என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Foot Ball Team"

    • மூன்று பேரில் இருந்து இறுதியாக கலித் ஜமில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • முன்னாள் பயிற்சியாளரும், ஸ்லோவாகியா பயிற்சியாளரும் போட்டியில் இருந்தனர்.

    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான கலித் ஜமில், ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐ-லீக் 2017 சீசனில் ஐஸ்வால் கால்பந்து கிளப் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி (பயிற்சியாளராக) சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    48 வயதாகும் கலித் ஜமில், தற்போது ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அனைத்து இந்திய கால்பந்து பெடரேசனின் நிர்வாகக் குழு கலித் ஜமிலை தேர்வு செய்துள்ளது.

    இறுதிப் பட்டியலில் மூன்று பேரை தேர்வு செய்து வைத்திருந்தது. அதில் இரண்டு போட்டியாளர்கள் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஸ்டீப்ன் கான்ஸ்டைன் மற்றும் ஸ்லோவாகியா தேசிய அணியின் ஸ்டீபன் தர்கோவிக் ஆகியோர் ஆவார்கள்.

    கலித் ஜமித் ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இந்தியா ஆகஸ்ட் 29ஆவது தேதியில் இருந்து மத்திய ஆசிய கா்பந்து அசோசியேசன் தேசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது.

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது. இதை கொண்டாட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது #INDvMDV #SAFF
    7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்றது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது. ஒரு அரையிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி மாலத்தீவும், மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    நேற்றிரவு இந்தியா - மாலத்தீவு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மாலத்தீவு வீரர் மஹுதீ முதல் கோலை அடித்தார். அதன்பின் இரு அணிகளும் முதல் பாதி நேரம் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் 45 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 0-1 என பின் தங்கியிருந்தது.



    2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய வீரர்களால் கோல் அடிக்கவில்லை. மாறாக 66-வது நிமிடத்தில் மாலத்தீவு அணியின் ஃபசிர் கோல் அடித்தார். இதனால் மாலத்தீவு 2-0 என முன்னிலை வகித்தது. இந்திய வீரர்கள் எவ்வளவு போராடியும் 90 நிமிடத்திற்குள் கோல் அடிக்க இயலவில்லை.



    இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் பாஸ்சி ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல் அடிக்க முடியாததால் மாலத்தீவு 2-1 என வெற்றி பெற்று முதன்முறையாக தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.

    இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை (18.09.2018) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. #INDvPAK #SAFF
    7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது.

    ஒரு அரையிறுதியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் மோதின. இதில் மாலத்தீவு 3-0 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் 48-வது மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். சுமீத் பாஸ்சி 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 88-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஹசன் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. இந்தியா - மாலத்தீவு இடையிலான இறுதிப் போட்டி செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது.
    ×