என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pema Khandu"

    • அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.
    • இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

    ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

    அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

    சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஷாங்காய் விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமைமிக்க இந்தியக் குடிமகனான பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கை சீன குடியேற்ற அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் நடத்திய விதம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவரை அவமானப்படுத்துவதும், இன ரீதியாக கேலி செய்வதும் மிகவும் கொடூரமானது.

    அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். இது தொடர்பாக எந்தவொரு குற்றச்சாட்டும் அடிப்படையற்றது மற்றும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது. இத்தகைய செயல் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் ஏற்படுத்துவதாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை அவசரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது.
    • 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

    இடா நகர்:

    அருணாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பீமா காண்டு உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3-வது முறையாக பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி ஆகிறார்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை இன்று சந்தித்தனர். அப்போது அவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது.

    • 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
    • பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

    அருணாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பீமா காண்டு உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

    நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3-வது முறையாக பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி ஆகிறார்.

    இதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில் பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி 3-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அருணாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அம்மாநிலத்தில் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் இன்று பதவியேற்றார்.
    இட்டாநகர்:

    சீனாவை ஒட்டியுள்ள இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் அம்மாநிலத்தின் சட்டசபைக்கும் சேர்த்து கடந்த மாதம் 11-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 41 இடங்களை கைப்பற்றினர்.



    இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் இன்று பதவியேற்றார். அவருக்கும் 11 மந்திரிகளுக்கும் அருணாச்சலப்பிரதேசம் கவர்னர் பி.டி.மிஷ்ரா பதவிப் பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    அருணாசல பிரதேச மாநிலத்தில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார். #Arunachal #PemaKhandu
    இட்டாநகர்:

    அருணாசல பிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், 60 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்துக்கும் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் தற்போதைய முதல்- மந்திரி பெமா காண்டு, முக்தோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார்.

    மொத்த வேட்பாளர்களில் 131 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களில் 67 பேருக்கு ரூ.5 கோடிக்கு அதிகமான சொத்துகளும், 44 பேருக்கு ரூ.2 கோடிக்கு மேல் சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Arunachal #PemaKhandu 
    அருணாசல பிரதேசத்தில் குடியுரிமை சான்று வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த வன்முறைப் போராட்டத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டதாக முதல்வர் அறிவித்துள்ளார். #ArunachalPradesh #ResidencyCertificate
    இடாநகர்:

    அருணாசல பிரதேசத்தின் நம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 6 பிரிவினருக்கு நிரந்தர குடியுரிமை (பிஆர்சி) சான்று வழங்க, உயர்மட்டக்குழு ஒன்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் இடாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போராட்டமும், வன்முறையும் பரவி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 60 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக அரசு உறுதி அளித்தபோதும் போராட்டம் நீடித்தது.

    நேற்று நித்தி விகாரில் உள்ள துணை முதல்-மந்திரி சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. முதல்வரின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். துப்பாக்கி சூடும்நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, இன்று அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பீமா காண்டு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய நிரந்தர குடியுரிமை சான்று விவகாரம் முடிந்துவிட்டதாகவும் கூறினார். போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிஆர்சி விவகாரத்தை அரசு எடுக்காது என தலைமைச் செயலாளர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

    காங்கிரசின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடந்திருக்கலாம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #ArunachalPradesh #ResidencyCertificate

    ×