என் மலர்
நீங்கள் தேடியது "செல்லூர் ராஜூ"
- விண்ணப்பங்களை கொடுக்காமலேயே தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
- விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இதுவரை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவோம் என்று கூறினார்கள், மூன்று முறை வீட்டு கதவை தட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதன் காரணமாக வாக்காளர்களுக்குரிய விண்ணப்பபடிவங்கள் அவர்களை சென்று சேரவில்லை. மேலும், விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் குறைந்த அளவிலேயே, அதாவது 40 சதவீதத்திற்கு உள்ளேயே தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுக்குரிய வாக்காளர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்களை கொடுக்காமலேயே இப்படி தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.
ஆனால் கலெக்டர் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் அப்படி ஏதாவது விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு மேல் அதற்குரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறார். அது எப்படி முடியும் அது முடிகிற காரியமா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க. இந்த வாக்காளர் விண்ணப்ப படிவத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். அவர்களுடைய தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அப்போது அந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேர்தல் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு அனைத்து வாக்காளர்களிடம் அவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். இல்லாவிட்டால் அதில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனையும் மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது.
- அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க. 54ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
31 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், சாமானியர்களுக்கும் பட்டியல் இனத்தவர்க்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க.
மகளிருக்கும் சம உரிமை கொடுத்து, திறமைக்கேற்ப பதவிக் கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க. ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கம் பிரிவது சகஜம். ஆனால் தி.மு.க.வில் பிரிந்த அ.தி.மு.க. இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறது.
எங்கள் பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் சொல்கிறார்.
வைகை கரையில் சாலைகள் அமைத்து அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைப் படைத்தோம். தி.மு.க. ஆட்சியில் கலைஞர் நூலகம், ஏறு தழுவுதல் அரங்கம் இதை தான் சாதனையாக மதுரைக்குச் சொல்கிறார்கள்.
170 கோடியில் கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்தின் திட்டத்தை வடிவமைத்தது அ.தி.மு.க. அரசு. அதனை விரைவுப்படுத்த முடியாமல், தி.மு.க. ஆட்சியில் பாலப்பணி இன்னும் நிறைவடையவில்லை.
மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு போராடி, 200 கோடி மாநகராட்சி சொத்து வரி ஊழலை வெளிக்கொண்டு வந்தோம். கல்யாண மண்டபங்களுக்கும் வீடுகளுக்கான சொத்து வரியை விதித்து ஊழல் செய்தது தி.மு.க.
இன்று ஊழல் வழக்கில் மேயர் இந்திராணி ராஜினாமா வரை சென்றுள்ள அவலம் மதுரை மாநகராட்சியில் நடந்து இருக்கிறது. இந்த புகாரில் மேயர் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேயர் ராஜினமா செய்து இரண்டு வாரமாகியும் மதுரையில் புது மேயரை நியமிக்க இயலாமல் திணறுகிறது தி.மு.க. 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர் ராஜினமா செய்து 2 மாதங்களாகி விட்டது. 69 தி.மு.க. கவுன்சிலர்கள் இருந்தும், தி.மு.க.வால் ஒரு மேயரைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை.
இரண்டு அமைச்சர்கள் இருந்தும், மதுரைக்கு மேயரைத் தேர்ந்து எடுக்க துப்பு இல்லாத கட்சியாக தி.மு.க.. இருக்கிறது. பேசாமல் மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டுச் செல்லுங்கள்.
தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாங்கள் கூட்டணிக்காக அலையவில்லை. அ.தி.மு.க. எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை.
எங்கள் கொள்கையோடு எங்களுக்கு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம்.
அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை. நண்பன் என்றால் நண்பன். நண்பனுக்கு உயிரையும் தோளையும் கொடுப்போம்.
ஆனால் அதே தோழன் காதை கடித்தால் தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம். இது தான் அ.தி.மு.க. வரலாறு. இது புரிந்தவர்களுக்கு புரியட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டன.
- சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி?
மதுரை:
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த மனவேதனையையும், வயிற்றெரிச்சல், ஐயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலைப் பொறுத்தவரை அவர் புதுமுகம். அதனால் அவரை ஆளாளுக்கு விமர்சனம் செய்யக்கூடாது. ஏற்கனவே கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டன.
கரூரில் த.வெ.க.வினர் கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. 10 ஆயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர் திரண்டதால் தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, இது வருத்தமாக உள்ளது.
எனவே த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டந்தோறும் பஸ்சில் செல்லாமல் ஒவ்வொரு தொகுதி வாரியாக செல்ல வேண்டும்.
கரூர் சம்பவத்தில் அப்பாவி பெண்களும், குழந்தைகளும் மரணம் அடைந்த துயரத்தில் இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு அரசியல் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இத்தனை உயிர்களை காவு கொடுத்த நிகழ்வுக்கு யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது.
கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய அனுமதி கேட்டபோது, அந்த இடத்தில் நெரிசல் ஏற்படும் என போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் அனுமதி கொடுத்தனர். அது போல த.வெ.க.வினர் கேட்டபோது அந்த இடத்தில் அனுமதியை மறுத்து வேறு அகலமான இடத்தை அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போலீசார் அப்படி செய்யவில்லை. மேலும் விஜய் காலதாமதமாக அந்த பகுதிக்கு வந்துள்ளார். அவரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி?
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை.
- ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
மதுரை:
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரம் காளியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். தி.மு.க. அமைச்சர்கள் டிபன் பாக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள். பத்திரபதிவுத்துறை அமைச்சரின் தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்களை எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களது ஆட்சியிலே கொண்டு வந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
புதிதாக மண்டல தலைவர் யாராக இருந்தாலும் மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் சரி. முன்னால் இருந்தவர்கள் ரூ.250 கோடியை சுவாகா செய்து விட்டார்கள்.
பொற்கைப் பாண்டியன் வாழ்ந்த மதுரையில் மன்னராட்சி நடக்கிறது. ஒரு திருடனும் வரமாட்டான். குற்றம் செய்தவர்களே மாமன்றத்தை நடத்துவது சரியா?.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. விஜயினால் படம் தான் காட்ட முடியும். புயல் மையம் கொண்டுள்ளது என சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.
பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
கலைஞர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்வதில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சி தான் வேண்டும் என அ.தி.மு.க. பற்றிதான் பேசுகிறார்களே தவிர தி.மு.க. பற்றி பேசுவதில்லை. எடப்பாடியார் பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.வு க்கு வெற்றி எளிது என உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.
- நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
- நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி மதுரை வருகிறார். அவரை வரவேற்க மதுரை மக்கள் தயாராக இருக்கிறார்கள். மதுரையில் தி.மு.க. ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருகிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் பணியா? என்று பொதுமக்களே கேவலமாக பேசுகிறார்கள். இன்னொரு அமைச்சர் தனது பதவி இறக்கப்பட்டதால் சைலண்ட் ஆகிவிட்டார். அவர் வருகிற தேர்தலில் நிற்பாரா? நிற்க மாட்டாரா? என்பது தெரியவில்லை. உங்க பொங்க சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் 2 அமைச்சர்கள் கலந்து கொள்வதை கூட மக்கள் அசிங்கமாக பார்க்கிறார்கள். மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடுகள் நடந்துள்ளதை ஏன் அமைச்சர்கள் கண்காணிக்கவில்லை. மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி அமைச்சர்கள் இரண்டு பேரும் மாநகராட்சியை கண்காணித்து இருந்தால் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள சொத்துவரி முறைகேடுகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேருமே காரணம்.
