search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cash seized"

    • சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
    • மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    • கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தது.
    • மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்படும் மொபைல் கேம் ஆப் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிறுவனம் மற்றும் அதன் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு தாக்கல் செய்தது. கொல்கத்தா நீதிமன்றத்தில் பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மொபைல் கேம் ஆப் நிறுவன உரிமையாளர் நிசார் அகமது கானுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையை நடைபெற்ற இடங்களில் மத்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சோதனையின்போது ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கட்டுக்கட்டாக இருந்த அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    பணத்தை எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை எண்ணும் பணி நடைபெற்றது. இதுவரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த செயலி மற்றும் அதன் ஆபரேட்டர்கள் சீன கட்டுப்பாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை தகவல்கள் கூறியுள்ளன.

    நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் 3 இடங்களில் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாமக்கல்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு வளையப்பட்டி-காட்டுபுத்தூர் சாலையில் பறக்கும் படையினர் அரூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோகனூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் அருகே உள்ள பொம்மம்பட்டி அல்லாபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ரூ.60 ஆயிரத்துடன் நாமக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் காதப்பள்ளி பகுதியில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விஜயின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த அதிகாரிகள் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காண்பித்து விட்டு விஜய் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக பறக்கும் படை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பறக்கும் படை அதிகாரி ஆறுமுகம் தலைமையில் விரைந்து சென்ற அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம், அர்ஜூனன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்களிடம் ரூ.65 ஆயிரம் உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் அவர்களிடம் இருந்து பூத்சிலிப்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டு இருந்தபோது அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தரப்பில் மொளசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் 3 இடங்களில் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சத்து 94 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    தேனி ஆண்டிப்பட்டியில் இயங்கி வந்த அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தகவல். #Andipatti #AMMK #Election2019 #ECRaid
    தேனி:

    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    மேலும் அவ்விடத்திற்கு கூடுதலாக காவலர்களும், அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.  அமமுக அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் வருமான சோதனை அதிகாரிகள் சோதனை செய்யதனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

    வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



    அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

    தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில்  நேற்று இரவு 8 மணி முதல் விடிய விடிய சுமார் 10 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் பணம் இருந்ததாக அதிகாரிகள் தகவல் அளித்தனர்.   மேலும் அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே நுழைய முயன்ற போது அவர்களை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி, சுமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    #Andipatti #AMMK #Election2019 #ECRaid
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். #Andipatti #Election2019
    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

    வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பணம் எண்ணும் பணி நடைபெற்று வரகிறது. #Andipatti #Election2019
    ஊட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள். ஊட்டி சட்டமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் தேர்தல் பிரசாரம் செய்து விட்டு ஊட்டிக்கு வந்து கொண்டு இருந்தார். முதல்- அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு பின்னால் ஒரு கார் வந்தது. இந்த காரை ஊட்டி-குன்னூர் சாலை மைனலா சந்திப்பு பகுதியில் நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது காரில் ரூ.17 லட்சத்து 11 ஆயிரத்து 853 இருப்பது தெரியவந்தது. இந்த பணம் எல்லநள்ளியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட வங்கி செல்லான் இருந்தது. ஆனால் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த பணத்தை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் பார்வையிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரியிடம் தகவல் அறிக்கை வழங்கப்பட்டு, பின்னர் நீலகிரி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையில் ஊட்டியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தை தேர்தல் பார்வையாளர் கண்காணித்தார். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை(நேற்றைய நிலவரப்படி) 226 நபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 19 லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 155 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ரூ.2 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 240 விடுவிக்கப்பட்டு இருக்கிறது. 
    கரூர் மற்றும் குளித்தலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் லாலாபேட்டை பஸ்நிறுத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் வந்த திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த சாதிக்கிடம் (வயது 34) ரூ. 93 ஆயிரம் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது உறையூரில் இருந்து கொடுமுடிக்கு ஆடு வாங்கச் செல்வதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவர் வைத்திருந்த பணத்திற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து சாதிக்கிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குளித்தலை கோட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர்.

    இதே போல், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளந்தக்கவுண்டனுார் அம்பேத்கர் நகரில் நிலமெடுப்பு சிறப்பு தனிவட்டாட்சியர் அமுதா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கருர் அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கியாஸ் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா (வயது 32) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்து நிறத்தி விசாரித்த போது, அவர் உரிய ஆவணம் இன்றி ரூ.92 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கரூர் வட்டாட்சியர் பிரபுவிடம் ஒப்படைத்தனர்.

