு தாக்கலுக்கு அவர் தனது ஆதரவாளர்களுக்கு வீட்டில் வைத்து பிரமாண்டமான முறையில் பிரியாணி விருந்து அளித்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

    ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இதற்கிடையே இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

    வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வரும் சூழலில் பீகாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் போட்டியிட உள்ள தவுசிப் ஆலம் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    வேட்புமனு தாக்கலுக்கு அவர் தனது  வீட்டில் வைத்து ஆதரவாளர்களுக்கு பிரமாண்டமான முறையில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

    இந்த விருந்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில் பிரியாணி பொட்டலங்களை அள்ளிச் செல்ல முந்திக்கொண்டு தள்ளுமுழுப்பட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமரிசனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    • இந்தியா கூட்டணியில் இடம் பெற AIMIM விரும்பியது.
    • ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் பதில் ஏதும் அளிக்காத நிலையில், 3ஆவது கூட்டணிக்கு முயற்சி.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத் மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக AIMIM களம் இறங்கப்போகிறது. நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அக்தருல் இமான் கூறுகையில் "100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன.

    2020 தேர்தலின்போது, நாங்கள் வாக்குகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம்சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.

    தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 3ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும்" என்றார்.

    கடந்த சட்டசபை தேர்தலின்போது, அசாதுதீன் ஒவைசி கட்சி, தனியாக போட்டியிட்டு மைனாரிட்டி வாக்குகளை பிரித்து, பாஜக கூட்டணி வெற்றிக்கு வழிவகுப்பதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா அனுமதித்ததற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஒவைசி கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து பேசிய ஒவைசி, "அசாம் முதல்வர், உத்தரபிரதேச முதல்வர் மற்றும் அவர்கள் அனைவருக்கும் எனது கேள்வி என்னவென்றால், பஹல்காமில் நமது 26 குடிமக்களின் மதத்தைக் கேட்டு அவர்களைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியை விளையாட மறுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா?

    26 உயிர்களை விட பணம் மதிப்புமிக்கதா? நேற்றும் அந்த 26 குடிமக்களுடன் நாங்கள் நின்றோம், இன்றும் அவர்களுடன் நிற்கிறோம், நாளையும் அவர்களுடன் நிற்போம்" என்று தெரிவித்தார்.

    • குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.
    • மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்.

    மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்த தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர். அவர்கள் தங்கள் மதத்திற்காக குறிவைக்கப்பட்டனர். வேண்டுமென்றே மோசமான வழக்கு விசாரணையே விடுதலைக்குக் காரணம்.

    குண்டுவெடிப்பு நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களையும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளது. மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் விடுதலையை நிறுத்தி வைக்குமாறு மோடி மற்றும் பட்னாவிஸ் அரசாங்கங்கள் விரைவாகக் கோரியதைப் போல இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யுமா?

    மகாராஷ்டிராவின் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இதை வலியறுத்துமா? 6 பேரைக் கொன்றது யார்?

    2016 ஆம் ஆண்டில், வழக்கில் அப்போதைய வழக்கறிஞர் ரோகிணி சாலியன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மென்மையாக நடந்து கொள்ளுமாறு NIA தன்னிடம் கேட்டதாகக் கூறியதை நினைவில் கொள்க.

    2017 ஆம் ஆண்டில், NIA, பிரக்யாவை விடுதலை செய்ய முயற்சித்தது என்பதை நினைவில் கொள்க. அதே பிரக்யா 2019 ஆம் ஆண்டு பாஜக எம்.பி.யாக மாறினார்.

    மாலேகானில் நடந்த சதித்திட்டத்தை கர்கரே கண்டுபிடித்தார். துரதிர்ஷ்டவசமாக 26/11 தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அவரை சபித்ததாகவும், அவரது மரணம் அவரது சாபத்தின் விளைவாகும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.

    தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகள் தங்கள் தவறான விசாரணைக்கு பொறுப்பேற்பார்களா? பதில் நமக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

    மோடி அரசாங்கம் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது உலகம் நினைவில் வைத்திருக்கும்" என்று தெரிவித்தார். 

    • நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு பாக்கியமா?
    • இந்தியப் பிரதமரிடமிருந்து வெறுப்புப் பேச்சுகளுக்கு இலக்காக இருப்பது ஒரு கௌரவமா?

    பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் அதிக சலுகைகளையும் பாதுகாப்பையும் பெறும் ஒரே நாடு இந்தியா என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், " நீங்கள் இந்தியக் குடியரசின் அமைச்சர், மன்னர் அல்ல. நீங்கள் இருப்பது அரசியலமைப்புச் சட்டப் பதவி , அரியணை அல்ல. சிறுபான்மை உரிமைகள் அடிப்படை உரிமைகள், தொண்டு அல்ல.

