search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Winter Session"

    • டெல்லி காவல்துறை இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துகிறது
    • எதிர்ப்பு குரல்களை நசுக்கி மசோதாக்களை நிறைவேற்ற முயல்வதாக கார்கே குற்றச்சாட்டு

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடர் இம்மாதம் 22 வரை நடக்க உள்ளது.

    டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் மக்களவை அலுவல்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து 2 பேர் அவையில் குதித்தனர். ஒருவர் கோஷமிட்டு கொண்டே உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை வீசினார். இதில் மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பி பல எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த நபர் மேசைகளின் மீது தாவி குதித்து கொண்டே சபாநாயகர் இருக்கை அருகே செல்ல முயன்றார். மற்றொரு நபர் கோஷமிட்டு கொண்டே அங்கும் இங்கும் ஓடினார். சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்து நின்ற போதும் ஒரு சில எம்.பி.க்கள் துணிந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து, அங்கு விரைந்து வந்த சபைக்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் நடைபெற்ற அதே நேரம், அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இதே போன்று கோஷமிட்டு, வர்ண புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்துள்ள டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 47 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

    இந்நிலையில் ஆளும் பா.ஜ.க.வை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:

    பாதுகாப்பு குறைபாடு காரணமாக மர்ம நபர்கள் பாராளுமன்றத்தையே தாக்க துணிந்தனர். ஆனால், மோடி பாராளுமன்றத்தையும் ஜனநாயக மாண்புகளையும் தாக்குகிறார். 47 பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் அனைத்து ஜனநாயக மாண்புகளையும் மோடி குப்பை தொட்டிக்குள் போட்டு விட்டார்.

    எங்களுக்கு 2 கோரிக்கைகள்தான்: பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது மன்னிக்க முடியாதது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும். மற்றொன்று, இச்சம்பவம் குறித்த ஆழமான விவாதம் நடைபெற்றே ஆக வேண்டும்.

    அச்சு ஊடகத்தில் பிரதமர் பேட்டியளிக்கிறார்; தொலைக்காட்சி சேனல்களில் உள்துறை அமைச்சர் பேட்டி அளிக்கிறார். ஆனால், இந்திய மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான பாராளுமன்றத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து இருவரும் தவறி, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.

    இதன் மூலம் எதிர்கட்சிகள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்கி, எதிர்ப்பு குரல்களை நசுக்கி, அவர்கள் விரும்பும் வகையில் அவர்கள் கொண்டு வர துடிக்கும் சட்டங்களை எந்த வித விவாதங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல் எளிதாக கொண்டு வர முடியும்.

    இவ்வாறு கார்கே குற்றம் சாட்டினார்.

    • 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
    • ஏன், எப்படி இந்த சம்பவம் நடந்தது என தெரிந்தாக வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்

    நேற்று மக்களவையில், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவையில் குதித்த இரு இளைஞர்கள், சபாநாயகரை நோக்கி கோஷமிட்டு கொண்டே ஓடி, தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பிகளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியதால் அவையில் இருந்த உறுப்பினர்களில் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

    உறுப்பினர்களில் சிலர் துணிச்சலாக அந்த இருவரையும் மடக்கி பிடித்து அங்கு விரைந்து வந்த சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதே நேரம், அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் கோஷமிட்டு கொண்டே வர்ண புகை குப்பிகளை வீசினர். அவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    நால்வரையும் கைது செய்த புது டெல்லி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மக்களவை இன்று கூடிய போது எதிர்கட்சி உறுப்பினர்கள் நேற்றைய சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஒன்றுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

    இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் காலம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த சஸ்பென்ஷன் நடவடிக்கை பரவலாக அரசியல் தலைவர்களால் கண்டனம் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்ததாவது:

    உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். நேற்றைய சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினோம். ஆனால், இந்த சர்வாதிகார அரசால் அதை கூட ஏற்று கொள்ள முடியவில்லை. இது மிகவும் முக்கியமான பிரச்சனை. அவை நடவடிக்கைகள் தொடர வேண்டுமென்றால் அமித் ஷா வந்தே ஆக வேண்டும். எங்களுக்கு வீண் விவாதங்கள் தேவை இல்லை. ஏன், எப்படி இந்த அச்சுறுத்தும் சம்பவம் நடந்தது என தெரிய வேண்டும். பிரதமரும் உள்துறை அமைச்சரும் அமைதி காக்கின்றனர். அவர்கள் இருவரும் அவைக்கு வந்து தங்கள் தரப்பில் கூற வேண்டியதை கூறட்டும். அதற்கு பிறகுதான் அவை நிகழ்ச்சிகள் நடக்கும்.

    இவ்வாறு ஜெய்ராம் கூறினார்.


    • கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது
    • 2 நிதி மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜோஷி தெரிவித்தார்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 22 அன்று நிறைவடைய உள்ளது. இக்கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இடம்பெறும்.

