search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pigeon"

    • இந்திய கலாச்சாரம் மற்றும் இசை மீது ஜெர்மனியின் காஸ்மியின் ஆர்வத்தை நான் முழுமனதுடன் பாராட்டுகிறேன்.
    • நீங்களும் உங்கள் நேரத்தை ஒதுக்கி, தூய்மை தொடர்பான இந்த பிரசாரத்தில் உதவுங்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி இன்று மான் கி பாத் 105-வது நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சென்னை ஆட்டோ டிரைவர் ராஜேந்திரபிரசாத் புறாக்களை பராமரிக்க, பாதுகாக்க ஆற்றி வரும் பணிகளை பாராட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்திய கலாசாரமும், இந்திய இசையும் தற்போது உலகமயமாகிவிட்டது.

    அவர்கள் மீது உலகம் முழுவதும் உள்ள மக்களின் பற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 21 வயதான காஸ்மி இன்ஸ்டாகிராமில் இன்று மிகவும் பிரபலமானவர். ஜெர்மனியை சேர்ந்த காஸ்மி இதுவரை இந்தியா வந்ததில்லை.

    ஆனால் இந்தியாவை பார்த்திராத இந்திய இசையின் ரசிகை, இந்திய இசையில் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் இசை மீது ஜெர்மனியின் காஸ்மியின் ஆர்வத்தை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். அவரது முயற்சிகள் ஒவ்வொரு இந்தியரையும் மூழ்கடிக்கப் போகிறது.

    ஜீவேஷு கருணா சாபி, மைத்ரி தேஷு விதியாதம் என்றால், உயிரினங்கள் மீது கருணை காட்டுங்கள், அவர்களை உங்கள் நண்பர்களாக்குங்கள். எல்லா வழிகளிலும் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் சிங்கம், புலிகள், சிறுத்தைகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    உயிர்களிடம் கருணை காட்டுங்கள், அவற்றை உங்கள் நண்பர்களாக ஆக்குங்கள். தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் வாகனங்களில் பெரும்பாலானவை விலங்குகள் மற்றும் உயிரினங்கள். ராஜஸ்தானில் சுக்தேவ்பாம்பு களை பராமரிப்பதிலும், சென்னையில் ஆட்டோ டிரைவர் ராஜேந்திரபிரசாத் புறாக்களை பாதுகாப்பதிலும் சிறந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களது பணிகளை பாராட்டுகிறேன். ஐதராபாத்தை சேர்ந்த 11 வயது அக்சரா குழந்தைகளுக்கான 7 நூலகங்களை நிர்வகிக்கிறார். குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர் பங்களிக்கும் விதம் ஊக்கமளிக்கிறது.

    இன்று 'மான் கி பாத்' மூலம் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். அக்டோபர் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூய்மை குறித்த பெரிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீங்களும் உங்கள் நேரத்தை ஒதுக்கி, தூய்மை தொடர்பான இந்த பிரசாரத்தில் உதவுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புறாக்கள் நன்கு பயிற்சி கொடுத்து புறா பந்தயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    • எந்த புறாக்கள் கீழே இறங்காமல் அதிக நேரம் பறக்கிறது என்ற நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் அறிவிக்கப்படும்.

    திருப்பூர்:

    புறாக்கள் நெடு தூரம் வரை பறக்கும் திறனுடையது என்பதால், அவைகள் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்த சூழலில் அதன் நீட்சியாக தற்போது இவ்வகை புறாக்கள் நன்கு பயிற்சி கொடுத்து புறா பந்தயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பந்தயத்திற்காகப் பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவைகள் தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் இந்த புறா பந்தயங்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் புறா பந்தயமானது நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட புறா கலை வளர்ப்பு சங்கம் சார்பில் புறா பந்தயத்தை நடத்தினர். இதில் 9 புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டது. திருப்பூர் ரயில் நிலையம், தென்னம்பாளையம் , பெருச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் புறா பந்தயமானது நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட புறாக்கள் தங்கள் இருப்பிட பகுதிக்குச் சென்று கீழே இறங்காமல் தொடர்ந்து பறந்து கொண்டிருக்க வேண்டும்.

    எந்த புறாக்கள் கீழே இறங்காமல் அதிக நேரம் பறக்கிறது என்ற நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் அறிவிக்கப்படும். இந்த போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு சான்றிதழ்களும் புறா உரிமையாளர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது.

    • பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.
    • பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சதீஷ்குமார் புகார் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்தப் புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து தினமும் எச்சம் கழிக்கின்றன.

    இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

    பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.

    புறாக்கள் எச்சம் கழிப்பதை சுத்தம் செய்யும் போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது.

    இதனால் நோய் தொற்று ஏற்படும் என பயந்து என் மனைவி குழந்தைகளுடன் என்னைப் பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
    • உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    புறா வளர்ப்பதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் அதிகம் உண்டு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். புறா எச்சம் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கொரோனா பாதிப்பு அவரது நுரையீரலை மேலும் பலவீனப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததன் பின்னணியில் புறாக்களின் எச்சம் காரணமாக இருந்தது அந்நாட்டு மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புறாக்களுக்கு உணவளிப்பதையும், அதன் எச்சத்தை சுத்தம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சில வருடங்களில் அவர் மூச்சு விட முடியாமல் தவித்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் பிழைத்து இருக்கிறார். மருத்துவ செலவுக்காக அவர் ரூ.35 லட்சம் செலவழித்து உள்ளார்.

    புறாக்களின் எச்சங்களை சுவாசிப்பது மிகப்பெரிய தீங்கை விளைவித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    புறாக்களின் இறக்கையில் இருக்கும் செல் பூச்சிகள், எச்சங்களில் இருந்து வெளி வரும் பூஞ்சைகள் ஆகியவற்றை சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்கிறது. இது நாளடைவில் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கிறது. நுரையீரலில் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டறிவது கடினம் என்பதால் தொற்றுகள் நுரையீரல் திசுக்களை செயலற்றதாக்கி விடுகிறது. இது போன்ற பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

    புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எனவே புறாக்களை கையாளும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    புறாக்களுக்கு உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தில் கை வைக்கவோ, உணவு சாப்பிடவோ கூடாது. புறாக்களின் எச்சங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×