search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security Breach"

    • டெல்லி காவல்துறை இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துகிறது
    • எதிர்ப்பு குரல்களை நசுக்கி மசோதாக்களை நிறைவேற்ற முயல்வதாக கார்கே குற்றச்சாட்டு

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடர் இம்மாதம் 22 வரை நடக்க உள்ளது.

    டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் மக்களவை அலுவல்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து 2 பேர் அவையில் குதித்தனர். ஒருவர் கோஷமிட்டு கொண்டே உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை வீசினார். இதில் மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பி பல எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த நபர் மேசைகளின் மீது தாவி குதித்து கொண்டே சபாநாயகர் இருக்கை அருகே செல்ல முயன்றார். மற்றொரு நபர் கோஷமிட்டு கொண்டே அங்கும் இங்கும் ஓடினார். சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்து நின்ற போதும் ஒரு சில எம்.பி.க்கள் துணிந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து, அங்கு விரைந்து வந்த சபைக்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் நடைபெற்ற அதே நேரம், அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இதே போன்று கோஷமிட்டு, வர்ண புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்துள்ள டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 47 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

    இந்நிலையில் ஆளும் பா.ஜ.க.வை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:

    பாதுகாப்பு குறைபாடு காரணமாக மர்ம நபர்கள் பாராளுமன்றத்தையே தாக்க துணிந்தனர். ஆனால், மோடி பாராளுமன்றத்தையும் ஜனநாயக மாண்புகளையும் தாக்குகிறார். 47 பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் அனைத்து ஜனநாயக மாண்புகளையும் மோடி குப்பை தொட்டிக்குள் போட்டு விட்டார்.

    எங்களுக்கு 2 கோரிக்கைகள்தான்: பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது மன்னிக்க முடியாதது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும். மற்றொன்று, இச்சம்பவம் குறித்த ஆழமான விவாதம் நடைபெற்றே ஆக வேண்டும்.

    அச்சு ஊடகத்தில் பிரதமர் பேட்டியளிக்கிறார்; தொலைக்காட்சி சேனல்களில் உள்துறை அமைச்சர் பேட்டி அளிக்கிறார். ஆனால், இந்திய மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான பாராளுமன்றத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து இருவரும் தவறி, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.

    இதன் மூலம் எதிர்கட்சிகள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்கி, எதிர்ப்பு குரல்களை நசுக்கி, அவர்கள் விரும்பும் வகையில் அவர்கள் கொண்டு வர துடிக்கும் சட்டங்களை எந்த வித விவாதங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல் எளிதாக கொண்டு வர முடியும்.

    இவ்வாறு கார்கே குற்றம் சாட்டினார்.

    • பாராளுமன்ற அத்துமீறல் விஷயம் கவலைக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி கூட்டத்தொடர் நடந்தபோது மக்களவை மற்றும் பாராளுமன்ற வளாக வாயிலில் சிலர் வண்ண புகை குண்டுகளை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் மக்களவையில் புகுந்த நபரை எம்.பி.க்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை அடித்து, தாக்கவும் செய்தனர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து வைரலாகியது.

    இந்நிலையில், பாராளுமன்ற அத்துமீறல் குறித்து செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:

    மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் ஒரு தீவிரமான விவகாரம்.

    பாதுகாப்பு மீறல் ஒரு துரதிர்ஷ்டவசமானது. கவலைக்குரிய விஷயம் ஆகும். இது பற்றி விவாதிக்க தேவையில்லை.

    இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரத்தில் புலனாய்வு அமைப்புகள் முழு விசாரணை நடத்தி வருகின்றன.

    இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அவர்கள் திட்டம் என்ன? வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்து தீர்வு காண வேண்டும் என்பது குறித்து நாம் முடிவெடுக்க வேண்டும்.

    தாக்குதலுக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடிப்பார்கள் என தெரிவித்தார்.

    • 2001 தாக்குதலின் 22-வது நினைவு தினத்தன்று மீண்டும் அத்துமீறல் நடந்தது
    • சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ளே தாக்குதல் நடந்ததில்லை என்றார் திவாரி

    கடந்த டிசம்பர் 13 அன்று புதிய பாராளுமன்ற கட்டிட மக்களவையில் அலுவல் நேரத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவையின் மைய பகுதிக்கு 2 பேர் குதித்தனர். ஒருவர் எம்.பிக்களை தாண்டி மேசைகள் மீது குதித்தவாறு சபாநாயகர் அருகே செல்ல முயன்றார். தன் உடலில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை குப்பிகளை அங்கு வீசினார். அதிலிருந்து கிளம்பிய மஞ்சள் நிற புகை சில எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. இன்னொரு நபர் கோஷமிட்டவாறே அவையில் அங்கும் இங்கும் ஓடினார்.