    இந்திய முஸ்லிமகள் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானியர், வங்கதேசியர், ஜிஹாதி அல்லது ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுவது ஒரு நன்மையா? கும்பல் கொலை செய்யப்படுவது பாதுகாப்பா? இந்தியக் குடிமக்கள் கடத்தப்பட்டு வங்கதேசத்திற்குள் தள்ளப்படுவது ஒரு பாதுகாப்பா?

    நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு பாக்கியமா? சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்றப்படுவதா?

    இந்தியப் பிரதமரிடமிருந்து வெறுப்புப் பேச்சுகளுக்கு இலக்காக இருப்பது ஒரு கௌரவமா? இந்தியாவின் சிறுபான்மையினர் இனி இரண்டாம் தர குடிமக்கள் கூட அல்ல. நாங்கள் பணயக்கைதிகள்.

    உதவிகள் பற்றிப் பேச விரும்பினால், இதற்கு பதிலளிக்கவும்: முஸ்லிம்கள் இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக இருக்க முடியுமா? இல்லை. ஆனால் உங்கள் வக்ஃப் திருத்தச் சட்டம் முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் சேர்க்க கட்டாயப்படுத்துகிறது. மேலும் அவர்கள் பெரும்பான்மையை உருவாக்க அனுமதிக்கிறது.

    முஸ்லிம் மாணவர்களுக்கு பயனளிக்க கூடாது என்பதால் நீங்கள் மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்பை நிறுத்தியுள்ளீர்கள். நீங்கள் மெட்ரிக்-க்கு முந்தைய மற்றும் தகுதி மற்றும் சராசரி உதவித்தொகைகளை குறைத்துள்ளீர்கள்.

    உயர்கல்வியில் எண்ணிக்கை குறைந்து வரும் ஒரே சமூகம் முஸ்லிம்கள் மட்டுமே. முறைசாரா பொருளாதாரத்தில் அவர்களின் இருப்பு அதிகரித்துள்ளது. உங்கள் பொருளாதாரக் கொள்கைகளால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உங்கள் சொந்த அரசாங்கத்தின் தரவு.

    இந்திய முஸ்லிம்களின் குழந்தைகள் மட்டுமே தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை விட மோசமாக வாழ்க்கை சூழலில் உள்ளனர். தலைமுறைகளுக்கு இடையேயான இயக்கம் தலைகீழாக மாறிவிட்டது.

    மற்ற நாடுகளின் பிற சிறுபான்மையினருடன் ஒப்பிட நாங்கள் கேட்கவில்லை. பெரும்பான்மை சமூகம் பெறுவதை விட அதிகமாக நாங்கள் கேட்கவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி என்று அரசியலமைப்பு வாக்குறுதியளிப்பதை நாங்கள் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • இந்தியர்கள் இந்தியர்களுடன் சண்டையிடும்போது நமது எதிரிகள் பயனடைவார்கள்.
    • டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தத்தை எட்டுவதுதான் இந்தியாவின் இலக்காக இருந்ததா?

    பாகிஸ்தான் - இந்தியா சண்டை ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்த நிலையில் இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

    பாகிஸ்தான் தனது பிரதேசத்தை இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்திற்காகப் பயன்படுத்தும் வரை, நிரந்தர அமைதி இருக்காது. போர் நிறுத்தம் அல்லது போர் நிறுத்தம் இல்லை பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் அடையாளம் காண வேண்டும்.

    ஆக்கிரமிப்புக்கு எதிராக நான் எப்போதும் அரசாங்கத்திற்கும் ராணுவத்துக்கும் ஆதரவாக இருந்து வருகிறேன். இது தொடரும்.

    ராணுவத்தின் துணிச்சலுக்கும் அவர்களின் பாராட்டத்தக்கத் திறமைக்கும் நான் நன்றி கூறுகிறேன். ராணுவ வீரர் எம் முரளி நாயக், ஏடிடிசி ராஜ் குமார் தாபா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். மேலும் மோதலின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அனைத்து பொதுமக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.

    இந்த போர் நிறுத்தம் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என்று நம்புகிறேன்.

    கடந்த இரண்டு வாரங்களில் நடந்தவற்றிலிருந்து இந்தியர்களும் அரசியல் கட்சிகளும் நிறைய கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தியா ஒன்றுபட்டால் வலிமையானது. இந்தியர்கள் இந்தியர்களுடன் சண்டையிடும்போது நமது எதிரிகள் பயனடைவார்கள்.