மாநகராட்சியில் நிழல் மேயராக மேயரின் கணவர் இருந்தார். அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மேயர் இன்னும் பதவி விலகவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நேர்மையான விசாரணை நடக்கும். ஆனால் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு சம்பந்தமில்லாத நபர்களை விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அழைக்கிறார்கள், இது ஏற்கத்தக்கது அல்ல. மதுரை மாநகராட்சி மேயர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பாகும். அடுத்து வரும் மாநகராட்சி கூட்டங்களில் மேயர் கலந்துகொண் டால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள். மதுரை மேயர் பதவியில் நீடித்தால் தி.மு.க.வுக்கு தொடர்ந்து கெட்ட பெயர் மக்கள் மத்தியில் ஏற்படும்.
அமைச்சர் மூர்த்தி இன்னும் 6 மாதத்திற்கு பிறகு எங்கு இருப்பார் என்று தெரியாது. அநேகமாக நார்வே, சுவீடன் போன்ற நாடுகளுக்கு அவர் சென்று விட வாய்ப்பு இருக்கும். மத்திய, மாநில நிதியை கொண்டு சாலைகள் போடுவது சாதனை இல்லை. நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
40 ஆண்டு காலமாக நிறையாத தெப்பக்குளத்தை வைகை தண்ணீர் மூலம் நிரப்பினோம். ஆனால் இப்போது அந்த தடுப்பணையில் உள்ள ஒரு செட்டர் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்துள்ளது, இதுவே ஒரு முறைகேடாகும். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை அவர்கள் சொல்ல முடியுமா?
முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் பகுதியில் இந்த தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனை குடித்த பெண்கள் இளநீர் போல தண்ணீர் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தண்ணீரை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. தாகம் தீர்த்த அவரை வரவேற்க மதுரை மக்களே தயாராக இருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதை மாறி சென்று விட்டார். திசை தெரியாத காட்டுக்குள் சென்று விட்டு வழி தெரியாமல் தவிப்பது போல தவித்து வருகிறார். வேறு எதுவும் அவரைப் பற்றி சொல்வதற்கு இல்லை. அ.தி.மு.க. எப்பொழுதும் தனது கொள்கையிலிருந்து எள்ளளவும் விலகாது. அது திருமாவளவனுக்கும் தெரியும். கொள்கைகளை கடைபிடிப்பதில் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி.
- கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.
மதுரை:
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று சொல்லுகிறார்கள். இதுபோன்ற மக்களின் எழுச்சி எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது சுற்றுப்பயணத்திலும் பார்க்க முடிந்தது. அது போன்ற கூட்டம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் திரளாக வருவதை பார்க்கும் போது அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.
இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு எட்டு மாதங்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் பெரிய பெரிய கட்சிகள் யாரும் எதிர்பார்க்காத கட்சிகள் வரும் என்று பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். எனவே கூட்டணி முக்கியமல்ல, மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது உணர்வுகளை வாக்குகளாக மாற்றுவதற்காக மிகச்சிறப்பான முறையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வேறு எந்த இயக்கத்திலும் இதுபோல பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை.
எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சீட் பேரம், தொகுதி பேரம் எல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாட்டில் கூட கூட்டணி பிரியும். எனவே கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.
1967-ல் பேரறிஞர் அண்ணா யாரும் எதிர்பாராத வகையில் கொள்கையில் முரண்பட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தார். எனவே கூட்டணியை விட மக்களின் ஆதரவு முக்கியம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் உங்களை எல்லாம் வழி நடத்தியவர் ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மூன்று முறை சந்தித்துள்ளார். அவரை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா? என்று ஒரு நிருபர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி கேட்டார். அப்போது ஆவேசம் அடைந்த செல்லூர் ராஜூ, ஒரு தலைவரைப் பற்றி பாவமா இல்லையா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவறானதாகும். அவர் மூன்று முறை அல்லது நான்கு முறை யாரையாவது சந்திக்கட்டும். அது பற்றி எல்லாம் இப்போது பேசுவதற்கு இல்லை என்று காட்டமாக பதில் அளித்தார்.
- தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.
- எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.
மதுரை:
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம். 241 பேர் பலியான சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணிஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா? என்பது குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பேசியதும், தேர்தல் கூட்டணி குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்.
ஒரு முன்னாள் முதலமைச்சரை தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கக்கூடியது.
தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார். மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அ.தி.மு.க. ஆட்சியின் பல்வேறு திட்டங்களும், 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார்.
அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகள் செய்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும். மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் தி.மு.க. அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சொகுசு காரில் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.
- ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது சகஜம் தானே, மதுரையில் முதல்வர் வருகைக்காக 3 மணி நேர போக்குவரத்து தடை செய்தார்கள். நடந்து செல்பவர்கள் கூட முதல்வரை காண வரவில்லை. 10 தொகுதியில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறுகிறார். வாயில் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் மக்கள் நினைக்க வேண்டுமே?
மக்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். முதல்வர் ரோடு-ஷோ இன்னொரு சித்திரை திருவிழாவாக மாறியிருக்கும். ரோடு-ஷோவிற்கு செயற்கையாக மக்கள் கூட்டப்பட்ட கூட்டம், தானா சேர்ந்த கூட்டம் அல்ல. மக்களுக்கான திட்டத்தை கொடுங்கள். திட்டங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க நான் தயார்.
முதல்வர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார். அவர் சென்னை கூவம் கால்வாயை பார்த்ததே இல்லையா? மதுரக்காரர்கள் எதை செய்தாலும் சற்று வித்தியாசமாக செய்கிறார்கள். மதுரையில சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதில் தான் நாம் நடந்து செல்கிறோம். நடந்து சென்றால் கூட வரி விதிக்கும் அளவுக்கு வரி மேல் வரி போடுகிறார்கள். சொகுசு காரில் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.
பந்தல்குடி கால்வாயை பொருத்தவரை ஒருபுறம் இஸ்லாமியர்களும், மற்றொருபுறம் பட்டியலின மக்களும் வாழ்கிறார்கள். இந்த கால்வாயில் திரை அமைத்தது குறித்து நான் விமர்சனம் செய்தேன். என்னை தி.மு.க.வினர் விமர்சனம் செய்தார்கள். தெர்மாகோல் விஞ்ஞானியே நீ என்ன செய்தாய் என குறிப்பிட்டிருந்தார்கள். எங்க காலத்தில் சாக்கடை நீரை உறிஞ்சி சுத்தம் செய்வதற்கு இரண்டரை கோடி மதிப்பீட்டில் மறுசுழற்சி செய்து சாக்கடை நீர் தேங்காத அளவிற்கு மழைநீர் மட்டும் செல்வதற்கு வழிவகை செய்து கழிவுநீர் வைகையில் கலக்காமல் செய்தோம்.
ஆட்சி மாற்றம் ஆன பிறகு மேம்பாலம் கட்டுவதற்காக இரண்டரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மறுசுழற்சி திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பந்தல்குடி கால்வாய் சாக்கடையை பார்த்து விடக்கூடாது என திரைசீலைகள் அமைக்கப்பட்டது. முதல்வர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அலங்கார தோரணம் கட்டினார்கள். இதைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி நாங்கள் பல வருடமாக இங்கேதான் வாழ்கிறோம் என சண்டை போட்ட பிறகு அகற்றினார்கள்.
திரைச்சீலைகள் அமைக்கப்பட்டதற்கு மாவட்ட கலெக்டர் ஒரு விளக்கம் கொடுத்தார். யார் கட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார். இது மாதிரியான ஒரு மாவட்ட கலெக்டரை நான் பார்த்ததே இல்லை. எதிர்க்கட்சி என்றால் பேசத்தானே செய்வார்கள்.
ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது. அதற்கான ஒரு சான்று, மதுரையில் பொதுக்குழு கூட்டினால் எப்பவும் வந்ததில்லை. கலைஞர் இருந்தபோதும் வந்ததில்லை. தி.மு.க.வில் தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தவரை ஆட்சிக்கு வந்தார்கள். தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே இல்லை.
