என் மலர்

    நீங்கள் தேடியது "Security Breach"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி கே.ஆர்.புரம்- ஒயிட் ஃபீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
    • விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

    பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்தார். தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார்.

    அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    பிறகு பெங்களூரு வந்த பிரதமர் மோடி கே.ஆர்.புரம்- ஒயிட் ஃபீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் கர்நாடக மாநிலம் தாவனகரே நகரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

    பிரதமர் நரேந்திர மோடி சாலை பேரணியில் கலந்துக் கொண்டார். அப்போது மோடியின் வாகன அணி வகுப்பை நோக்கி போலீஸ் பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் ஓடி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார் தடுத்து நிறுத்தினார். அவருக்குப் பின்னால் சிறப்புப் பாதுகாப்புக் குழு கமாண்டோவும் ஓடி தடுத்து நிறுத்தினர்.

    இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார் கூறுகையில், "பாதுகாப்பு மீறல் எதுவும் இல்லை. அந்த இளைஞரை சிறப்புப் பாதுகாப்புக் குழு கமாண்டோவால் தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த நபர் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பசவராஜ் கடகி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பிரதமர் மோடியைப் பார்ப்பதற்காக பேருந்தில் தாவங்கேருக்கு வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது" என்றார்.

    கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது இதேபோன்று சம்பவம்  நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி காரின் பக்கவாட்டில் நின்றபடி சாலையோரம் நின்றவர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு வந்தார்.
    • பாதுகாப்புப் படையினர் சிறுவனிடம் இருந்த மாலையை வாங்கி பிரதமரிடம் அளித்தனர்

    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை காரில் பேரணியாக வந்தார். வழிநெடுக்க அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில், ஒரு சிறுவன் திடீரென பிரதமர் மோடிக்கு அருகே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி திடீரென சாலையில் குதித்து பிரதமரை நெருங்கிய அந்த சிறுவனுக்கு சுமார் 15 வயது இருக்கும்.

    பிரதமர் மோடி காரின் பக்கவாட்டில் நின்றபடி சாலையோரம் நின்று வரவேற்பு அளித்தவர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த சிறுவன் காவலர்களையும் மீறி கையில் மாலையுடன் பிரதமர் மோடிக்கு அருகே வந்துவிட்டான். பலத்த பாதுகாப்பையும் மீறி காரின் அருகே சிறுவன் வந்ததும், அங்கிருந்த பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு கடைசி நிமிடத்தில் சிறுவனை தடுத்து நிறுத்தி சாலையோரம் கொண்டுபோய் விட்டனர்.

    அதற்குள் பிரதமர் மோடி, சிறுவனின் மாலையை பெற்றுக்கொண்டார். பாதுகாப்புப் படையினர் சிறுவனிடம் இருந்த மாலையை வாங்கி பிரதமரிடம் அளிக்க, அதை வாங்கி அவர் காருக்குள்ளே வைத்தார்.

    பிரதமர் எந்த இடத்திற்குச் சென்றாலும் எப்போதும் அவருக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அதில் கடைசி அடுக்கு பாதுகாப்பு மாநில காவல்துறையின் பொறுப்பு. மற்றவை மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமாக சிறுவன் எப்படி வந்தான் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்கள் கடந்த மாதம் திருடப்பட்ட நிலையில், தற்சமயம் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. #Facebook #databreach



    ‘ஃபேஸ்புக்’ சமூக வலை தளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

    அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

    அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டுள்ளன. 

    இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.

    மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. #Facebook #databreach
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நிதிஷ்குமார் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். #NitishKumar
    பாட்னா:

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். இதனால் அவருக்கு எப்போதும் பலத்து பாதுகாப்பு வசதி அளிக்கப்பட்டு உள்ளது. அவரது அலுவலக வீடு பாட்னாவில் உள்ள எண்.1 அனெய் மார்க் பகுதியில் உள்ளது. அவரது வீட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும். தற்போது கட்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அவர் டெல்லி சென்று உள்ளார்.

    இந்த நிலையில் பீகார் மாநில சிறப்பு போலீஸ் அதிகாரி முதல்-மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது முதல்-மந்திரி வீட்டில் இருந்த போலீசாரின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். #NitishKumar #tamilnews
    ×