    எனக்கு சில கேள்விகள் உள்ளன, அரசாங்கம் அதை தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்:

    1. ஒரு வெளிநாட்டு நாட்டின் அதிபர் (டிரம்ப்) அறிவிப்பதை விட நமது பிரதமர் நரேந்திர மோடி போர் நிறுத்தத்தை அறிவித்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    1972 இந்தோ பாக் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது முதல் முதல் மூன்றாம் தரப்பு தலையீட்டை நாம் எப்போதும் எதிர்க்கிறோம். இப்போது மட்டும் ஏன் அதை ஏற்றுக்கொண்டோம்? காஷ்மீர் பிரச்சினை சர்வதேசியமாக்கப்படாது என்று நம்புகிறேன், ஏனெனில் அது எங்கள் உள்நாட்டு விஷயம்.

    2. நடுநிலையான பிரதேசத்தில் பேசுவதற்கு நாம் ஏன் ஒப்புக்கொள்கிறோம்? இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என்னவாக இருக்கும்? பாகிஸ்தான் தனது பிரதேசத்தை பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தாது என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கிறதா?

    3. எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதிலிருந்து பாகிஸ்தானைத் தடுக்கும் நமது இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தத்தை எட்டுவது இந்தியாவின் இலக்காக இருந்ததா அல்லது பாகிஸ்தானை மற்றொரு பயங்கரவாதத் தாக்குதலைக் கனவு கூட காணாத நிலைக்குக் கொண்டு வருவது இந்தியாவின் இலக்காக இருந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

     

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டமைப்பை முற்றிலும் அழிக்க வேண்டும்.
    • பயங்கரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும்.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இரவு முழுவதும் துல்லியமாக தாக்குதல் நடத்தியது.

    இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவரும்,எம்.பி.யுமான ஒவைசி பாராட்டு தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய ஒவைசி, "பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டமைப்பை முற்றிலும் அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும் என்பது அவசியம். மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • சிலர் காஷ்மீரிகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் வெட்கமற்றவர்கள்.
    • பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது தனது உயிரைத் தியாகம் செய்தது ஒரு காஷ்மீரி.

    மகாராஷ்டிரா மாநிலம் பிரபானியில் வக்பு திருத்தம் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவரும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது :-

    பாகிஸ்தான் தலைவர்களின் அச்சுறுத்தல்களால் எதுவும் செய்து விட முடியாது. "நீங்கள் அரை மணி நேரம் பின்தங்கியிருக்கவில்லை, இந்தியாவை விட அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கிறீர்கள். பாகிஸ்தான் நாட்டின் மொத்த பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டுக்கு கூட சமமாக இல்லை.

    "பாகிஸ்தான் தங்களிடம் அணுகுண்டுகள் இருப்பதாக திரும்பத் திரும்பச் சொல்கிறது. வேறொரு நாட்டிற்குள் சென்று அப்பாவி மக்களைக் கொன்றால், எந்த நாடும் அமைதியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்."

    பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் கொல்வதற்கு முன்பு பயங்கரவாதிகள் அவர்களின் மதத்தைக் கேட்டிருக்கிறார்கள் "நீங்கள் எந்த மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் கவாரிஜ்களை விட மோசமானவர்கள். இந்தச் செயல் நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் வாரிசுகள் என்பதைக் காட்டுகிறது.

    இந்தியாவை குறிவைத்து பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது. மேலும், சர்வதேச சட்டம் இந்தியா பாகிஸ்தானின் விமானப்படையை முற்றுகையிட அனுமதிக்கிறது.

    பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஷ்மீர் போலவே காஷ்மீரிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்தவர்கள். "சிலர் காஷ்மீரிகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் வெட்கமற்றவர்கள்.

    பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது தனது உயிரைத் தியாகம் செய்தது ஒரு காஷ்மீரி. காயமடைந்த குழந்தையை முதுகில் சுமந்து 40 நிமிடங்கள் நடந்து சென்று உயிரைக் காப்பாற்றியவவர் ஒரு காஷ்மீரி.

    காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்போது காஷ்மீரியும் இந்தியாவின் ஒரு பகுதிதான்.

    வக்பு திருத்தம் சட்டம் குறித்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்த போராட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.

    • முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ்வதற்கு தேவை இருந்திருக்காது
    • பாஜகவில் ஏன் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றினர்.

    பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் நேற்று பேசும் போது வக்பு திருத்த சட்டம் தொடங்க காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம்கள் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் அவர்களுக்கு 50 சதவீத தேர்தலில் போடடியிட டிக்கெட் வழங்குங்கள் என்று தெரிவித்து இருந்தார்.

    மேலும் "வக்பு சொத்துகளை நேர்மையாக பயன்படுத்தி இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ்வதற்கு தேவை இருந்திருக்காது" என்ற பிரதமர் மோடியின் பேசியிருந்தார்.

    பாஜகவில் ஏன் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றினர்.

    அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் குறித்த மோடியின் கருத்துக்கு அகில இந்தய மஜ்லீஸ் தலைவர் (AIMIM) ஓவைசி கூறும் போது, "ஆர்.எஸ்.எஸ். தனது சித்தாந்தத்தையும், வளங்களையும் நாட்டின் நலனுக்காக பயன்படுத்தி இருந்தால் பிரதமர் தனது குழந்தைப் பருவத்தில் தேநீர் விற்க வேண்டிய அவசியமில்லை. மோடியின் வக்பு திருத்த சட்டம் அவற்றை மேலும் பலவீனப்படுத்தும்" என்றார்.  

    • அசாமில் காய்கறி விலை உயர மியா வியாபாரிகள்தான் காரணம் என அம்மாநில முதல்வர் விமர்சனம்
    • எதற்கெடுத்தாலும் அவர்களை குறை கூறுவதா? என ஒவைசி கடும் விமர்சனம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய மழைக்கு முன்பதாக அசாம் மாநிலத்தில் பேய்மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர். குடிநீர், உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில் தஞ்சமடைந்தனர்.

    மழை காரணமாக காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து புலம்பெயர்ந்து அசாமில் குடியேறிய முஸ்லிம்கள் மியா என்று உள்ளூரில் மொழியில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ''காய்கறிகளை இவ்வளவு விலைக்கு உயர்த்தியது யார்? காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் மியா வியாபாரிகள். அசாம் மாநில மக்கள் காய்கறிகள் விற்பனை செய்திருந்தால், அவர்கள் விலைவாசியை உயர்த்தியிருக்க மாட்டார்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு முன் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அடிக்க மியா சமூகத்தினரை வகுப்புவாத அடிப்படையில் விமர்சனம் செய்து வருகிறார். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள், அசாம் மக்களுடைய கலாசாரம், மொழியை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

    ஹிமாந்தா பிஸ்மா சர்மாவின் மியா குறித்த கருத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்வினையாற்றியுள்ளார்.

    அவர் பதவிட்டுள்ள டுவிட்டரில் ''அசாமில் சில குரூப்புகள் உள்ளன. அவர்களின் வீட்டு எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும், கோழி முட்டையிட வில்லை என்றாலும், மியா (முஸ்லிம்கள்) மீதுதான் குற்றம்சாட்டுவார்கள். ஒருவேளை அவர்களுடைய தனிப்பட்ட தோல்விகளால் இதுபோன்று குற்றம் சாட்டலாம்'' என்றார்.

    வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கும் மோடிக்கும் இடையே நல்ல நட்புணர்வு இருக்கும் என பா.ஜனதாவினர் கூறி வரும் நிலையில், தற்போதைய நிலையில் அவர்களிடம் தக்காளி, கீரை, உருளைக்கிழக்கு உள்ளிட்டவைகள் கேட்டு நிர்வகிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் நாட்டிற்கு மோடி பயணம் செய்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜனதாவுடன் கைக்கோர்த்த தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உள்ளனர்
    • காங்கிரசை கடும் விமர்சனம் செய்த கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

    கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டாலும் சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. கர்நாடகாவில் உள்ள குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுக்கு அழைப்பு இல்லை.

    அழைக்கப்படாதது குறித்து ஒவைசி கட்சியின் செய்தி தொடரபாளர் வரிஸ் பதான் கூறுகையில் ''அவர்கள் எங்களை அழைக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் அரசியல் திண்டத்தகாதவர்கள். நிதிஷ் குமார், உத்தவ் தாக்கரே, மெகபூபா முப்தி உள்ளிட்ட அங்கிருக்கும் தலைவர்கள் பா.ஜனதாவுடன் ஏற்கனவே கைக்கோர்த்தவர்கள்.

    அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சட்டசபை தேர்தலின்போது காங்கிரசை கடும் விமர்சனம் செய்தார். அவரும் அங்கே உட்கார்ந்து இருப்பதை நாம் பார்த்தோம். நாங்கள் 2024-ல் மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். ஆனால், ஒவைசி மற்றும் எங்கள் கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

    ×