search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீன அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும்: பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி
    X

    சீன அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும்: பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி

    எல்லையில் நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியான தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் கடந்த 9ந்தேதி ஊடுருவ முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    சீனாவின் அத்துமீறல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டன.

    அதேநேரத்தில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். ஆனாலும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியால் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு இரு அவைத் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், வேணுகோபால், ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    சீன எல்லை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இன்றும் ஒத்திவைப்பு நோட்டீசை கொடுத்தது. காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி இதை அளித்தார்.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ராகுல்காந்தியின் பாத யாத்திரைக்கு நிபந்தனை விதிக்கப்பட்ட பிரச்சினையும் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபா நாயகர் ஓம்பிர்லா 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

    பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    Next Story
    ×