என் மலர்
அருணாசலப் பிரதேசம்
- அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.
- இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.
ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.
அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.
சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஷாங்காய் விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமைமிக்க இந்தியக் குடிமகனான பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கை சீன குடியேற்ற அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் நடத்திய விதம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவரை அவமானப்படுத்துவதும், இன ரீதியாக கேலி செய்வதும் மிகவும் கொடூரமானது.
அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். இது தொடர்பாக எந்தவொரு குற்றச்சாட்டும் அடிப்படையற்றது மற்றும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது. இத்தகைய செயல் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் ஏற்படுத்துவதாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை அவசரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- காயமடைந்த புறாவை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் ஒருவன் கொண்டு வந்துள்ளான்.
- மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புறா உயிரிழந்தது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காயமடைந்த புறாவை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் ஒருவன் கொண்டு வந்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புறா உயிரிழந்தது. இதனை தாங்கி கொள்ள முடியாத அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே கதறி அழுதான்.
புறா உயிரிழந்ததால் மருத்துவமனையில் கதறி அழுத சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வீடியோ நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
- பிரம்மபுத்திரா நதி குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு சீனா கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
- இந்த அணையைக் கொண்டு 60,000 மெகாவாட் திறன் மின் உற்பத்தி செய்யலாம் என்பது திட்டம்.
இடா நகர்:
திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த அணையைக் கொண்டு 60,000 மெகாவாட் திறன் மின் உற்பத்தியைச் செய்யலாம் என்பது திட்டம். புதிய அணை கட்டுவதன் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்கின்றனர்.
இந்நிலையில், சீனா கட்டும் அணை இந்தியாவுக்கு தண்ணீர் வெடிகுண்டு போன்றது என அருணாசல பிரதேச முதல் மந்திரி பெமா காண்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
சீனாவை நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் என யாருக்கும் தெரியாது.
சீனா கட்டும் அணையால் நமது பழங்குடியினர் மற்றும் நமது வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனை மிகவும் தீவிரமானது.
இந்த அணையை தண்ணீர் வெடிகுண்டாக சீனா பயன்படுத்தலாம். இந்த அணை கட்டுமான பணியை சீனா தொடங்கியிருக்கலாம். அல்லது விரைவில் தொடங்கலாம். ஆனால், அவர்கள் இது தொடர்பான எந்த தகவலையும் பகிர மாட்டார்கள்.
அணை கட்டும் பணிகள் முடிந்தால் நமது சியாங் மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும் என தெரிவித்தார்.
பிரம்மபுத்திரா நதி இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது. உலகின் மிக நீண்ட நதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- பருவமழை காலத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்யும்.
- ஆபத்தான முறையில் ஒருவர் ஆற்றை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரல்
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள காட்டாற்றுக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் ஒருவர் கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "பருவமழை காலத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்யும். இந்தியா, சீனா மற்றும் மியான்மர் எல்லையின் முக்கோண சந்திப்புக்கு அருகில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் பாரம்பரிய தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் ஒருவர் கடக்கும் வீடியோ கிடைத்தது. தயவுசெய்து கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு சுமோ வாகனமும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது.
- வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அசாம், சிக்கிம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் பனா-செப்பா சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த மழையின் மத்தியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, பள்ளத்தாக்கில் விழுந்த காரில் இரண்டு குடும்பங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களில் 32 வயதான சஞ்சு, அவரது மனைவி தாசும், அவர்களது இரண்டு குழந்தைகள், கச்சுங் (5) மற்றும் நிச்சா (2), ஒரு கர்ப்பிணித் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்.
பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு சுமோ வாகனமும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சற்று தள்ளி இருந்ததால் நல்வாய்ப்பாக அந்த அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
- இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
- இறுதிப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனாக, பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய மேகாலயா 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 468 ரன்களைக் குவித்துள்ளது.
ஷில்லாங்:
இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு போட்டிகளில் ஒன்று கூச்பெஹார் டிராபி. இது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 4 நாள் கொண்ட போட்டி ஆகும்.
இதில் அருணாசல பிரதேசத்தின் ஷில்லாங் நகரில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் டெல்லி, மேகாலயா அணிகள் மோதின.
முதலில் ஆடிய மேகாலயா அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, டெல்லி அணி முதல் இன்னிங்சை ஆடியது. அர்னவ் புக்கா, ஆர்யவீர் ஜோடி அதிரடியாக ஆடியது. சதமடித்து அசத்திய புக்கா 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் சிறப்பாக ஆடிய ஆர்யவீர் இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு தன்யா நக்ரா நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் குவித்துள்ளது. ஆர்யவீர் 200 ரன்னுடனும், தன்யா நக்ரா 98 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஆர்யவீர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்துள்ளது.
- கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
கிழக்கு லடாக், அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் கால்வான் பகுதியில் 2020-ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா-சீனா இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவ வீரர்களை குவித்து வந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.
இருநாட்டுக்கும் எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படாததால் எல்.ஏ.சி. எனப் படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு நாட்டு ராணுவ வீரர் களும் அவரவர் பகுதியில் ரோந்து சென்று வந்தனர்.
இருநாட்டினரும் தொடர்ந்து ராணுவ வீரர்களை நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் குவித்ததால் அங்கு எப்போது வேண்டு மானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் இருந்து வந்தது.
இதற்கு தீர்வு காண 4 ஆண்டுகளாக இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதில் உடன்பாடு ஏதுவும் ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் தற்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர்.
அப்போது எல்லையில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவிற்கு, இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அதன் படி இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர்.
சீன ராணுவமும் கிழக்கு லடாக் பகுதியில் தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தது. இந்திய ராணுவமும் சில படைகளை திரும்பப் பெற்றது. எல்லையில் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்து இயல்பு நிலை சூழல் உருவாகியுள்ளது.
அந்த பகுதியில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கி கொள்ளப்பட்டாலும் சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்தியா-சீனா இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
- இந்தியா பெயர் சூட்டுவது சட்டவிரோதம்.
புதுடெல்லி:
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன வீரர்கள் அத்துமீறலை தொடர்ந்து இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பதட்டம் நிலவியது. பின்னர் இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து எல்லையில் சில பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டன. இதற்கிடையே இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் எல்லை தொடர்பாகவும், இந்தியா-சீனா இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இந்தநிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை செல்லாத மலைச்சிகரம் ஒன்றுக்கு தேசிய மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் (நிமஸ்) ஒரு குழுவினர் சாகசப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் வெற்றிகரமாக 20,942 அடி உயரத்தில் உள்ள அதன் உச்சியை அடைந்தனர். இதையடுத்து அந்த சிகரத்துக்கு சாங்யாங் கியாட்சோ என ஆறாவது தலாய் லாமா பெயரை சூட்டினர். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில்,
ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவுக்கு உரிய பகுதியாகும். அப்பகுதியில் உள்ள இடத்துக்கு இந்தியா பெயர் சூட்டுவது சட்டவிரோதம். இதுவே சீனாவின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்.
- எல்லை தொடர்பாக இந்தியா-சீனா இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
- இந்திய குழுவினரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்றது சீனா.
கவுகாத்தி:
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன வீரர்கள் அத்துமீறலை தொடர்ந்து இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பதட்டம் நிலவியது. பின்னர் இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து எல்லையில் சில பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டன.
இதற்கிடையே இந்தியா வில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் எல்லை தொடர்பாகவும், இந்தியா-சீனா இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திராங்கை தளமாக கொண்ட தேசிய மலை ஏறுதல் மற்றும் சாகச விளையாட்டு கழகத்தின் 15 பேர் கொண்ட குழு கடந்த சனிக்கிழமை அருணாச்சல பிரசேதத்தின் தபாங் பகுதியில் இதுவரை யாரும் ஏறாத சிகரத்தில் ஏறினர்.
மேலும் அந்த சிகரத்திற்கு 6-வது தலாய்லாமாவான சாங்யாங் கியாட்சோவின் நினைவாக 'சாங்யாங் கியாட்சோ சிகரம்' என்று பெயரிட்டது.
6-வது தலாய்லாமாவின் பெயரை தேர்ந்தெடுப்பது அவரது காலத்தால் அழியாத ஞானம் மற்றும் மோன்பா சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு ஒரு மரியாதை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளி யுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின்ஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாங்யாங் பகுதி சீன பகுதியாகும். இந்திய குழுவினரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்றார்.
- 6 முதல் 14 வயதுடைய 15 மாணவிகளை யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்
அருணாச்சலப்பிரதேசத்தில் 21 பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டன் யும்கென் பக்ராவிற்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
விடுதி வார்டனுக்கு உதவி செய்த முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் இந்தி ஆசிரியர் மார்போம் நகோம்டிர் ஆகியோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளியில் படிக்கும் தனது 12 வயதான இரட்டை மகள்களை வார்டன் யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை ஒருவர் புகார் அளித்தார்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. அப்போது தான் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு வார்டன் போதைப்பொருட்கள் கொடுத்துள்ளார் என்றும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார். வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
விடுதி வார்டனின் அத்துமீறல் குறித்து பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதால் மாணவர்களை அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
- மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
- சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இடாநகர்:
அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டசபையில் கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார்.
அப்போது அவர், மாநிலத்தில் செயல்படாத அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதைப்போன்ற மேலும் சில பள்ளிகளை மூட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.