    இந்த எதிர்பாராத சம்பவத்தால் அவையிலிருந்த சில எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது நின்றிருந்தாலும், சில எம்.பி.க்கள் துணிச்சலுடன் அந்த இருவரையும் நெருங்கி பிடித்து விரைந்து வந்த பாதுகாப்பு வீரர்களிடம் ஒப்படைத்தனர். அதே நேரத்தில் அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கோஷமிட்டு கொண்டே வர்ண குப்பிகளை வீசினர். அதிலிருந்தும் வர்ண புகை வெளிக்கிளம்பியது


    அந்த 4 பேரையும் கைது செய்துள்ள புது டெல்லி காவல்துறை இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்தும், இதில் ஈடுபட்டவர்களின் நோக்கம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இச்சம்பவம் நடந்து சில தினங்கள் ஆன நிலையில் தற்போது பிரதமர் மோடி, "எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட கூடாத இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; கவலைக்குரியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன" என தெரிவித்தார்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சி துணை தலைவரான பிரமோத் திவாரி இது குறித்து கருத்து தெரிவித்திருப்பதாவது:

    இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை பாராளுமன்றத்திற்கு உள்ளே மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ எந்த வித பாதுகாப்பு குறைபாடோ அத்துமீறலோ ஏற்பட்டதில்லை என்பதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது நடந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் பிரதமர் வெளியிலிருந்து அறிக்கை விடுகிறார்; ஆனால் அவைக்கு வந்து பேச மறுக்கிறார். அவர் ஏன் அவைக்கு வந்து உறுப்பினர்களிடையே தனது விளக்கத்தை முன்வைக்க மறுக்கிறார்?

    இவ்வாறு திவாரி கூறினார்.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்றத்தின் மக்களவையில் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியது.
    • இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுமீது குற்றம்சாட்டி வருகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் திடீரென 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் அங்கு வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர், இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுமீது குற்றம்சாட்டி வருகிறது.

    பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசியதில் தொடர்புடைய 6வது நபரான மகேஷ் குமாவத் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    • இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் திடீரென 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் அங்கு வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர், இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுமீது குற்றம்சாட்டி வருகிறது.

    பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது ஏன் நடந்தது? நாட்டின் முக்கிய பிரச்சினை வேலையின்மை. பிரதமர் மோடியின் கொள்கைகளால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போனது. வேலையின்மை மற்றும் பணவீக்கம் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

    • பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.
    • பார்வையாளர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு பரிசோதனை நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் உள்ளே குதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாராளுமன்றத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

    அந்த வகையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அதிநவீன உடல் ஸ்கேனிங் இயந்திரத்தை அமைக்கவும், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதிக்க முடியாத வகையில் கண்ணாடி சுவர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன் பார்வையாளர்கள் உட்படுத்திகொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பார்ப்போம்:


     

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட விரும்பும் எந்தவொரு நபரும் மூன்றடுக்கு பாதுகாப்பு பரிசோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன், பார்வையாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

    ராஜ்யசபா செயலகத்தால் வெளியிடப்பட்ட பார்லிமென்ட் பாதுகாப்பு சேவையின் அலுவலக நடைமுறையின் பிரிவு கையேடு (SMOP) படி அவர்களின் உடைமைகளை சரிபார்க்க வேண்டும். தொலைபேசிகள், பைகள், பேனாக்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாணயங்கள் கூட அனுமதிக்கப்படாது. மேலும் அவர்கள் தங்கள் ஆதார் அட்டையையும் காண்பிக்க வேண்டும்.

    இரும்புக் கதவுகளிலிருந்து பாராளுமன்றப் பகுதிக்குள் நுழைவதில் இருந்து செயல்முறை தொடங்குகிறது. அதன்படி பார்வையாளர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் பொருளை வைத்துள்ளார்களா என்பதை கண்டறிய உலோகக் கண்டறிவி மூலம் சோதிக்கப்படுவர்.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு சோதனையின் இரண்டாம் நிலையில், பார்வையாளர்கள் அனைவரும் அனுமதி பெற்றதன் அடிப்படையில்தான் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுள்ளனர் என்பதை ஊழியர்கள் உறுதி செய்கிறார்கள்.