மதுரையில் தி.மு.க.பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. 1977-ல் நடந்த பொதுக்குழு அதன் பிறகு 12 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி தான் வந்தது. தி.மு.க.விற்கு வனவாசம் தான். இதனால் தான் மதுரைக்காரர்கள் என்றாலே தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. யாரோ சொல்லி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பை வாங்கியதாக மாவட்ட கலெக்டர் முதல் முதல்வர் வரை ஏமாற்றியது போல பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் பொதுக்குழுவில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் இருப்பதை நேற்றுதான் நான் பார்த்தேன். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட தி.மு.க. இனிமேல் 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. முதல்வர் ஏதோ அ.தி.மு.க. பொதுச்செயலாளரை திட்டுகிறார். திட்டதிட்ட திண்டுக்கல் நாங்க. எங்க பொதுச்செயலாளர் அவ்வளவு பவர்புல்லாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தல்லாகுளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான விழா நடைபெற்றது.
- நன்றி, வணக்கம் எனக்கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார்.
தல்லாகுளம்:
மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், இது பீருக்காக வந்த கூட்டம் இல்லை. ரத்தம் கொடுப்பதற்காக வந்த கூட்டம் என்றார்.
இதனிடையே, பா.ம.க.வில் உள்ள பிரச்சனைகள் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நன்றி, வணக்கம் எனக்கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார்.
கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய. இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க.வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.
- நாங்கள் யாரும் ஒரு போதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், கடந்த 4 ஆண்டுகள் ரகுபதி, முட்டுக்கொடுத்து கொடுத்து அ.தி.மு.க. தொண்டர்களிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போதுதான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் விதமாக, அமைச்சர் இலாகா கொடுத்துள்ளார் முதலமைச்சர். அந்த உற்சாகத்தில் பலத்த முட்டுகளுடன் நேற்று, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
யார் இந்த ரகுபதி? இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா கை காட்டவில்லை என்றால், அ.தி.மு.க. தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இவர் எங்கு இருந்திருப்பார்? இவருக்கு அரசியல் வாழ்வளித்த அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியை விடக் கேவலமானவர் தானே இந்த ரகுபதி?
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உத்தரவிட்டார் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கும் தி.மு.க.-வுக்கும் சம்மந்தமே இல்லை என்று பச்சைப் பொய் பேசியவர் தானே இந்த ரகுபதி? இந்த ரகுபதியின் பொய்யால் சட்டப் பேரவையில் ஸ்டாலினே, ஞானசேகரன் தி.மு.க. பொறுப்பாளர் அல்ல, அனுதாபி என உருட்ட வேண்டிய நிலைக்குத் தானே தள்ளப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் எப்.ஐ.ஆர். லீக் ஆனதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலின் அரசின் நடவடிக்கைகளை காரித் துப்பியதே, இதெல்லாம் மறந்துபோச்சா ரகுபதி? உங்கள் முதலமைச்சரை போன்றே, உங்களுக்கும் ஞாபக மறதியா?
கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து, சார்ஜ் சீட் போட்டது அ.தி.மு.க. அரசு. கேரளா குற்றவாளிகளுக்கு வாதாடி ஜாமின்தாரராக இருந்தது தி.மு.க.வினர்.
கொடநாடு வழக்கை விரைவில் முடியுங்கள் என்று தானே, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்? நான்கு ஆண்டுகளாக கொடநாடு வழக்கை விசாரித்து முடிக்க வக்கில்லாத ரகுபதிக்கு இது ஏன் புரியவில்லை?
முக்கி முக்கி வராத நிதி, எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசியதும் வந்துவிட்டது என்ற கடுப்பு இருக்கத் தானே செய்யும்?
