search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    தெற்காசிய கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட்டில் குவைத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
    X

    தெற்காசிய கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட்டில் குவைத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

    • இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.
    • குர்பிரீத் சிங் சந்து கோல் அடித்ததை அடுத்து இந்தியாவுக்கு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

    பெங்களூருவில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

    சாம்பியன் பட்டத்ததை தக்க வைக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதேபோல் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் குவைத் வீரர்களும் பதிலடி கொடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

    சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்ட குவைத் அணி லீக் சுற்றில் இந்தியாவுடன் 'டிரா' செய்தது. நேபாளம், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. அரையிறுதியில் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியிலும் குவைத் அணியின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்தது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய நிலையில், ஆட்ட நேர இறுதியில் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் சுனில் சேத்ரி கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.

    பின்னர் அடித்த கோலை குவைத் தவறவிட, சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்து 2-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது. இருப்பினும், குவைத் தனது இரண்டாவது வாய்ப்பில் கோல் அடித்ததால் 2-1 ஆனது.

    இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.

    இதையடுத்து, உதாந்தா சிங் தனது கோலை தவறவிட்டார். ஆனால் சுபாஷிஷ் போஸ் கோல் அடித்ததால் ஸ்கோர் பின்னர் 4-4 என்று கோல் கணக்கில் சமமானது.

    பின்னர், குர்பிரீத் சிங் சந்து கோல் அடித்ததை அடுத்து இந்தியாவுக்கு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

    இதன்மூலம், குவைத்தை வீழ்த்தி 9வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.

    Next Story
    ×