search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAFF"

    • இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.
    • குர்பிரீத் சிங் சந்து கோல் அடித்ததை அடுத்து இந்தியாவுக்கு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

    பெங்களூருவில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

    சாம்பியன் பட்டத்ததை தக்க வைக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதேபோல் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் குவைத் வீரர்களும் பதிலடி கொடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

    சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்ட குவைத் அணி லீக் சுற்றில் இந்தியாவுடன் 'டிரா' செய்தது. நேபாளம், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. அரையிறுதியில் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியிலும் குவைத் அணியின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்தது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய நிலையில், ஆட்ட நேர இறுதியில் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் சுனில் சேத்ரி கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.

    பின்னர் அடித்த கோலை குவைத் தவறவிட, சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்து 2-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது. இருப்பினும், குவைத் தனது இரண்டாவது வாய்ப்பில் கோல் அடித்ததால் 2-1 ஆனது.

    இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.

    இதையடுத்து, உதாந்தா சிங் தனது கோலை தவறவிட்டார். ஆனால் சுபாஷிஷ் போஸ் கோல் அடித்ததால் ஸ்கோர் பின்னர் 4-4 என்று கோல் கணக்கில் சமமானது.

    பின்னர், குர்பிரீத் சிங் சந்து கோல் அடித்ததை அடுத்து இந்தியாவுக்கு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

    இதன்மூலம், குவைத்தை வீழ்த்தி 9வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.

    • நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.
    • இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என இந்தியா வென்றது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.

    போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

    கூடுதல் நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா தனது முதல் 4 வாய்ப்புகளை கோலாக்கியது. ஆனால் லெபனான் அணி 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. இதன்மூலம் இந்திய அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வரும் 4 ம் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - குவைத் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது. இதை கொண்டாட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது #INDvMDV #SAFF
    7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்றது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது. ஒரு அரையிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி மாலத்தீவும், மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    நேற்றிரவு இந்தியா - மாலத்தீவு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மாலத்தீவு வீரர் மஹுதீ முதல் கோலை அடித்தார். அதன்பின் இரு அணிகளும் முதல் பாதி நேரம் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் 45 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 0-1 என பின் தங்கியிருந்தது.



    2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய வீரர்களால் கோல் அடிக்கவில்லை. மாறாக 66-வது நிமிடத்தில் மாலத்தீவு அணியின் ஃபசிர் கோல் அடித்தார். இதனால் மாலத்தீவு 2-0 என முன்னிலை வகித்தது. இந்திய வீரர்கள் எவ்வளவு போராடியும் 90 நிமிடத்திற்குள் கோல் அடிக்க இயலவில்லை.



    இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் பாஸ்சி ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல் அடிக்க முடியாததால் மாலத்தீவு 2-1 என வெற்றி பெற்று முதன்முறையாக தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.

    இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை (18.09.2018) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. #INDvPAK #SAFF
    7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது.

    ஒரு அரையிறுதியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் மோதின. இதில் மாலத்தீவு 3-0 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் 48-வது மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். சுமீத் பாஸ்சி 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 88-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஹசன் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. இந்தியா - மாலத்தீவு இடையிலான இறுதிப் போட்டி செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது.
    ×