    பார்வையாளர்களின் அனைத்து பைகள்/சுருக்கப் பெட்டிகளும் பேக்கேஜ் ஸ்கேனர்கள் மூலம் திரையிடப்படும். இதனை அங்கிருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் உறுதி செய்வார்கள். இந்த செயல்முறைக்குப் பிறகுதான், பார்வையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

     


    பாராளுமன்றத்தில் அனுமதி பெறுவதற்கான நடைமுறை:

    - பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச்சீட்டுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    - ஒரு பாராளுமன்ற உறுப்பினர் காகித விண்ணப்பத்தைப் பயன்படுத்தி அல்லது டிஜிட்டல் சன்சத் இணையதளம் மூலம் அனுமதிச்சீட்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு அனுமதிச்சீட்டுக்கும் ஒரு தனிப்பட்ட ஐடி உள்ளது.

    - பார்வையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கையொப்பமிடப்பட்ட தங்கள் நுழைவை பரிந்துரைக்கும் கடிதங்களைக் காட்ட வேண்டும்.

    - பார்வையாளரின் அனுமதிச் சீட்டுகள் பொது கேலரிக்குள் நுழைந்தவுடன் பாதுகாப்பு ஊழியர்களால் மீண்டும் சரிபார்க்கப்படும். அலுவல்பூர்வ பாதுகாப்பு நடைமுறைக் கையேட்டின்படி, பார்வையாளர்களை பாதுகாப்புப் பணியாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.

    பார்வையாளர்கள் அனுமதியின்றி பாராளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

    • 2001 தாக்குதலின் 22-வது நினைவு தினமான நேற்று மீண்டும் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்
    • பல கட்சி அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

    2001 டிசம்பர் 13 அன்று பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பாராளுமன்றத்தில், 11:40 மணியளவில் 5 பயங்கரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கினர். அவர்கள் தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் 6 டெல்லி காவல்துறையை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். இறுதியில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    2014ல் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சியில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற சில மாதங்களில் பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

    கடந்த மே 28 அன்று, இப்புதிய கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

    இக்கட்டிடத்தில் இம்மாதம் 4 அன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

    2001 தாக்குதல் நடந்து 22 வருடங்களான நிலையில், நேற்று அதன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அதற்கு பிறகு மக்களவையில் வழக்கமான அலுவல் நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திடீரென குதித்த இருவர் சர்வாதிகார ஆட்சிய ஒழிக என்று கோஷம் எழுப்பிக் கொண்டே சபாநாயகர் அருகே செல்ல முயன்றனர். அவர்கள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த கேன் போன்ற உருளையை வீசியதில், மஞ்சள் வர்ண புகை வெளிக்கிளம்பியது. இதில் உறுப்பினர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

    எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்த போதிலும், வேறு சில உறுப்பினர்கள் துணிச்சலுடன் அந்த மர்ம நபர்கள் இருவரையும் நெருங்கி, வளைத்து பிடித்து, அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதே நேரம் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கோஷங்களை எழுப்பி கொண்டே வர்ண புகை குண்டை வீசினர். அவர்களும் காவல்துறையினரால் உடனே கைது செய்யப்பட்டனர்.

    பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    2001 தாக்குதல் நடந்து 22 வருடங்கள் ஆன அதே தினத்தில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய கட்டிடம் என சொல்லப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் சுலபமாக அத்துமீறி இத்தகைய தாக்குதலில் சிலர் ஈடுபட முடிந்தது அரசியல் தலைவர்களை மட்டுமின்றி அனைத்து இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்களிலும், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் மக்களவை உறுப்பினர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதாக கருதும் அளவிற்கு நடைபெற்ற இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து இதுவரை பிரதமர்  மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தொலைக்காட்சியிலோ, சமூக வலைதளங்களிலோ அல்லது தங்கள் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கிலோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசியதில் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் கிடைத்தது.
    • இதுவரை இந்தத் தாக்குதலில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர்.

    இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,

    தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.

    பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் மேலும் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    • பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.
    • தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரிடம் இருந்து பா.ஜ.க. எம்.பி.யின் பரிந்துரை பாஸ் கிடைத்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர்.

    இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,

    தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரும் பாஸ் பெற்று உள்ளே நுழைந்துள்ளனர்
    • புது டெல்லியில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

    மக்களவையில் இன்று மதியம், சபை நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென கீழே குதித்த இருவர் கோஷமிட்டு கொண்டே சபாநாயகரை நோக்கி சென்றனர். அவர்கள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த புகை குண்டுகளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிப்பட்டது.

    இச்சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வேறு சில உறுப்பினர்கள் அந்த இருவரையும் துணிந்து மடக்கி பிடித்து அங்கு விரைந்து வந்த சபை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் நடந்த அதே நேரம் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷமிட்டபடி புகை குண்டுகளை வீசினர். அவர்களும் காவல்துறையால் பிடிக்கப்பட்டனர். நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் புது டெல்லி துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

    மக்களவையின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்ற, சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் எனப்படும் இரு நபர்களும் பார்வையாளர்களாக உள்ளே சென்று சபை நடவடிக்கைகளை காண, எம்.பி.க்களின் பரிந்துரையில் வழங்கப்படும் "பாஸ்" (அனுமதிச்சீட்டுக்களை) பெற்றிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து பார்வையாளர்களுக்கான பாஸ் வழங்குதலை நிறுத்தவும் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட புது டெல்லியில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • சில எம்.பி.க்கள் அந்த இருவரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்
    • நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு முழு விசாரணை நடந்து வருகிறது என்றார் ஓம் பிர்லா

    மக்களவையில் இன்று அலுவலகள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவைக்குள் இருவர் குதித்தனர். கோஷமிட்டு கொண்டே சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செல்ல முயன்ற அவர்கள் புகை குண்டுகளை போன்று எதையோ வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியது.

    இச்சம்பவத்தில் ஒரு சில எம்.பி.க்கள் அச்சத்துடன் ஓட முயன்றனர்.

    ஆனால், ஒரு சில எம்.பிக்கள் அஞ்சாமல் அவர்களை பிடித்து சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    அதே நேரம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷங்களை எழுப்பி கொண்டே "கலர்" புகை குண்டுகளை வீசினர்.

    நால்வரும் காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படும் இச்சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்தார்.

    "பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் நடந்திருக்கும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து முழு விசாரணை நடக்கிறது. இன்று அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அனைவரிடமும் இது குறித்து கருத்து கேட்கப்படும். டெல்லி காவல்துறையும் மக்களவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது. மர்ம நபர்கள் குண்டுகளை வீசி அதிலிருந்து வெளியே வந்த வர்ண புகை ஆபத்தில்லாதது என தெரிய வந்துள்ளது. பரபரப்புக்காக அவர்கள் இதை வீசியுள்ளதாக தெரிகிறது" என ஓம் பிர்லா கூறினார்.

    • இரண்டு நபர்களும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்
    • முதலில் எவரோ தவறி விழுந்ததாக நினைத்தோம் என அகர்வால் தெரிவித்தார்

    மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் அவையின் மத்தியில் குதித்து ஓடினர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டு இருந்தது. கோஷமிட்டு கொண்டே சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் அதை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை எழும்பியது.

    இச்சம்பவத்தால் சில உறுப்பினர்கள் அச்சத்துடன் அங்குமிங்கும் ஓடினர். சில நொடிகளில் அந்த இருவரும் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    பெரும் பாதுகாப்பு குளறுபடியாக விமர்சிக்கப்படும் இந்த சம்பவம் குறித்து அவை தலைவராக இன்று இருந்த பா.ஜ.க. எம்.பி. ராஜேந்திர அகர்வால் தெரிவித்ததாவது:

    பாதுகாப்பு குளறுபடிகள் கண்டிப்பாக இருக்கிறது. முதல் நபர் இறங்கி ஓடி வந்த போது எவரோ தவறி விழுந்ததாக கருதப்பட்டது. இரண்டாவதாக ஒருவர் வந்ததும் நாங்கள் அனைவரும் எச்சரிக்கையடைந்தோம். ஒரு நபர் தனது காலணியை கழற்ற முற்பட்டது போல் இருந்தது. அதிலிருந்து எதனையோ எடுத்தார். உடனே புகை வெளிக்கிளம்பியது. நிச்சயம் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகரும் இதற்கான பொறுப்பில் உள்ளவர்களும் இது குறித்து முடிவு எடுப்பார்கள். இது நடக்கும் போதே ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்து வந்து விட்டார்.

    இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.


    ×