search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India China clash"

    • இந்தியா-சீனா இடையே எல்லை பகுதிகளில் பிரச்சினை இருந்து வருகிறது.
    • புதிய சாலையானது இந்திய ஆயுதப்படைகளின் திறமைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே எல்லை பகுதிகளில் பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லையையொட்டிய சீன பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சீனாவை எதிர்கொள்வதற்காக கிழக்கு லடாக் பகுதிகளில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்தவும், அப்பகுதியில் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கிழக்கு லடாக்கில் 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது. இந்த சாலை பாங்காங்த்சோவின் தெற்கு பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுசுல் மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக அமைய உள்ளது. இது இந்தோதிபெத் எல்லை பகுதியில் முக்கிய சாலையாகவும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சாலை அமைக்கும் பணி கடந்த 26-ந்தேதி குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் இந்த சாலை அமைப்பு திட்டத்தை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    கிழக்கு லடாக் பகுதியில் இருந்து நாட்டின் 3 முக்கிய சாலைகள் இணைக்கும் வகையில் இந்த சாலை அமைய உள்ளது. இந்த சாலை கிட்டத்தட்ட சிந்து நதியை ஒட்டியே செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. சுசுல் பகுதியானது பாங்காங் ஏரிக்கு தெற்கே அமைந்துள்ளது. அதே நேரத்தில் டெம்சோக் பகுதியானது இந்திய-சீன எல்லையில் ஜீரோ கோடு வழியாக இந்தியாவின் கடைசி பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஆகும். இந்த சாலை அமைப்பதற்கான அனுமதியை 2016-ம் ஆண்டு அப்போதைய ஜம்மு-காஷ்மீர் அரசு வழங்கியது. இந்த திட்டம் யூனியன் பிரதேசத்தில் ஷாங்தாங் குளிர் பாலை வன வன விலங்கு சரணாலயம் வழியாக செல்கிறது.

    2017-ம் ஆண்டு இந்த சாலை அமைக்கும் திட்டம் தேசிய வன விலங்கு வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த வாரியம் சாலை பணிக்கான ஒப்புதலையும் வழங்கியது. இதைத்தொடர்ந்து 2018-ல் எல்லை சாலைகள் அமைப்பு மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கி உள்ளது.

    இந்த புதிய சாலையானது இந்திய ஆயுதப்படைகளின் திறமைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எல்லையில் நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியான தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் கடந்த 9ந்தேதி ஊடுருவ முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    சீனாவின் அத்துமீறல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டன.

    அதேநேரத்தில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். ஆனாலும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியால் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு இரு அவைத் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், வேணுகோபால், ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    சீன எல்லை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இன்றும் ஒத்திவைப்பு நோட்டீசை கொடுத்தது. காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி இதை அளித்தார்.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ராகுல்காந்தியின் பாத யாத்திரைக்கு நிபந்தனை விதிக்கப்பட்ட பிரச்சினையும் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபா நாயகர் ஓம்பிர்லா 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

    பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • தனது கருத்துகளால் பாதுகாப்பு படையினரின் மன உறுதியை ராகுல் காந்தி குலைக்க முயற்சிப்பதாக ரதோர் தெரிவித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கவுரவ் பாட்டியா வலியுறுத்தினார்

    புதுடெல்லி:

    அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவம் அத்துமீறிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    'சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு ஏற்கவில்லை. நமது நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளது. அவர்கள் வீரர்கள் நமது வீரர்களை அடிக்கிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனால் அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது' என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இந்த குற்றச்சாட்டை நிராகரித்த பாஜக செய்தி தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் 'இது நேருவின் இந்தியா அல்ல, மோடியின் இந்தியா' என பதிலடி கொடுத்தார்.

    மேலும் 'சீனாவுடன் நெருக்கம் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கருதுகிறார். இப்போது சீனா என்ன செய்யப் போகிறது? என்று தெரியும் அளவுக்கு அவர் சீனாவுடன் நெருக்கத்தில் உள்ளார். தனது கருத்துகளால் பாதுகாப்பு படையினரின் மன உறுதியை ராகுல் காந்தி குலைக்க முயற்சிக்கிறார்' எனவும் ரதோர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ரிமோட் கண்ட்ரோல் தலைவர் இல்லை என்பது உண்மையாக இருந்தால், காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு ஆதரவான கட்சியாக இருந்தால், இந்தியாவை இழிவுபடுத்தி, இந்திய வீரர்களின் மன உறுதியை குலைக்கும் கருத்துக்களை தெரிவித்த ராகுல் காந்தியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

    பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் மீது நமது ராணுவம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்டதாகக் கூறப்பட்டது. கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமரை "சரண்டர் மோடி" என்று அழைத்தார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பால் அவரது பாவம் கழுவப்படாது, ஆனால் அவர் தனது தவறை உணர்ந்துவிட்டார் என்பதை காட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது, அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.
    • வெளியுறவுத்துறை அமைச்சர், சீனா தொடர்பான தனது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும்

    ஜெய்ப்பூர்:

    இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ராஜஸ்தானின் தௌசாவில் பேசியதாவது:-

    சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு ஏற்கவில்லை. இந்திய அரசாங்கம் நிகழ்வுகளில் செயல்படுகிறது, கொள்கையில் அல்ல. நமது நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளது. அவர்கள் வீரர்கள் நமது வீரர்களை அடிக்கிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனால் அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.

    லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கைகள், அவர் சீனா தொடர்பான தனது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராகுல் காந்தியுடன் மாநில முதல்வர் அசோக் கெலாட் உடனிருந்தார். 

    • அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சியை இந்தியா முறியடித்தது.
    • கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இடாநகர்:

    இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 300-க்கு மேற்பட்ட வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

    கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×