    பறக்கும்படை மற்றும் நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரால், இதுவரை ரூ.35 லட்சத்து 70 ஆயிரத்து 338 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.30 லட்சத்து 31 ஆயிரத்து 488 ரொக்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. 
    மணப்பாறை, லால்குடியில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சத்து 87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    மணப்பாறை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்லலாம், அதற்குமேல் பணம் கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று காலை தாசில்தார் சாந்தகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை காய்கனி மார்க்கெட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன பால்வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 920 இருந்தது.

    விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தனியார் பால் நிறுவன ஊழியர்கள் சென்னை தாம்பரம் பகுதியில் பால் விற்பனை செய்த வகையில் வசூலான பணம் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு மணப்பாறை தாசில்தார் சித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தொடர்ந்து அதே பறக்கும் படையினர் கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மொய்து என்பவரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், ஜாபர் என்பவரிடம் ரூ.3 லட்சமும் இருந்தது. விசாரணையில், இருவரும் மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்க வந்த வியாபாரிகள் என்பது தெரிய வந்தது. ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் பிள்ளையார்கோவில்பட்டியில் தேர்தல் அதிகாரி சற்குணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம், ரூ.97 ஆயிரத்து 550 இருந்தது. விசாரணையில், அவர் கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பைனான்ஸ் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப் பட்டது. மணப்பாறையில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன சோதனையின்போது 4 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 24 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டது.

    லால்குடி-சிறுதையூர் நால்ரோடு சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியாக திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி வந்த ஒரு காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 900 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவர், லால்குடியை சேர்ந்த அசோக்குமார் என்பதும், இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருவதும், தனது நிறுவனத்தில் வசூல் ஆன தொகையை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. 
    வேட்டவலம் அருகே பாய் வியாபாரத்தில் ஈடுபட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாததால் அவர் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த நாரையூர் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சஜேஸ்பாபு மற்றும் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. சந்தேகமடைந்த பறக்கும் படையினர் அந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ஆவூர் கிராமத்தை சேர்ந்த பாய் வியாபாரி ஜான்பாஷா (வயது 50) இருந்தார். அவர் ரூ.99 ஆயிரத்து 400 வைத்திருந்தார். பாய் வியாபாரம் செய்து விட்டு அதில் கிடைத்த பணத்துடன் திரும்பிக்கொண்டிருப்பதாக அதிகாரிகளிடம் அவர் கூறினார். ஆனால் உங்களிடம் உரிய ஆவணம் இல்லை எனக்கூறி அந்த பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்த பின்னர் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என பறக்கும் படைடயினர் அவரிடம் கூறினர்.

    இதேபோல் போளூர் தனி தாசில்தார் சுரேஷ் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் பேட்டை கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக போளூர் நோக்கி வந்த லாரியை அவர்கள் மடக்கி சோதனை செய்தனர்.

    அந்த லாரியில் செங்கம் தாலுகா ஓரந்தவாடி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் குப்பன் (வயது 64) வந்தார். நெல் வியாபாரியான அவரிடம் ரூ.70 ஆயிரம் இருந்தது. கேளூரில் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவர் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர். அந்த பணம் போளூர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. 
    வாகன சோதனையில் ரூ.85ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்புவனம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனத்தை அடுத்த திருபாச்சேத்தி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை தாசில்தார் செந்தில்வேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரபாரதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் அந்த காரில் ரூ.85ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த காரில் சென்றவர், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவருக்கு படகு உபகரண பொருட்கள் வாங்க சென்றதாக தெரிவித்தார்.
    பெரம்பலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    பெரம்பலூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோட்டில் நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனிச்செல்வன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அல்போன்ஸ் (வயது 47) என்பது தெரியவந்தது. அவர் உரிய ஆவணங்களின்றி வைத் திருந்த ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் அரியலூர்-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் கவுல்பாளையம் வழியாக வந்த வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சின்னதுரை, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த யூஜின் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.58 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர். அல்போன்ஸ், யூஜின் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படை யினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக 2 பேரிடம் மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஈரோடு அருகே காரில் சென்ற சித்த மருத்துவரிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே ரகுபதிநாயக்கன்பாளையம் அவல்பூந்துறை ரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குருசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ஈரோட்டில் இருந்து முள்ளாம்பரப்பு நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் காரில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த ஒரு பெட்டியில் ரூ.1 லட்சத்து 720 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், அவர் ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பதும், அவர் சித்த மருத்துவர் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் கொண்டு சென்ற பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “உரிய ஆவணத்தை காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்”, என்றார்.
    ×