    முன்னதாக பாராளுமன்ற நடவடிக்கைகள் கூச்சல், குழப்பங்கள், தடைகள் ஏதுமின்றி நடைபெற அனைத்து கட்சியினரின் ஒத்துழைப்பை கோரும் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அதில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ள பிரச்சனைகள், கோரிக்கைகள், கண்டனங்கள் உள்ளிட்ட விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

    எதிர்கட்சிகள் தரப்பில், உயர்ந்து வரும் விலைவாசி, புலனாய்வு அமைப்புகளின் துஷ்பிரயோகம் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆளும் பா.ஜ.க. கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய கிரிமினல் சட்டங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவமும், சொல்லகராதியையும் எதிர்கட்சிகள் கோரின.

    இக்கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசும் போது, "19 மசோதாக்களையும், 2 நிதி மசோதாக்களையும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். அனைத்து விஷயங்களையும் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்கட்சிகள் விவாதங்களுக்கான சூழலை அமைக்க ஒத்துழைப்பு தர வேண்டும். பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம்" என தெரிவித்தார்.

    ஆளும் கட்சி திட்டமிட்டபடி என்னென்ன மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறப்படும் என்பது வரப்போகும் நாட்களில் தெரிய வரும்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் கூடுகிறது.
    • குளிர்கால கூட்டத் தொடரில் 18 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் (4-ம் தேதி) கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 19 நாட்களில் 15 அமர்வுகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    குளிர்கால கூட்டத் தொடரில் 18 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதில் 7 புதிய மசோதாக்கள், 11 நிலுவை மசோதாக்கள் ஆகும்.

    பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்றக் குழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டம் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் நடந்தது.

    இதில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அர்ஜுன்ராம், காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

    • 5 மாநில சட்டசபை தேர்தலால் இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தொடரின் போது 5 மாநில தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    • 5 மாநில தேர்தல் காரணமாக இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தக் கூட்டத்தொடரின் போது பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    • 5 மாநில தேர்தல் காரணமாக இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    • வருடாவருடம் வழக்கமாக 3 கூட்டத்தொடர்கள் நடைபெறும்
    • சிறப்பு கூட்டத்தொடரின் மசோதாக்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகிறது

    ஒவ்வொரு வருடமும் இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக கூட்டப்படும். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றுவரை பாராளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவல்கள் நாளை முதல் புதியதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற துவங்கும்.

    இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்காக எடுத்து கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023, அஞ்சல் அலுவலக மசோதா 2023 மற்றும் மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மற்றும் "இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றம் செய்வது" ஆகிய திட்டங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    • அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது
    • பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அதே போல் மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி விவாதிக்க கோரி வருகின்றனர்.

    எதிர்க்கட்சியினர் அமளியால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றும் அமளி ஏற்பட்டது. காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    அவர்களை அமைதி காக்கும் படியும், இருக்கையில் அமருமாறும் சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனால் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பியவாரே இருந்தனர். தொடர்ந்து கூச்சல், அமளி நிலவியது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதேசமயம் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.

    எல்லையில் நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியான தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் கடந்த 9ந்தேதி ஊடுருவ முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    சீனாவின் அத்துமீறல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டன.

    அதேநேரத்தில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். ஆனாலும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியால் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு இரு அவைத் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், வேணுகோபால், ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    சீன எல்லை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இன்றும் ஒத்திவைப்பு நோட்டீசை கொடுத்தது. காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி இதை அளித்தார்.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ராகுல்காந்தியின் பாத யாத்திரைக்கு நிபந்தனை விதிக்கப்பட்ட பிரச்சினையும் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபா நாயகர் ஓம்பிர்லா 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

    பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒற்றுமை பயணத்தின்போது ராஜஸ்தானின் அல்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது, அருணாசல பிரதேச எல்லையில் சமீபத்தில் நடந்த இந்தியா-சீனா மோதல் குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

    அவர் பேசும்போது, "காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிரை தியாகம் செய்தார்கள். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். பாஜக எதையும் இழக்கவில்லை. உங்கள் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? இருப்பினும், அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுகிறோம்" என்றார்.

    கார்கே, பாஜகவை தாக்கி பேசும்போது நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கார்கே கூறிய கருத்திற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

    நாகரிமற்ற வகையில் மனதை புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதற்காக பாஜகவிடமும், பாராளுமன்றத்திடமும், நாட்டு மக்களிடமும் கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் வலியுறுத்தினார். இந்த விவகாரம் காரணமாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், இந்த கருத்து பாராளுமன்றத்திற்கு வெளியே கூறப்பட்டதாக கூறினார். நாட்டின் 135 கோடி மக்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் யாரோ எதையோ பேசியிருக்கலாம். நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்றும் அவைத்தலைவர் கூறினார்.

    இதற்கிடையே தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 

    • ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
    • இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்தார். அவர் பேசியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 31 வீரர்கள் பணியின்போது உயிரிழந்து உள்ளனர். பொதுமக்கள் தரப்பிலும் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பெரிய அளவில் குறைந்துள்ளன. 2018-ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 417 ஆக இருந்தது. இது, 2021-ம் ஆண்டில் 229 ஆக குறைந்தது. 2022-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 3 காஷ்மீரி பண்டிட்டுகள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் 14 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×