அ.தி.மு.க.வால் அரசியல் அடையாளம் பெற்று, அ.தி.மு.க.வில் கொள்ளையடிப்பவர்களுக்கு இடமில்லை என்று தெரிந்ததும், தி.மு.க.வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.
மக்களோடு மக்களாக நின்று, மக்களுக்கான அரசியலைச் செய்யும், எடப்பாடி பழனிசாமி மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
நாங்கள் யாரும் ஒரு போதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.
1991-ல் சட்டமன்ற உறுப்பினரானபோது ரகுபதியின் சொத்து மதிப்பு என்ன? அதே ரகுபதியின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? பினாமி பெயர்களில் எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? இப்படி எண்ணிலடங்கா சொத்துக்களை வாரிக் குவித்த ரகுபதி தான், நாளை காலை ரெய்டு வந்துவிடுமோ? என்ற பயத்திலேயே தினந்தோறும் இரவுகளைக் கழிக்க வேண்டும்.
அறிவாலயத்தில், மேலே ரெய்டுக்கு பயந்து, கீழே கட்சியை காங்கிரசுக்கு அடமானம் வைத்த கொத்தடிமைகள், மாநில உரிமைகள் பற்றி பாடமெடுக்க துளியும் தகுதியற்றவர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க?
- சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தன.
இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
அப்போது, பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள்? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் எனவும் அவர்கள் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள்.
- போதைப்பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க.வினர் தான்.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அதி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
அதிகார வர்க்கத்திலிருந்து தொழிலாளர்களை காப்பதற்காக வேலை நேரத்தை 8 மணி நேரமாக உருவாக்கி, தொழிலாளர் நலன் காக்க இந்த மே தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் அதி.மு.க. சார்பில் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் தான் மே தினத்தை நமது முன்னோர்கள் கொண்டாடினர். உழைக்கும் வர்க்கத்தை மேற்கோள் காட்ட மெரினாவில் சிலை வைத்தனர்.
விடியல் தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் 5 சதவீத சம்பள உயர்வு தான் கொடுத்து உள்ளனர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை அறிவித்து வாயில் தான் வடை சுடுகிறார் .
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மட்டும் தான் 234 தொகுதியிலும் ஜெயிப்போம் என கூறிவருகிறாரே தவிர மக்களை நினைக்கவில்லை.
பா.ஜ.க.வுடன் அதி.மு.க. கூட்டணி வைத்தால் மட்டும் மு.க.ஸ்டாலின் கொதித்து பேசுகிறார். நீங்க கூட்டணி வைத்தால் மட்டும் இனிக்கும். கூடாநட்பு கேடில் முடியும் என உங்கள் அப்பாவே காங்கிரஸ் கட்சி குறித்து பேசியுள்ளார். பிறகு ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தீர்கள்.
தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும் கூட்டணியில் உள்ள மார்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை மக்களுக்கு ஆதரவாகவும், ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறதா? தி.மு.க.வுக்கு ஆதரவாகத்தான் கம்யூனிஸ்டு கட்சிகள் செயல்படுகிறது. தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்கிறேன் என கூறி ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதாக போராட்டம் நடத்தி வரு கின்றனர்.
தி.மு.க. தலைமையிலான அமைச்சரவை ஜாமின் பெற்ற அமைச்சரவை. அமைச்சர்கள் முழுவதும் வாய்தாவுக்கு சென்று வருகிறார்கள். தி.மு.க. அமைச்சர்களை பொறுத்த வரையில் கலெக்ஷன், கரப்சன் தான். அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை இழிந்து பேசுவதும், தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலரை அவமரியாதை செய்வதும், பெண்களை ஓசி என கூறியதற்கு இன்றைக்கு எங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார்.
பாரத பிரதமரே இந்திய முதல்வர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.
போதைப் பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க.வினர் தான். குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் தமிழக காவல்துறை இருந்து வருகிறது. உண்மையான விடுதலை, விடியலை வரும் 2026-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






